search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaala"

    ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் காலா படத்தின் கனெக்‌ஷனை அடுத்த படத்திலும் பின் பற்ற இருக்கிறார்கள். #Rajini #Kaala
    ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதில் ரஜினி, கரிகாலன் என்கிற காலாவாக நடித்திருந்தார். தன் கையில் சரீனா என்ற முன்னாள் காதலி பெயரை பச்சை குத்தி இருப்பார். காதலி பிரிந்த பின்னாலும் கூட அதை அழிக்காமலேயே சரீனா நினைவிலேயே வாழும் கதாபாத்திரத்தில் தோன்றினார். 

    காலா படம் வெளியாகும் சமயம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினி. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் அந்த படத்திலும் கையில் பச்சையுடன் தோன்றுவது தெரிய வந்து இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ரஜினியின் புகைப்படம் ஒன்றில் புது பட கெட்டப்பில் ஒரு டீ சர்ட் அணிந்து கையில் காப்பு அணிந்திருக்கிறார். ஏதோ ஒரு பெயரை பச்சையும் குத்தியும் இருக்கிறார். 



    காலாவில் கையின் உள்பக்கமாக பச்சை குத்தி இருந்தவர் இதில் அதே வலது கையில் பின்பக்கமாக பச்சை குத்தி இருக்கிறார். ரஜினி இதற்கு முன் ‘முத்து’ படத்திலும் கையில் காப்புடன் நடித்து இருந்தார். அந்த காப்பு மணிக்கட்டு அருகில் காணப்படும். அதை வைத்து சண்டை இடுவார். ஆனால் இந்த படத்தில் காப்பு முழங்கைக்கு மேலே இருக்கிறது.
    ரஜினி நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் கதைக்கும், காலா படத்தின் கதைக்கும் கனெக்‌ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram
    நேற்று முன் தினம் வெளியான காலா திரைப்படத்தில் ராமருக்கும் ராவணனுக்குமான போர் ஒரு குறியீடாக சேர்க்கப்பட்டிருந்தது. ராமனை ராவணன் வெல்வது போல காட்டப்பட்டது.

    விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி2 படமும் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டுதான் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. முந்தைய பாகத்து ஆறுசாமியின் மகன் ராமசாமியாக விக்ரம் வருகிறார்.

    அவருக்கு எதிரிகளாக முந்தைய பாகத்துக்கு பெருமாள் பிச்சையின் மகன்களான ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை, மகேந்திர பிச்சை ஆகியோர் வருகின்றனர். தனது தந்தை ஆறுசாமியை கொன்ற இந்த மூவரையும் மகன் ராமசாமி பழிவாங்குவதே படத்தின் கதை.



    அம்மா வேடம் என்பதாலும் சில நிமிடங்களே வரும் தோற்றம் என்பதாலும் தான் திரிஷா, சாமி-2 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். திரிஷா கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். எனவே அம்மா வேடத்தில் நடித்தால், தனது மார்க்கெட் இறங்குமே என்று யோசித்திருக்கிறாராம். 

    சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் டீசருக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram

    காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப் தார் மாடலை அருங்காட்சியகத்தில் வைக்க மஹேந்திரா முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா நிறுவனத்தின் தார் ஆஃப் ரோடர் மாடலுக்கு காலா திரைப்படம் சிறப்பான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் காரினை மஹேந்திரா நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. 

    இதற்கென ரஜினிகாந்த் பயன்படுத்திய காரினை மஹேந்திரா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை ஆனந்த் மஹேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினி மஹேந்திரா தார் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தினசரி நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளது.



    மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் ஜீப் DI மற்றும் CRDe என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் DI வேரியன்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் என பொருள்படுகிறது, இந்த மாடல் ஊரகம் மற்றும் ஊராட்சி சார்ந்த நகர பகுதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதனை மக்கள் பயன்பாடு, விவசாய பணிகள் மற்றும் பொது பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றதாக இருக்கிறது.

    தார் ஆஃப் ரோடர் DI வேரியன்ட் 8 பேர் அமரக்கூடியதாகும். இந்த ஜீப் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் M2DICR டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 63 பிஹெச்பி பவர், 180 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதில் பவர் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    மஹேந்திரா தார் DI மாடலில் ரியர் வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் அனைத்து வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.



    தார் CRDe வேரியன்ட் நகரவாசிகளுக்கு ஏற்ற வகையில், கிளாசிக் தோற்றம் கொண்ட ஜீப் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையிலான இன்டீரியர், சீட் மற்றும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கபக்பட்டுள்ளது. இந்த மாடலில் 4-வீல் டிரைவ் ஸ்டேன்டர்டு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    இத்துடன் CRDe மாடலில் ஏசி வசதி, பவர் ஸ்டீரிங் உள்ளிட்டவை ஸ்டேன்டர்டு ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது இதன் 2.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் 105 பிஹெச்பி பவர், 247 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8-பேர் அமரக்கூடிய சீட்டிங், DI வேரியன்ட்-ஐ விட சிறப்பான இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. 

