search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvENG"

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
    • இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்டில் வென்று அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்தியாவிடம் தோற்றதில் இங்கிலாந்து அணிக்கு அவமானம் இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்த தொடர் முழுவதும் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெற்ற விதத்துக்கு இந்திய அணியை பாராட்டுகிறேன். அதற்கு தகுதியான அணியாகும். விராட்கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், பும்ரா (ஒரு போட்டியில் ஆட வில்லை) ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த தொடரில் பெரும்பாலும் இல்லை. அந்த வகையில் முக்கிய வீரர்கள் இல்லாத பெரிய பட்டியலை கொண்டு இருந்தாலும் இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

    திறமை மட்டுமில்லாமல் மனதளவில் வலிமை இருப்பதால் சொந்த மண்ணில் மற்றொரு தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். சொந்த மண்ணில் அவர்களுடைய வெற்றி விகிதம் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை. இந்த தொடரில் இங்கிலாந்து அணி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

    அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். 2-வது இன்னிங்சில் அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித்சர்மா அவரிடம் புதிய பந்தை கொடுத்தபோது கண்களில் நெருப்பு தெரிந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்து விட்டார்.

    துருவ் ஜூரல்-குல்தீப் யாதவ் ஜோடி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் திருப்பு முனையாகும். சுப்மன்கில் தனது திறமையான ஆட்டத்தை அமைதியாக வெளிப்படுத்தினார். ஜூரல் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் நன்றாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    • முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.
    • முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய மண்ணில் 200 ரன்னுக்கு குறைவாக இலக்கை நோக்கி ஆடிய டெஸ்டுகளில் இந்தியா ஒரு போதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடருகிறது. இத்தகைய இலக்கை எதிர்கொண்ட 33 டெஸ்டுகளில் 30-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 தொடருக்கு மேல் (ஆஸ்திரேலியா 10 முறை) வென்றதில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்த இந்தியா அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டுகாலக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

    முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.

    முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலின் வயது 23 ஆண்டு 33 நாட்கள். டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை பெற்ற 5-வது இளம் வீரர், இந்திய அளவில் 2-வது இளம் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    இந்த தொடரில் இரண்டு இரட்டை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 971 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 8 டெஸ்டுகளில் ஆடிய வீரர்களில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த வகையில் கவாஸ்கர் 938 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் சாதனையை ரோகித்சர்மா முறியடித்தார்.

    ராஞ்சி:

    இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    192 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட் டது. 6-வது விக்கெட்டுக்கு சுப்மன்கில் (52 ரன்)-ஜூரல் (39 ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை தேடி தந்தது.

    இந்த வெற்றி மூலம் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணிக்கு டெஸ்டில் கிடைத்த 9-வது வெற்றியாகும். 4 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60.00 ஆகும்.

    இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை ரோகித்சர்மா முந்தினார். டிராவிட் தலைமையில் 25 டெஸ்டில் 8-ல் வெற்றி கிடைத்தது. 6 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 11 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    மேலும் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரை ரோகித்சர்மா சமன் செய்தார். இருவரது தலைமையிலும் 9 டெஸ்டில் வெற்றி கிடைத்து இருந்தது.

    விராட்கோலி 40 வெற்றியுடன் (68 டெஸ்ட்) முதல் இடத்திலும், டோனி 27 வெற்றியுடன் (60 டெஸ்ட்) 2-வது இடத்திலும், கங்குலி 21 வெற்றியுடன் (49 டெஸ்ட்) 3-வது இடத்திலும், அசாருதீன் 14 வெற்றியுடன் (47 டெஸ்ட்) 4-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ரோகித் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ரோகித் பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அவர் டோனி, அசாருதீன், அஜீத் வடேகர் ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 10 வெற்றியுடன் (18 டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
    • இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

    துபாய்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், ராஞ்சி டெஸ்டில் பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    அதில், 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 சதவீதம் பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தில் வங்காளதேசமும் உள்ளது.

    5 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன.

    • முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.
    • இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.

    ராஞ்சி

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

    இதில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.

    இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.

    எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். துருவ் ஜுரேல் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது.

    அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • இந்திய அணி தரப்பில் ரோகித்- கில் அரை சதம் விளாசினர்.

    ராஞ்சி:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

    இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 4-வது நாள் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்னிலும் சர்ப்ராஸ் கான் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 120 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கில்- துருவ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து தரப்பில் பஷிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • சிறப்பாக விளையாடிய ரோகித் அரை சதம் விளாசி அவுட் ஆனார்.
    • பட்டிதார் 0 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    ராஞ்சி:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

    இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 4-வது நாள் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து கில் - ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடினர். 4-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ரூட், ஹார்ட்லி, பஷிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
    • இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
    • இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.

    ×