search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ishan kishan"

    • முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்று சமனில் முடிந்தது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஒருநாள் தொடர் நிறைவடைந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.

    • இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டியது.
    • இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டி சூப்பர் வெற்றியுடன் கோப்பையை 8-வது முறையாக சொந்தமாக்கியது.

    ஆசிய கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக களத்தில் நின்று கொண்டு பேசி வந்தனர். அப்போது இஷான் கிஷன், விராட் கோலி போல நடந்து காட்டினார். அதை பார்த்த விராட் கோலி என்னை மாதிரி நடப்பதாக கூறி, பின்னாடி தூக்கி கொண்டு நடக்கிறாய் என கிண்டலாக அவரும் நடந்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில தினங்களுக்கு முன்பு நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தண்ணீர் கொடுக்க வந்த வீடியோ ஒன்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


    • 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
    • 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.

    இஷான்கிஷன் 5-வது வரிசையில் இடம்பெற்றால் 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- 

    4-வது வரிசையில் ஆடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் இடையே போட்டி இருக்கும். இஷான்கிஷன் பேட்ஸ்மேனாக களம் இறங்கினால் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார். ராகுலுக்கு சில கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது நல்லது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார்.
    • இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

    இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது லீக் போட்டி நாளை பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இலங்கையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முதல் 2 போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் நேபாளம்) கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்திருந்தார்.

    அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்புகள் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், யாராவது ஒருவரை அணியிலிருந்து நீக்க வேண்டும். அல்லது யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதோடு, அதற்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    தற்போது கேஎல் ராகுலை அணியிலிருந்து நீக்கினால் மட்டுமே சஞ்சு சாம்சனை அணியில் விளையாட வைக்க முடியும். ஆனால், கேஎல் ராகுல் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதால், அவரை அணி நிர்வாகம் நீக்காது. இரண்டு போட்டிகள் வரையில் இஷான் கிஷான் தான் அணியில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றால், அவர் 3 ஆவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சுப்மன் கில் 3-வது இடத்தில் களமிறங்கி சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இஷான் கிஷான் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5-வது இடத்திலும் களமிறங்குவார்கள்.

    இவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள்.
    • உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னும் தெரியவில்லை.

    இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரிடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 அரை சதத்தை பதிவு செய்தார். சஞ்சு சாம்சன் 2 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்தை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள். இஷான் கிஷன் மேலே வருவது முக்கியமல்ல சஞ்சு சான்சன் இதற்கு மேல் கீழே போக கூடாது.

    நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா அளித்துள்ள பேட்டியில்,சஞ்சு சாம்சன் எப்போது நீங்கள் ரன் அடிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள் என்று குறை கூறியுள்ளார்.

    • ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர்.
    • டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 3-வது டி20 போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்குகிறது.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் இஷான் கிசானுக்கு பதிலாக இன்றைய போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தடுமாறுகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்பதால் அவருக்கு சற்று இடைவெளி கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் தமக்கு கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் வலுவான கம்பேக் கொடுக்கலாம். எனவே அவருடைய இடத்தில் நான் எந்தவித சந்தேகமுமின்றி யசஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுப்பேன்.

    ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர். குறிப்பாக வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலிங்க்கு எதிராகவும் அசத்தும் திறமை அவரிடம் இருக்கிறது.

    அத்துடன் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அதில் என்ன செய்கிறார் என்பதை ஏன் பார்க்க கூடாது? சொல்லப்போனால் டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். மேலும் திலக் வர்மா போன்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்து புதிய காற்றை சுவாசிக்கும் முயற்சிக்கும் நீங்கள் ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    • என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன்.
    • மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.

    இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பைக்கான இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த தங்களது சொந்த கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறங்களாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இரண்டு விக்கெட் விழுந்த போதும் அவர் மிடில் ஓவர்களில் அசராமல் அடித்து ஆடியதை பார்த்து பிரமித்து விட்டேன். அவரது பேட்டிங்கால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.

    ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரானவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் ஸ்பின்னர்களை சரியாக கையாலும் சாம்சனை அந்த இடத்தில் களமிறக்குவது தான் நல்ல முடிவாக இருக்கும்.

    சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களை இலகுவாக எளிதில் எதிர்கொள்கிறார். அதேபோன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களையும் சாமர்த்தியமாக விளையாடுகிறார். எனவே உலகக்கோப்பை அணி தேர்வில் சஞ்சு சாம்சன் விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முகமது கைப் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது. டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    தொடரை கைப்பற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்து வரலாறு படைத்துள்ளார். அவர் முதல் 5 போட்டிகளில் 348 ரன்கள் குவித்து அந்த சாதனை பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.

    1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின், தனது முதல் ஐந்து போட்டிகளில் 321 ரன்களைக் குவித்தார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் 320 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    • லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.
    • 'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார். அடுத்த மாதம் (ஜூன்) 7-ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்த நிலையில் அதிலிருந்தும் அவர் விலகினார்.

    இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    • இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
    • இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.

    கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.

    ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    ×