search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIDUC"

    • மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    • பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜில்லா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்கத்தின் தலைமை மகாசபை கூட்டம் திருப்பூரில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பழனிசாமி, துணை தலைவராக ஆறுமுகம், பொதுச்செயலாளராக ரவி, துணை செயலாளராக கதிர்வேல், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் வருகிற 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். கட்டிடம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்பட்டு வரும் பணப்பலன்கள் முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணித்து தொழிலாளர்களுக்கு உரிய பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தில் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×