search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர் வடகரையில் இளம்பெண் தற்கொலை
    X

    சாம்பவர் வடகரையில் இளம்பெண் தற்கொலை

    • சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பவித்ரா கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு சென்று வந்தார்.
    • நேற்று வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    சாம்பவர்வடகரை:

    சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவரது மகள் பவித்ரா (வயது20). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீடான சாம்பவர்வடகரைக்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரா எதற்காக தற்கொலை செய்தார் ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×