    தலைசிறந்த அம்சங்களை போன்றே மஹேந்திரா தார் CRDe வேரியன்ட் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹீரோ என்று புகழ்கின்றனர். #Kaala #NanaPatekar
    காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர்.

    சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன.

    ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.



    முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர். #Kaala #NanaPatekar

    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    உலக கடல் தினம் மீன்வளத்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இன்று உலக பொம்மைகள் தினம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உலகமே ஒரு நாடகமேடை. இதில் அனைவரும் பொம்மைகள். மனிதர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் சமுதாயத்திற்கு படைப்பாளிகளாக இருக்க வேண்டும்.

    கடல் தூய்மை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே போதும். மக்கள் மனதில் மாற்றம் தேவை. அதே போல் அனைத்து துறைமுகங்களிலும் சுத்தமாக இருப்பது குறித்து போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலில் பிளாஸ்டிக் கலக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கனிமொழிக்கு காற்று தான் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் அவர் 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்.


    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது. ஒரு தலைவரை ஏற்றுக் கொள்வது என்பது அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி மற்றும் கொள்கைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

    மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மக்கள் அப்படித்தான் ஏற்றுக் கொண்டனர். மத்திய மந்திரியாக இருந்து கொண்டு பொன்.ராதா கிருஷ்ணன் கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவர் மத்திய அமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சாதாரண மனிதர் போல தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

    படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 



    அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

    இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

    காலா படத்தை திரையிட விடாமல் தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும் என்று தஞ்சையில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார். #BJP #LaGanesan #Kaala
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    இளைஞர்கள் சமுதாயம் ஆண்டவன் தந்த உயிரை தாங்களே மாய்த்து கொள்ள உரிமை கிடைக்காது. எந்த காரியத்திலும் இறுதிவரை போராட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். எந்த பிரச்சனை என்றாலும் அதனை எதிர்கொண்டு தைரியமாக போராட வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. போராட சென்றவர்களும், போராட்ட குழுவை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டம் நடந்த வழியில் சென்றவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்துக்கு அரசு உதவ வேண்டும். போராட்டத்தை தூண்டி விட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தை வெளியிட காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுக்கின்றனர். கலை பிரிவினர் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டக் கூடாது. காலா படத்தை திரையிட விடாமல் தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும்.

    வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #Kaala
    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காலா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் படத்திற்கு ஆதரவு பெருகியிருக்கிறது. #Kaala #Rajinikanth
    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது.

    ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார்.

    ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் வெளியாகும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

    சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அதிகமான போராட்டக் காட்சிகள் இருப்பதாக செய்தி வந்தது பரபரப்பை கூட்டியது.

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.



    தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாத அம்பேத்கர் சிலை, புத்தர் மண்டபம் என்று ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடுகளை பல இடங்களில் வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான அடித்தட்டு மக்களின் நில உரிமையை ரஜினியை வைத்து பேசி இருக்கிறார்.

    எனவே எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வழக்கமான ரஜினி படங்களை காட்டிலும் இது குறைவு தான்.

    எனினும், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. 

    இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.

    ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

    ரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.



    ‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.

    இந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். #Kaala #Rajinikanth

    ரஜினியின் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தியேட்டருக்கு வந்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini #Rajinikanth
    ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 

    இப்படத்தில் ரஜினி படம் முழுக்க கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தே வருகிறார். மும்பை தாதாவான அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ரஜினியின் காலா தோற்றத்திலேயே தியேட்டர்களுக்கு வந்திருந்தனர்.



    கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து தியேட்டர்களில் அவர்கள் தெறிக்க விட்டனர். இதனால் தியேட்டர்களில் திரும்பிய திசையெல்லாம் கருப்பு வண்ணமாகவே காணப்பட்டது. இப்படி காலா உடையில் வந்த ரசிகர்கள் பலர் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த ‘‘காலா ரஜினி’’ கட்அவுட்டுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
    ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க சென்ற இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்க வில்லை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ranjith #Rajini
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.

    ரசிகர்களின் உற்சாகத்தில் திகைத்துப் போன இயக்குனர் ரஞ்சித், இப்படம் குறித்து கூறும்போது, ‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.
    ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் ‘காலா’ படத்தை கர்நாடகா திரையரங்குகளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். #Kaala #Rajini
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.  இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், ஹீமா குரேஷி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின்னர் வெளியாகும் படம் என்பதனால் ரசிகர்களிடையே பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் காலையிலேயே திரையரங்குகள் முன் ரசிகர்கள் குவிந்தனர்.

    காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்கும்படி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்தது.

    எனினும், காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காலா படம் உலகெங்கிலும் இன்று வெளியானது.



    இதேவேளையில், கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து திரும்பி செல்ல செய்தனர்.
    ×