search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Volleyball"

    சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன் இறுதிபோட்டிக்கும் முன்னேறியது. #ProVolleyball #ChennaiSpartans #KochiBlueSpikers
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் குவித்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 16-14, 9-15, 10-15, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன் இறுதிபோட்டிக்கும் முன்னேறியது. அத்துடன் லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் ருஸ்லான்ஸ் 17 புள்ளிகளும், நவீன்ராஜா ஜேக்கப் 13 புள்ளிகளும், ருடிவெரேப் 11 புள்ளிகளும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    புரோ கைப்பந்து போட்டியில் இன்று நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProVolleyball #ChennaiSpartans #KochiBlueSpikers
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் விளையாடும் கனடா வீரர் ரூடி வெர்ஹோப் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை ஸ்பார்ட்டன்ஸ் ‘லீக்’ ஆட்டத்தில் கொச்சியிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. சென்னையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் கொச்சி அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    நேற்று நடந்த முதல் அரை இறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-12, 15-9, 16-14 என்ற நேர்செட் கணக்கில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதி ஆட்டம் 22-ந்தேதி நடக்கிறது. #ProVolleyball #ChennaiSpartans #KochiBlueSpikers
    புரோ கைப்பந்தில் 2-வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. #ProVolleyball
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோதி வருகின்றன.

    முதற்கட்ட போட்டிகள் கொச்சியில் நடந்தது. இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த நிலையில் 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. கடைசி 3 லீக் ஆட்டங்கள் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும். 5 லீக்கிலும் வெற்றி கண்ட கோழிக்கோடு ஹீரோஸ் மற்றும் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் (4 வெற்றி), ஐதராபாத் (2 வெற்றி) ஆகிய அணிகள் ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் மல்லுகட்டுகின்றன.

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் ஷெல்டன் மோசஸ் தலைமையிலான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மும்பை வாலியை எதிர்கொள்கிறது. இதுவரை ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ள சென்னை அணி எஞ்சிய இரு லீக்கில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்து விடலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காண்பது சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும்.

    அதே சமயம் இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் தோற்று இருக்கும் மும்பை அணி வெற்றிக்கணக்கை தொடங்க போராடும். இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இதற்கிடையே இந்தியாவில் பெண்கள் கைப்பந்து போட்டியை ஊக்குவிக்கும் பொருட்டு இறுதி நாளில் (22-ந்தேதி) மாலை 5 மணிக்கு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புளு, மஞ்சள் என்ற பெயர்களில் இரண்டு அணிகள் களம் இறங்கும். மூன்று செட் வடிவத்தில் 15 புள்ளிகள் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ProVolleyball

    கொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அனல் பறந்தது. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி (மும்பை) அணியை எதிர்கொள்கிறது. கோழிக்கோடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
    ×