search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india communist"

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூ. சார்பில் பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது.
    துறையூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எ.ஐ.டி.யு.சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாள் பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி  பேசு கையில், மக்களை பாதுகாக்கவே இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது,  பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா நிலங்களை ஹைட் ரோகார்பன் திட்டத் தின் மூலம் அழித்து வருவதாகவும், யேற்றத்தால் தினசரி விலைவாசி உயர்ந்து வருகிறது என்று கூறினார்.  

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னாள் எம்.பி செல்வ ராசு, முன்னாள்  எம்.எல்.ஏ சிவபுண்ணியம், மாவட்ட நிர்வாகக் குழு கணேசன், சிவசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராசு, உலகநாதன் ஒன்றிய செயலாளர் சேகர், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது.
    இண்டூர்:

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது. இதில் இந்தியாவை பாதுகாப்போம், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் வேலூரில் தொடங்கியது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து வந்த பிரச்சார குழுவை வரவேற்கும் வகையில் தருமபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியில் மாவட்ட செயலாளர் தேவராசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பிரச்சார குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சப்பன், சேதுராமன், விவசாய சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம், தேவதாஸ், தங்கவேல், திருநாவுக்கரசு, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் மவுன குணசேகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

    பிரச்சார குழுவினர் காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நாகதாசம் பட்டி, பி.அக்ராகரம், பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

    அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  பிரச்சார குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமையிலும், தருமபுரியில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையிலும் பிரச்சார குழுவை வாழ்த்தி வரவேற்பு கொடுத்தனர். நேற்று காலை 11 மணிக்கு நல்லம்பள்ளியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சேலம் மாவட்டத்திற்கு பிரச்சாரக் குழு புறப்பட்டு சென்றது.
    சட்டசபை காவலர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதுவை சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #puducherryassembly

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் அனு மதிக்கப்படுவதில்லை. அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனங்களில் வந்தால் அவர்கள் மட்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வேறு யாருடைய வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கட்சி நிர்வாகி தாமோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சட்டசபை வளாகத்திற்குள் வந்தார். அவரை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து சலீம் ஏன் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எப்போது முதல் இந்த விதிமுறை உள்ளது? என கேட்டார். சபை காவலர்கள் நேரடியாக பதில் கூறாமல், அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சலீம் அவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து சபை காவலர்கள் வாகனத்தை அனுமதிக்க மறுத்தனர். இதனால் சலீம் சட்டசபைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு சட்டசபை வளாகத்திற்குள் சென்றார். #puducherryassembly

    தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைப்பார் என்று இந்திய கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் அஜீஸ்பாஷா குற்றம் சாட்டியுள்ளார். #pmmodi #indiacommunist

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜீஸ்பாஷா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா ஆட்சியின் 4 ஆண்டுகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இதனால் ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிபாளையத்தில் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்திக்கும். இதை கருத்தில் கொண்டே பாராளுமன்றத்துடன் மாநிலங்களுக்கு நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் உடனிருந்தனர். #pmmodi #indiacommunist

    தில்லாம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் வட்டம் தில்லாம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கட்சி நிர்வாகிகள் முத்தையா, சக்திவேல், திருவேங்கடம், ரெங்கநாதன், வெங்கடாசலம், விருத்தாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் செங்குடித்தெரு, பழையூர், பூனாம் பாளையம் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கவும், பாறைக்கொட்டத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்றவும் வலியுறுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயற்குழு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து ஓய்வு நல சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அருணாசலம், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மனோகரன் நன்றி கூறினார்.
    தொண்டி, நம்புதாளை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்த்து நகர சபையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான குருசாமி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    தொண்டியானது முன்பு துறைமுக நகரமாக விளங்கியுள்ளது. இப்போதும் முதல் நிலை பேரூராட்சியாகவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாகவும், தொழிற்துறையில் வளர்ந்து வரும் நகரமாகவும் விளங்குகிறது.

    கிராமமான நம்புதாளையானது, திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக உள்ளது.

    இந்த 2 பகுதிகளையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒன்றிணைத்து தொண்டியை நகரசபையாக மாற்றினால் பெரிய நகரமாக மாறவும், தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பாக அமையும்.

    எனவே தொண்டி, நம்புதாளை பகுதிகளை இணைத்து நகரசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சொத்து வரி உயர்வை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் லோகேஷ்குமார், வட்ட செயலாளர் மாணிக்கம் சரோஜா முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜ், ஜீவா, அசோகன், உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் மீது 100 சதவீத சொத்து வரி உயர்வை சுமத்துவதை ஏற்க முடியாது அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.   
    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் தா.பாண்டியன்,பழ.நெடுமாறன் பங்கேற்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அயனாபுரம் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக போராடும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.

    தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளத்தை அழித்து மக்களை பாதிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிற திட்டங்களை அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.

    இதில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் திருஞானம், பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் மீதான விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு இதன் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் இன்று தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டுவண்டிகளை முன்னே நிறுத்தியும், காலி சிலிண்டர் ஒன்றை நடுவில் வைத்து கொண்டு அதற்கு பூ மாலை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

    திருச்சிற்றம்பலத்தில் 17-ந்தேதி முன் அறிவிப்பில்லாத மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிக்கு நரியங்காடு துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் மின்சாரம் இரவு பகல் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி தடை செய்யப்படுகிறது. இதனால், விவசாயம் , வியாபாரம், சிறுதொழில்கள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, திருச்சிற்றம்பலம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    திடீர் மின் வெட்டு இல்லாமல், மும்முனை மின்சாரத்தை நாளொன்றுக்கு 16 மணி நேரம் வழங்க கோரியும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பகோரியும், நரியங்காடு 33 கிலோவாட் துணைமின் நிலையத்தை 110 கிலோவாட் திறன் கொண்டதாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ந்தேதி காலை 10மணிக்கு திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திருச்சிற்றம்பலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சிற்றம்பலம் கிளை செயலாளர் சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். முன்ளாள் வட்டாரச் செயலாளர் கவிஞர் செல்வகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    ×