search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property tax hikes"

    சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு மாநில தலைவர் மோகன் குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு மாநில தலைவர் மோகன் குமாரமங்கலம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துவரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்துவது என அரசு அறிவித்து இருப்பது மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்த வரியை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தான் அறிவிக்க வேண்டும். இதை அரசு அறிவிக்க முடியாது. வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கு முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உணர்கிறேன். இதனால் ரூ.3500 கோடி மத்திய அரசிடம் இருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிதியை வழங்க மறுத்து விட்டனர். இந்த சூழலில் மக்கள் மீது மேலும் வரியை சுமத்துவது கண்டனத்துக்குரியது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை மக்களுக்கு சுமை மேல் சுமையாக உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    சொத்து வரி உயர்வை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் லோகேஷ்குமார், வட்ட செயலாளர் மாணிக்கம் சரோஜா முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜ், ஜீவா, அசோகன், உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் மீது 100 சதவீத சொத்து வரி உயர்வை சுமத்துவதை ஏற்க முடியாது அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.   
    ×