என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்26 July 2018 5:37 PM GMT (Updated: 26 July 2018 5:37 PM GMT)
சொத்து வரி உயர்வை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் லோகேஷ்குமார், வட்ட செயலாளர் மாணிக்கம் சரோஜா முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜ், ஜீவா, அசோகன், உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் மீது 100 சதவீத சொத்து வரி உயர்வை சுமத்துவதை ஏற்க முடியாது அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X