search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல் மருத்துவமனை"

    • பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்
    • அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்தது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே மருத்துவமனையால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக x வலைதளப்பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

    அதில். "ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சை பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெற வந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

    இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆகவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
    • அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவரங்களுக்கு செல்போன் எண்: 94435 58594, www.edensdental.in தொடர்பு கொள்ளலாம்.
    • வேலைக்கு செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம்.

    நாகர்கோவில் :

    பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மருத்துவமனையில் உலகதரத் தில் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினக்ஸ்குமார் கூறியதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகதரத்திலான இம்ப்ளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதாவது ஒரு இடத்தில் பல் எடுத்தால், அந்த இடத் தில் முடிந்த அளவு சீக்கிரமாக பல் கட்டுவது நல்லது. இன்றைய கால சூழலில் வேலைக்கு செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம்.

    அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த இம்ப்ளான்ட் சிகிச்சை விளங்குகிறது. ஒரு பல் இல்லா இடத்தில் நிரந்தர பல் கட்டுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அருகில் உள்ள பற்களோடு சேர்த்து இல்லாத பல்லை கட்டுவது, மற்றொன்று பல் இல்லாத இடத்தில் இம்ப் ளான்டை வைத்து அதன் மீது பற்களை பொருத்துவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இம்ப்ளான்ட் பொருத்திய பின் 4 முதல் 6 மாதங்கள் கழித்து தான் பல் கட்ட முடியும். ஆனால் இன்றைய புதிய வகை இம்ப்ளான்டு நவீன சிகிச்சை முறைகள் மற்றும் நவீன உபகரணங்கள் ஆகியவற்றால் இம்ப்ளான்ட் சிகிச்சை அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ளாகவே பல் கட்டிவிடலாம். இந்த சிகிச்சை முறை எவ்வித சிரமமும் இல்லாமல் செய்யலாம். மேலும் அன்னபிளவு சம்பந்தமான அறுவை சிகிச்சைக்கு இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டவரும் எங்களது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 94435 58594, www.edensdental.in தொடர்பு கொள்ளலாம்.

    ×