search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruchitrambalam"

    பண் குறிஞ்சி: திருச்சிற்றம்பலம்

    பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்

    பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக

    குன்றிரண் டன்ன தோளுடை யகலங்

    குலாயவெண் னூலொடு கொழும்பொடி யணிவர்

    மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை

    மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி

    அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    1

    தேனினும் இனியர் பாலன் நீற்றர்

    தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்

    ஊன்நயந் துருக உவகைகள் தருவார்

    உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்

    வானக மிறந்து வையகம் வணங்க

    வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்

    ஆணையின் உரிவை போர்த்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    2

    காரிரு ளுருவம் மால்வரை புரையக்

    களிற்றின துரிவைகொண்ட டரிவைமே லோடி

    நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி

    நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்

    பேரரு ளாளர் பிறவியிற் சேரார்

    பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ

    ஆரிருண் மலை யாடுஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    3

    மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்

    மலைமகள வளடு மருவின ரெனவும்

    செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்

    சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்

    தம்மல ரடியன் றடியவர் பரவத்

    தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர

    அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    4

    விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்

    விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்

    பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்

    பலபுக ழல்லது பழியில ரெனவும்

    எண்ணலா காத இமையவர் நாளும்

    ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற

    அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    5

    நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க

    நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்

    தோடொரு காதினிற் பெய்துவெய் தாய

    சுடலையி லாடுவர் தோலுடை யாகக்

    காடரங் காகக் கங்குலும் பகலுங்

    கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த

    ஆடர வாட ஆடும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    6

    ஏறுமொன் றேநி நீறுமெய் பூசி

    இளங்கிளை அரிவைய டொருங்குட னாகிக்

    கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்

    குளிரிள மதியமுங் கூவிள மலரும்

    நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்

    மகிழிள வன்னியும் இவைநலம் பகர

    ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    7

    கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்

    கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்

    பிச்சமும் பிறவும் பெண்அணங் காய

    பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்

    பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்

    பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்

    தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    8

    நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்

    நுகர்புகர் சாந்தமொ டேந்தியமாலைக்

    கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்

    எய்தலா காததொ ரியல்பினை யுடையார்

    தோற்றலார் மாலும் நான்முக முடைய

    தோன்றலும் அடியடு முடியுறத் தங்கள்

    ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    9

    வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்

    நல்வினை நீக்கிய வல்வினை யாளர்

    ஓதியுங் கேட்டு உணர்வினை யிலாதார்

    உள்கலா காததோ ரியல்பினை யுடையார்

    வேதமும் வேத நெறிகளு மாகி

    விமலவே டத்தொடு கமலமா மதிபோல்

    ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    10

    மைச்செறி குவனை தவளைவாய் நிறைய

    மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்

    பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்

    பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்

    கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்

    கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்

    அன்புடை யடியவர் அருவினையிலரே.

    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
    • இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதுவரை ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

    இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. அதிலும், தனுஷ் வரிகளில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருந்த தேன்மொழி பாடல் தற்போது வரை அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்துள்ளது.


    இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தேன்மொழி பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த


    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
    • இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'தாய் கிழவி' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.


    திருச்சிற்றம்பலம்

    இந்நிலையில், 'தாய் கிழவி' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம்.
    • இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை ‘அம்பலம்’ என்றே அழைக்கின்றனர்.

    திருச்சிற்றம்பலம் என்பதற்கு பொருள் என்ன?

    சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரோ தற்காலத்தில் 'சிதம்பரம்' - எனச் சிதைந்து விட்டது!

    சிற்றம்பலம் > சித்தம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்!

    திருச்சிற்றம்பலம் - என அழகுத் தமிழில் அழைக்க வேண்டிய நாம் சிதம்பரம் என்ற புரியாத சொல்லைப் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.

    அதன் காரணமாக சிதம்பரம் அறிந்த நமக்கு - அதன் பண்டைய பெயரான 'திருச்சிற்றம்பலம்' - தெரியவில்லை!

    அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம். இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை 'அம்பலம்' என்றே அழைக்கின்றனர். அம்பலம் என்பதற்கு அரங்கம் /அரண்மனை என்ற பொருளும் உண்டு.

    தில்லையில் இருக்கும் ஆடலரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு காலத்திலிருந்த 'சிறிய அம்பலம்' ஆகும் .

    சிறிய அம்பலம் = சிற்றம்பலம்.

    அதை அந்நாளில் 'சிற்றம்பலம்' என்றே அழைத்தனர். பின்னர் பேரரசுச் சோழர் காலங்களில் அது பேரம்பலம் ஆயிற்று. பொற்கூரை வேயப்பட்டு பொன்னம்பலமும் ஆயிற்று.

    தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை.

    சோழர்கள் முடி சூடிக்கொண்ட இடம் = பொன்னம்பலம்.

    பாண்டியர்கள் முடி சூடிக் கொண்ட இடம் = வெள்ளம்பலம் (மதுரை வெள்ளியம்பலம்).

    சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரை சித்தம்பரம் > சிதம்பரம் எனத்திரித்து பின்

    சித் + அம்பரம் என்று பிரித்து "ஞான ஆகாசம்" என்று பொருள் சொல்லி இன்று புது விளக்கங்கள் சொல்லப்படுகிறது.

    -நித்தியானந்தபாரதி

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது மித்ரன் ஜவஹர் புதிய படத்தில் மாதவனுடன் இணைந்துள்ளார்.

    2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

     

    மாதவன்

    மாதவன்

    இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் மாதவனுடன் கைகோர்த்துள்ளதாக மித்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாதவன்-மித்ரன் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'மேகம் கருக்காதா' பாடல் காதலர்கல் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.


    திருச்சிற்றம்பலம்

    இந்நிலையில், இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

     

    இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. அதில், திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன்.வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பவித்ரா கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு சென்று வந்தார்.
    • நேற்று வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    சாம்பவர்வடகரை:

    சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவரது மகள் பவித்ரா (வயது20). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீடான சாம்பவர்வடகரைக்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரா எதற்காக தற்கொலை செய்தார் ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியையும் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியையும் வசூலித்ததாக கூறப்படுகிறது.

    மேலும், முதல் வாரம் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரூ.51.42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போது வரை ரூ.59.50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் நித்யா மேனனின், ஷோபனா கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இந்நிலையில், நடிகை நித்யா மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தின் நேரலையில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தயவு செய்து தன்னை "தாய்க்கிழவி" என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

     

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம் என்பதால், ரசிகர்களும் பெரிய அளவில் திரண்டு வந்து, படத்தைக் கொண்டாடினர். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் பட ரிலீசான தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்ததால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

     

    சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஸ்கிரீன் முன்பு நடனமாடியதாகவும், அப்போது சிலர் விரும்பத்தகாத செயலில் ஸ்கிரீனை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களின் இந்த செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது.

    யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'திருச்சிற்றம்பலம்' இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.


    திருச்சிற்றம்பலம்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ( ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×