search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "campaign movement"

    • பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும்.
    • வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. விசைத்தறி தொழிற்சங்க தலைவர் வி.வி.தம்பிதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடம், திமுக., சுமைதூக்கும் சங்க செயலாளர் முருகேஷ் முன்னிலையில், மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க கோரியும், வேளாண் விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றக்கோரியும் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். இதில் 50 பேர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
    • மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.

    மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்.மேகநாதன், எஸ்.துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் கண்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஜி.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் ப.அருள்விழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது.
    இண்டூர்:

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது. இதில் இந்தியாவை பாதுகாப்போம், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் வேலூரில் தொடங்கியது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து வந்த பிரச்சார குழுவை வரவேற்கும் வகையில் தருமபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியில் மாவட்ட செயலாளர் தேவராசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பிரச்சார குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சப்பன், சேதுராமன், விவசாய சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம், தேவதாஸ், தங்கவேல், திருநாவுக்கரசு, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் மவுன குணசேகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

    பிரச்சார குழுவினர் காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நாகதாசம் பட்டி, பி.அக்ராகரம், பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

    அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  பிரச்சார குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமையிலும், தருமபுரியில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையிலும் பிரச்சார குழுவை வாழ்த்தி வரவேற்பு கொடுத்தனர். நேற்று காலை 11 மணிக்கு நல்லம்பள்ளியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சேலம் மாவட்டத்திற்கு பிரச்சாரக் குழு புறப்பட்டு சென்றது.
    ×