search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    வேலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் லோகேஷ்குமார், வட்ட செயலாளர் மாணிக்கம் சரோஜா முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜ், ஜீவா, அசோகன், உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் மீது 100 சதவீத சொத்து வரி உயர்வை சுமத்துவதை ஏற்க முடியாது அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.   
    Next Story
    ×