search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஐ.டி.யூ.சி."

    • பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    நலவாரிய பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க குழு வலியுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அனில் குமார் தலைமை தாங்கினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கல்யாணசுந்தரம், இசக்கி முத்து, நாராயணசாமி, அருணாச்சலம், சுரேஷ் மேசியாதாஸ் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்ட னர். அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்ட தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டம் காரணமாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பி ரண்டு நவீன் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    • மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    • பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜில்லா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்கத்தின் தலைமை மகாசபை கூட்டம் திருப்பூரில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பழனிசாமி, துணை தலைவராக ஆறுமுகம், பொதுச்செயலாளராக ரவி, துணை செயலாளராக கதிர்வேல், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் வருகிற 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். கட்டிடம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்பட்டு வரும் பணப்பலன்கள் முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணித்து தொழிலாளர்களுக்கு உரிய பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தில் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மதுரையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது,.

    மதுரை

    மதுரை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பனகல் சாலை திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 'மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தமிழகத்தில் அனைத்து தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தை சீராக செயல்படுத்த வேண்டும், மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆட்டோ தொழிலை பாதிக்கும் வாகன சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொது செயலாளர் நந்தாசிங் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×