search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyderabad"

    • இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
    • இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டுகளை சமூக ஆர்வலர் ராபின் சாக்கியஸ் வாங்கியுள்ளார். அதில் புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

    இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆதலால் இந்த சாக்லேட்டுகள் சாப்பிடுவதற்கு தகுதியில்லாதவை என்று உணவு ஆய்வகம் தெரிவித்துள்ளது.

    உணவு ஆய்வகத்தின் அறிக்கையை ராபின் சாக்கியஸ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    குழந்தைகள் அடிக்கடி உண்ணும் பாதுகாப்பற்ற உணவை வழங்குவதற்காக எப்எம்சிஜி (FMCG) நிறுவனங்களை பொறுப்பேற்க வைத்து தண்டிக்க வேண்டிய தருணம் இது. இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த X பதிவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவர் டேக் செய்துள்ளார்.

    இந்த பதிவிற்கு கேட்பெரி (Cadbury) பிராண்டின் உரிமையாளரான மாண்டலெஸ் (Mondelez) பதில் அளித்துள்ளார். அதில், உலகின் மிக விரிவான உணவுப் பாதுகாப்பு அமைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும், எங்கள் தயாரிப்புகள் உடல் ரீதியாக எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

    • தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
    • அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    • சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.
    • நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோல், சினேகாபுரியில் ராஜஸ்தான் மாநிலம் பாலிய சேர்ந்த கல்யாண் சவுத்ரி என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். செகந்திராபாத்தை சேர்ந்தவர் சுக் தேவ். நகை மொத்த வியாபாரியான இவர் நகைக்கடைகளுக்கு நகை சப்ளை செய்து வருகிறார்.

    சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இவர் நகை சப்ளை செய்வதை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சுக் தேவ் நேற்று இரவு வழக்கம்போல் நகைகளை கல்யாண் சவுத்ரி கடைக்கு கொண்டு வந்தார். நகைகளை சவுத்ரி சரி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது 3 வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர்.

    இரவு 10 மணி அளவில் 2 பைக்கில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கடைக்கு சிறிது தூரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு 2 பேர் அங்கேயே நின்று கொண்டனர். 2 வாலிபர்கள் மட்டும் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு திடீரென கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்குள் புகுந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து மிரட்டி கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையின் ஷட்டரை மூடினர்.

    பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை பணத்தை கல்யாண் சவுத்ரியிடம் கேட்டனர். இதனைக் கண்ட கடையில் இருந்த ஊழியர்கள் அங்கு இருந்த அறைகளுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். கல்யாண் சவுத்ரி மற்றும் சுக் தேவ் ஆகியோர் நகை பணத்தை தர மறுத்ததால் அவர்கள் மீது வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதில் கல்யாணி சவுத்ரி மார்பில் 3 துப்பாக்கி குண்டுகளும், சுக் தேவ் மூக்கின் மீது ஒரு துப்பாக்கி குண்டும் பாய்ந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.

    துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் வெளியே நின்று கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர்.

    அப்போது வாலிபர்கள் நகை பணத்துடன் வெளியே வருவதை கண்ட அவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். தங்களை பிடிக்க முயற்சி செய்தால் துப்பாக்கியில் சுட்டு விடுவதாக வாலிபர்கள் மிரட்டுதால் யாரும் அவர்களை நெருங்க வில்லை.

    இதையடுத்து நகை பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் தயார் நிலையில் இருந்தவர்களுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரச்ச கொண்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதிர் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க ஐதராபாத் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 15 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    குடும்ப அடிப்படையிலான கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன.
    ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின் (ஐஎஸ்பி) 20 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.

    இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற பேரணியின்போது பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் அரசியல் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

    குடும்ப அடிப்படையிலான அரசியல் என்பது அரசியல் ரீதியான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது. தெலுங்கானாவிலும் பாஜகவினர் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

    இந்த குடும்ப அடிப்படையிலான கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் பாஜக தெலுங்கானாவை தொழில்நுட்ப மையமாக மாற்ற விரும்புகிறது.

    எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கையாளிரிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்- முழு விவரம்
    வெளிநாட்டுக்கு கூட்டி செல்வதாக பெண் என்ஜினீயரை அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து பஸ்சில் கொண்டு சென்று கால்வாயில் வீசிய காதலரை போலீசார் கைது செய்தனர். #Suitcase #Hyderabed #EngineerKilled
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.

    இவர்களின் காதல் விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியும். அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார்.

    இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ந் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார்.

    ஆனால், சொன்னபடி 7-ந் தேதி திரும்பி வரவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார், பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர். சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் பெண் என்ஜினீயரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.

    அங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார்.

    திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் போலீசில் தெரிவித்தார்.  #Suitcase #Hyderabed #EngineerKilled 
    ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையில் ரோபோ கிச்சன் எனும் பெயரில் ஹோட்டல் ஒன்று ரோபோட்களை கொண்டு செயல்படுகின்றது. #HyderabadRoboKitchen
    ஐதராபாத்:

    தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தில் ரோபோட்களைக் கொண்டு உணவு பரிமாறும் வகையில் ஹோட்டல் ஒன்று செயல்படுகின்றது.

    ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ‘ரோபோ கிச்சன்’ எனும் ஹோட்டல் உள்ளது. இங்கு உணவு பரிமாற ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மெனு கார்டுக்கு பதிலாக டேப் ஒன்று கொடுக்கப்படும். அதில் உணவு வகைகள் மெனு போல் இருக்கும். அதில் தேவையான உணவை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இந்த ஆர்டர் நடமாடும் ரோபோட் மூலம்  கிச்சனுக்கு  கொண்டு செல்லப்படும். கிச்சனில் இருந்து உணவு தயாரானதும் அவைகளை இந்த ரோபோட்களே பரிமாறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.



    இந்த ஹோட்டலில் தற்போது 4 ரோபோட்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றது. இவற்றிற்கு ‘அழகிய சேவை ரோபோட்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு இந்த ரோபோட்களுக்கு 3 மணி நேரம் சார்ஜ் போடப்படுகிறது.

    சென்னையில் உள்ளதைப் போன்று ஐதராபாத்தில் ரோபோ கிச்சனை கொண்டு வர விரும்பியதாகவும், தற்போது ஐதராபாத்தில்  வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ரோபோ கிச்சனின் உரிமையாளர்களில் ஒருவரான மணிகாந்த் கூறினார். #HyderabadRoboKitchen 
    கொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அனல் பறந்தது. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி (மும்பை) அணியை எதிர்கொள்கிறது. கோழிக்கோடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐதராபாத்தில் கண்காட்சி நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 பேர் படுகாயமடைந்தனர். #Hyderabadfireaccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தின் நாம்பள்ளி பகுதியில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், ஜனவரி 1-ம் தேதி முதல் அகில இந்திய தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நமாய்ஷ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கண்காட்சி, மொத்தம் 45 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றாக இந்த கண்காட்சி உள்ளது. இக்கண்காட்சி ஐதராபாத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ளது.

    இந்நிலையில், கண்காட்சி அரங்கில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டது. பின்னர் மற்ற கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் ஸ்டால்களில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு 13 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கண்காட்சி அரங்கில் இருந்த பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த தீ விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 100 கடைகள் தீயில் கருகி சாம்பலாகின.

    கண்காட்சியில் இருந்த விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் , தங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வங்கிகளில் கடன் பெறும் வகையில் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் இழப்பை ஈடுசெய்ய ஆய்வு நடத்தப்படும் என தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Hyderabadfireaccident
    ஐதராபாத்தின் பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதிகளில் விஷப்பாம்புகள் அதிகமாக வாழ்கின்றன எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Hyderabad #venomoussnake
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஏராளமான மக்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், ஐதராபாத்தின் முக்கிய பகுதிகளாக கருதப்படும் ஜூப்ளி ஹில்ஸ், காச்சிபவ்லி, கொண்டப்பூர் மற்றும் அட்டாப்பூர் பகுதிகளில் விஷப்பாம்புகளின் வரத்து அதிகரித்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாம்பினங்களின் நண்பர்கள் எனும் அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு வனத்துறையினரின் உதவியுடன் நடத்திய ஆய்வில் பாம்புகளின் எண்ணிக்கையும்  கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுள் 50 சதவீதம் கண்ணாடிவிரியன் பாம்பு வகையினை சார்ந்தது.

    இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் அவினாஷ் விஸ்வநாதன் கூறியதாவது:

    எலிகளை வேட்டையாடி உண்ணும் பாம்பினங்கள் ஐதராபாத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த எலிகள் மற்றும் பாம்புகள் திறந்த வெளிகளில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளில் இருந்து வருகின்றன. மேலும் வனப் பகுதிகளில் அதிகம் காணப்படும் மலைப்பாம்பு போன்ற விஷதன்மை குறைந்த உயிரினங்களும் அதிகரித்துள்ளன.

    இப்பகுதிகளில் கட்டுமானங்களுக்காக பாறைகள் அகற்ற, வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக ரஸல்ஸ் வைப்பர், கண்ணாடி விரியன் போன்ற கொடிய விஷப்பாம்புகள் வெளிவருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐதராபாத் அருகே பொது மக்கள் மத்தியில் ஆட்டோ டிரைவர் வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Hyderabad #ManStabbed #PublicView
    ஐதராபாத்:

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே நேற்று முன்தினம் மாலையில் ஒரு ஆட்டோ டிரைவர், வாலிபர் ஒருவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த வாலிபரை சரமாரியாக குத்தி கொன்றார்.

    இந்த சம்பவம் நடந்த போது ஏராளமான பொதுமக்கள் அங்கு நின்றிருந்தனர். ஆனால் யாரும் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. மாறாக தங்கள் கைகளில் இருந்த செல்போனில் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து கொண்டனர். ஒரேயொரு போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் அந்த ஆட்டோ டிரைவரை தடுக்க முயன்றார்.

    ஆனால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்திக் குத்து பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் காஜா (வயது30) என்றும் உயிரிழந்தவர் குரேஷி (35) என்றும் தெரியவந்தது.

    அவர்களுக்கு இடையே ஆட்டோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் கண்முன்னே நடந்த கொலையை தடுக்க முன்வராமல், செல்போனில் படம் பிடித்த பொதுமக்களின் செயல் ஐதராபாத் வாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  #Hyderabad #ManStabbed #PublicView 
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. அபினவ் முகுந்த் சதமடித்து அசத்தினார். #RanjiTrophy #AbhinavMukund
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடக்கும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்தனர்.

    சந்தீப் 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 250 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    தமிழ்நாடு அணி சார்பில் எம்.மொகமது 3 விக்கெட்டும், விக்னேஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கவுசிக் காந்தி 24 ரன்னிலும், பாபா அபராஜித் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம், அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 79 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #RanjiTrophy #AbhinavMukund
    ×