search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தில்லாம்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    தில்லாம்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    தில்லாம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் வட்டம் தில்லாம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கட்சி நிர்வாகிகள் முத்தையா, சக்திவேல், திருவேங்கடம், ரெங்கநாதன், வெங்கடாசலம், விருத்தாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் செங்குடித்தெரு, பழையூர், பூனாம் பாளையம் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கவும், பாறைக்கொட்டத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்றவும் வலியுறுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயற்குழு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து ஓய்வு நல சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அருணாசலம், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மனோகரன் நன்றி கூறினார்.
    Next Story
    ×