search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saamy Square"

    நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று படங்களிலுமே அவரது கதாபாத்திரம் பேசும்படியாக இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறாராம். #KeerthySuresh
    கீர்த்தி சுரேசின் சினிமா வாழ்க்கை நடிகையர் திலகம் படத்துக்கு பின் மாறிவிட்டது. அவர் நடிக்கும் படங்களுக்கும் தேர்ந்தெடுக்கும் வேடங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அந்த எதிர்பார்ப்பை அதன் பிறகு வந்த படங்கள் பூர்த்தி செய்யவில்லை. சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சாமி 2 சரியாக போகவில்லை. மற்ற 2 படங்களிலும் வரலட்சுமியே பிரதானமாக இருந்தார். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சில காட்சிகளே இடம்பெற்றன. இதனால் இனி பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறாராம். 

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்தால் காணாமல் போய்விடுவோம். எனவே பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க வேண்டும். அப்படி நடிக்கும் படங்களின் கதையை கவனமாக கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். கதை கேட்கும்போதே இந்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இடம் பெற வேண்டும் என்று உறுதி வாங்கிக்கொள்கிறார். #KeerthySuresh

    ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், துரைசிங்கமான சூர்யாவும், ஆறுச்சாமியான விக்ரமும் ஒரே படத்தில் இணைவது குறித்து ஹரி விளக்கம் அளித்துள்ளார். #Hari #SaamySquare
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஹரி அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து,

    ஒரு பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பது எளிதில்லையே?

    ஒரு படத்தோட அடுத்தடுத்த பாகங்களை இயக்க வேண்டுமே என்று இறங்கிவிட்டு, பின்னர் யோசித்தால் அது கஷ்டம் தான். ஆனால் கதை இருக்கும் போது, அந்த கதையுடன் பயணிக்க வேண்டி இருந்தால் பயம் தேவையில்லை. வேலை பளு, வேலைக்காக மெனக்கிட வேண்டிய பரபரப்பு தான் இருக்கும். இந்த படம் வரை போலீஸ் ஸ்கிரிப்ட் எனக்கு திருப்தி தான். ஒருவேளை அடுத்த படம் பண்ணும் போது எனக்கு அந்த பயம் வரலாம்.

    சாமி ஸ்கொயர் வெறும் போலீஸ் கதையாக மட்டும் இருக்காது. என்னுடைய படங்களில் என்னென்ன இருக்குமோ, அதை கொடுத்திருக்கிறேன். அதில் எந்த குறையும் இருக்காது. ஒரு புல்மீல்ஸ் சாப்பிடுவது போல் தான் இருக்கும். 

    குடும்பம் சார்ந்த படங்களாக எடுப்பது ஏன்? 

    ஹீரோவுக்கு யாருமே இல்லை என்று நான் படங்கள் பண்ணுவதில்லை. யாராவது ஒருவர் ஹீரோவுக்கு உயிராக இருப்பது போல் தான் இயக்கியிருக்கிறேன். ஆறு படத்தில் மட்டும் தான் அப்படி இருக்காது. வில்லனாகவே இருந்தாலும், தன் பையன் தப்பு செய்வதை பார்த்துக் கொண்டிருக்கும் வில்லனை காட்டுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கும். வில்லனுக்கே இப்படி யோசிக்கும் போது ஹீரோவுக்கு குடும்பம் இல்லையென்றால் எப்படி? என்று தோன்றும். 



    துரைசிங்கம், ஆறுச்சாமி ஒரே படத்தில் இணைவார்களா?

    சிங்கம் 3 படத்தில் ஒரு காட்சியில் துரைசிங்கம், ஆறுச்சாமி இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல கற்பனை செய்திருந்தேன். ஆனால் அது நிஜத்தில் நடப்பது சாத்தியமில்லை. இருவருமே மிகப்பெரிய ஸ்டார்கள். ஒரு சிறிய காட்சிக்கு அவர்களிடம் சென்று கேட்பது சரியாக இருக்காது.

    டிரைலர்ல ஆறுச்சாமி ஆவி ராமசாமி மேல வருவதுபோல் இருக்கிறதே?

    படத்துல ஆறுச்சாமியே இருக்கிறாரே, அப்புறம் ஏன் ராமசாமி உடம்பில ஆறுச்சாமி வரப்போகிறார். இருவருமே படத்தில் இருக்கிறார்கள். படத்தை பாருங்கள். #Hari #SaamySquare #Vikram #Suriya

    ஹரி பேசிய வீடியோவை பார்க்க:


    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் விமர்சனம். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
    சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமியான விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.

    ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார். 



    இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா  திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் - பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

    அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.



    கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.

    இதற்கிடையே தேர்வில் வெற்றி பெறும் ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.



    கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அப்பா, மகன் என இரு கெட்-அப்களில் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி என  கலக்கியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பார்க்க முடிகிறது. ராமசாமி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற போலீசாக விக்ரம் வலம் வருகிறார். மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அழகு தேவதையாக வலம் வருகிறார். முதல் பாதியை ஐஸ்வர்யா ராஜேஷும், இரண்டாவது பாதியை கீர்த்தி சுரேஷும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.



    பாபி சிம்ஹா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் பாபி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி தனது காமெடியால் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நிற்கின்றனர்.

    பெருமாள் பிச்சை - ஆறுச்சாமி, இந்த இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. தனது பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதல்ல, அதை சாமர்த்தியமாகவே கையாண்டிருக்கிறார். 

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்' டபுள் ட்ரீட். #SaamySquareReview #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ விமர்சனம்:

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டம். #SaamySquare #Vikram #KeerthySuresh
    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'.

    விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை - தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் - விவேகா, கலை - பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, தயாரிப்பு - சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் - ஹரி.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹரி பேசியதாவது,

    தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

    சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். 

    `சாமி ஸ்கொயர்' உலகமெங்கும் நாளை (செப்டம்பர் 21-ஆம் தேதி) ரிலீசாக இருக்கிறது. #SaamySquare #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர்:

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இந்த படத்தின் புதிய டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. டிரைலர் வெளியாகி 15 மணிநேரத்தில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர் பார்த்துள்ளனர். மேலும் யூடியூப் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தில் உள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற 20-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்திருக்கிறார். #SaamySquare #Vikram

    சாமி ஸ்கொயர் டிரைலர் பார்க்க:

    ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி, எனக்கு தேவை மூணு தல என்ற வசனம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

    இதில் விக்ரம் பேசும் வசனமான, எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல... பொறுக்கி... என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஏற்கனவே வந்த டிரைலரில், ‘நான் தாய் வயத்தில பொறக்கல... பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல... பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது.



    `சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. #SaamySquare #Vikram


    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற 20-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்திருக்கும் இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். #SaamySquare #Vikram

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிபு தமீன்ஸ் கூறியிருப்பதாவது,

    `செப்டம்பர் மாதத்தை குறித்துள்ளோம். மத்திய மற்றும் மாநில தணிக்கை குழு அனுமதி கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram


    தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார். #DeviSriPrasad
    ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத், விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமிஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.

    இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது, ‘டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘சாமிஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

    ‘சாமிஸ்கொயர்’முதலில் வெளியான ‘அதிரூபனே...’ என்ற மெலோடி பாடலுக்கும், அதைத் தொடர்ந்து வெளியான ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.

    அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’  என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.



    அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.’ என்றார்.

    ரசிகர்களும், திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள். இதனிடையே ஆகஸ்ட் =2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

    ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    தமிழ் சினிமாவில் பிசியாக நாயகியாக மாறியிருக்கும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் தற்போது, விஜய் ஜோடியாக சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசும்போது,

    “திரையுலகில் என்னை விட அழகும், திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேநேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

    கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன.



    எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது.”

    இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார். #KeerthySuresh #Sarkar #SaamySquare #Sandakozhi2

    சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஹரி, சாமி ஸ்கொயர் படத்தின் கதையை மேடையிலேயே போட்டுடைத்தார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி பேசும் போது,

    மீண்டும் மீண்டும் எனக்கு தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 



    சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். #SaamySquare #Vikram

    ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், தூள், தில், சாமி படங்களுக்கு பிறகு சாமி ஸ்கொயர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசியதாவது,

    நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படம் சாமி. என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பெரிய ஆளாக நிறுத்தியதற்கு ஹரிக்கு நன்றி கூறினேன். கதை கேட்டு படத்தின் தலைப்பு கேட்டேன். சாமி என்று ஹரி சொல்லும் போதே எனக்கு ஒரு உத்வேகம் இருந்தது. பின்னர் அருள் படத்தில் இணைந்தோம். சாமி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி முன்பே பேசினோம். ஆனால் சும்மா தொடர்ச்சியாக இல்லாமல், ஒரு கதை அமைந்தால் பண்ணலாம் என்றேன். எத்தனை வருடம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று ஹரியிடம் சொன்னேன். 



    முன்பு கதை சரியாக அமையவில்லை, தற்போது அமைந்துள்ளது. இது ஒரு சரியான நேரம் என்று தோன்றியது. தூள், தில், சாமி போன்ற படங்கள் பண்ணி ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாமி ஸ்கொயர் அந்த வகையில் எனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று நினைக்கிறேன். தவம் செய்வது போல, படத்திற்காக ஹரி ரொம்ப மெனக்கிட்டிருக்கிறார். #SaamySquare #Vikram

    ×