search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nithya Menen"

    • புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது.

    தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் வினய் ராய், நவ்தீப், பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    • நடிகை நித்யா மேனன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருடன் நடித்த தமிழ் பட நடிகர்களை பட்டியலிட தொடங்கினர்.


    நித்யா மேனன் பதிவு

    இந்நிலையில், இந்த செய்தியை நித்யா மேனன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " இது முற்றிலும் தவறான வதந்தி. இது மாதிரியான ஒரு நேர்காணலை நான் கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்கி பகவானின் ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம்.
    • கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்ற நித்யா மேனன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.

    திருப்பதி:

    தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது.

    இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் வந்தார்.

    அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின்னர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.

    அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
    • இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '19(1)(a)' .

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'திருசிற்றம்பலம்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மேலும், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள '19(1)(a)' படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை நித்யா மேனனுக்கும், மலையாள நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது.


    நித்யா மேனன்

    இதனை மறுத்துள்ள நித்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "என் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் ஊடகங்கள் உண்மையை சரிபார்க்க முயற்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

    '19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.


    19(1)(a) போஸ்டர்

    மேலும், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    நித்யா மேனன் எழுத்தாளராக உருவாக விஜய் சேதுபதி உதவி செய்வது போன்று வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள். 

    ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

    நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #NithyaMenen

    பிரியதர்ஷினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் உருவாகவிருக்கும் `த அயர்ன் லேடி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் இந்திரஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #TheIronLady #IndrajithSukumaran
    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.

    இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.



    இந்த நிலையில், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவரை எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திரஜித் ஏற்கனவே தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #TheIronLady #IndrajithSukumaran #NithyaMenen #JayalalithaaBiopic

    ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் வேடத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை, அதிலும் ஜெயலலிதா வேடம் சவாலானது என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார். #NithyaMenen #TheIronLady
    பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நித்யா மேனன். அவர் அளித்த பேட்டி:-

    கேள்வி:- மலையாள படங்களில் காட்டும் கவனத்தை மற்ற மொழிகளில் காட்டுவதில்லையே?

    பதில்:- அப்படி இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கதையும் என்னுடைய வேடமும் மிகவும் முக்கியம். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் சுவாரசியமான படங்களில் மட்டும்தான் நடிக்க விரும்புகிறேன்.

    கே:- என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?

    ப:- அந்த படத்தில் ஒப்பந்தமானதும் நடித்து முடித்ததும் சில நாட்களில் முடிந்துவிட்டது. தயாராவதற்கான நேரம் இல்லை. பொதுவாக இது போன்ற நிஜ வேடங்களில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்கவே விரும்புவேன். இதில் அப்படி அமையவில்லை.

    ஆனாலும் நன்றாக வந்து இருக்கிறது. எந்த ஒரு வேடத்திலும் அந்த வேடமாக மட்டுமே திரையில் தெரிவதை விரும்புகிறேன். சாவித்திரியின் கதை என்னை பிரதிபலிப்பது போலவே இருந்தது.

    கே:- ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்?

    ப:- ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் வேடத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை. சாதாரணமாக நடித்துவிட முடியாது. படத்தில் எந்த இடத்திலும் நித்யா மேனன் தெரியக்கூடாது. அந்த பொறுப்பும் கடமையும் இயக்குனருக்கு மட்டுமல்ல நடிக்கும் நடிகைக்கும் இருக்கிறது. பிரியதர்ஷினி கதையை சொல்லும்போதே அவரது அர்ப்பணிப்பு புரிந்துவிட்டது.



    அதனால்தான் சம்மதித்தேன். உடலளவிலும் மனதளவிலும் ஜெயலலிதாவாக நான் மாற வேண்டியிருக்கிறது. அவரது முழு வாழ்க்கையையும் திரைக்கு கொண்டு வர இருக்கிறோம்.

    ப:- இரண்டு மலையாள படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். அவை தவிர அக்‌‌ஷய் குமாருடன் மி‌ஷன் மங்கள் படத்தில் நடிக்க இருக்கிறேன்.

    கே:- இந்தியில் நடிப்பது சவாலாக இருக்கிறதா?

    ப:- இதில் சவால் எதுவும் இல்லை. புது மொழி, புது சூழலில் பணிபுரிகிறேன். கதை கேட்கும்போதே ஒரு ரசிகையாக கேட்பேன். அப்படி என்னை வியக்க வைத்த கதை இது.

    சந்திரனுக்கு இந்திய விண்கலம் ஒன்று செலுத்தப்பட்டது என்பது வரலாற்று சாதனை. அந்த சாதனையை படமாக்கும்போது அந்த படத்தில் நான் இடம்பெற்று இருப்பது பெருமையான வி‌ஷயம்.

    கே:- வரிசையாக படங்கள். சோர்வடையவில்லையா?

    ப:- இல்லை. நான் இந்த துறையை அனுபவித்து பணிபுரிகிறேன். சின்ன வேடத்தில் நடித்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்து நடிக்கிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NithyaMenen #TheIronLady

    பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படமாக உருவாகும் `தி அயர்ன் லேடி' படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க இரு நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #TheIronLady #Jayalalithaa
    இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு ‘‘தி அயர்ன் லேடி’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது.

    ‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை நித்யாமேனன் தேர்வாகி உள்ளார்.

    நித்யாமேனன் ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தோழி சசிகலா கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரம் சர்ச்சையானது என்பதால் அதில் நடிப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள், அவருடன் பயணித்த கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். சசிகலா கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் உண்டு” என்றார்.

    இந்த வேடத்துக்கு வரலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரலட்சுமி சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 படங்களில் வில்லியாகவும் நடித்து இருக்கிறார்.



    சசிகலா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர் காக்கா முட்டை, ரம்மி படங்களில் நடித்தவர். இன்னும் ஒருசில நாட்களில் சசிகலா வேடத்தில் நடிக்க இருப்பது யார்? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். #TheIronLady #Jayalalithaa

    ×