search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband wife"

    • மணிகண்டனுக்கும், செல்வமாலாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • மணிகண்டனின் சகோதரி பாப்பா காடுவெட்டியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு வந்துள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டி காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வமாலா (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதற்கிடையே மணிகண்டனின் சகோதரியான பத்தமடையை சேர்ந்த கணேசன் மனைவி பாப்பா (37) காடுவெட்டியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் செல்வமாலாவை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனும், பாப்பாவும் சேர்ந்து, செல்வமாலாவை தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக மணிகண்டன், அவரது சகோதரி பாப்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகனும் அவரது மனைவி வள்ளி செல்வமும் பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • நிலை தடுமாறி கீழே விழுந்த வள்ளிசெல்வம் படுகாயம் அடைந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி செல்வம் (வயது 52).

    இவர்கள் இருவரும் கடந்த 16-ந்தேதி பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே நெல்லை- தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே முயல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த வள்ளிசெல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வள்ளி செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
    • மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை.

    ஸ்மார்ட்போன் உலகம், தொலை தூரத்தில் வசிப்பவர்களை முகம் பார்த்து வீடியோ காலில் பேசும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரே குடும்பத்துக்குள் இடைவெளியை அதிகப்படுத்தியும் விடுகிறது. நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு நேரம் கிடைத்தாலும் கூட தங்கள் அறைக்குள் இருந்தபடி செல்போனிலேயே மூழ்கி பொழுதை கழிக்க வைத்துவிடுகிறது.

    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மட்டுமல்ல கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பான ஆய்வை நடத்தியது. இந்தியாவை பொறுத்தவரை திருமணமான தம்பதியர்களில் 88 சதவீதம் பேர் அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்கள் உறவை பாதிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். ஸ்மார்ட்போன் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் திருமணமான தம்பதிகளிடையே நடத்தை மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது திருமணமான இந்திய தம்பதியரில் 67 சதவீதம் பேர், தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும்போது கூட ஸ்மார்ட்போனுடன் இணைந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். ஸ்மார்ட்போன் காரணமாக தங்கள் மனைவியுடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக 66 சதவீத கணவர்கள் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும்போது தங்கள் மனைவி குறுக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை. செல்போனை பார்த்தபடியே மனைவியின் பேச்சுக்கு தலையாட்டுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    84 சதவீதம் பேர் தங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும், ஆனால் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும், செல்போன் பார்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதால் மனைவியுடன் குறைந்த நேரத்தையே செலவிட முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் மக்களை சோம்பேறிகளாக்குகின்றன என்பதற்கு முரணாக, 55 சதவீதம் பேர் தங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்க ஸ்மார்ட்போன் உதவுவதாக கூறியுள்ளனர். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு உதவியாக இருப்பதாகவும் 59 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    • அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை.
    • வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள்.

    தன் நலம் பேணாமல் குடும்பத்தினர் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் சுபாவம் கொண்டவர்கள் குடும்பத் தலைவிகள். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது பரிசுகளோ, இனிப்பு பண்டங்களோ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது தங்கள் நலனில் குடும்பத்தினர் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் விதைக்கும். மேலும் உற்சாகத்துடன் செயல்படவும் அவர்களை தூண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை. ஒப்பனை விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒப்பனை செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற மனக்கவலை அவர்களிடம் இருக்கும். அவர்கள் செய்யும் எளிய ஒப்பனையை பாராட்டினாலே குஷியாகிவிடுவார்கள். 'உன்னுடைய ஹேர் ஸ்டைல் வழக்கத்தைவிட ஸ்டைலாக இருக்கிறது, உன் முகமும் இன்னைக்கு பொலிவாக இருக்கிறது' என்று பாராட்டுவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.

    * புது ஆடை உடுத்தும்போது கணவர் ஏதாவது கருத்து சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் மேலோங்கும். அதனை புரிந்து கொண்டு 'இந்த ஆடை உனக்கு சூப்பராக இருக்கிறது, உன் வயதும் கொஞ்சம் குறைந்துவிட்டது போன்று தோன்றுகிறது' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    * திருமணமான பிறகு உடல் எடை சற்று அதிகரிப்பது இயல்பானதுதான். பெண்கள் பலர் அதனை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஒவ்வொரு நாளும் எடையை குறைக்கும் முயற்சிகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'நீ பயிற்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும் போலிருக்கே' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தும். உடல் எடையை இன்னும் குறைப்பதற்கான பயிற்சிகளில் தீவிரமாக களமிறங்கிவிடுவார்கள். உடற்பயிற்சியாளர்களின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதையும் அவர்களிடம் கூறிவிடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று மேற்கொள்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

    * உண்மையான வயதை காட்டிலும் வயதை சற்று குறைத்து பேசுவதும் பெண்களை உற்சாகப்படுத்தும்.

    * வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள். காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ துணையுடன் பயணம் மேற்கொள்வதும் அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். விடுமுறை காலங்களில் ஓரிரு நாள் வெளி இடங்களுக்கு சென்று வரும்படியான சுற்றுலா பயணங்களை திட்டமிடுங்கள். அவர்களின் பள்ளி, கல்லூரி பருவ காலத்தில் சென்றிருந்த இடமாக அது இருந்தால் இன்னும் சந்தோஷமடைவார்கள். தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆர்வமுடன் கேட்க தொடங்கினால் குதூகலமாகிவிடுவார்கள்.

    * பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை, அவர்கள் எதிர்பார்க்காத பரிசுகளை கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.

    • பெண்கள் அழகான நகைகளை பரிசாகப் பெற விரும்புகிறார்கள்.
    • பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்!

    நமக்கு நெருக்கமானவர்களிடம் நம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் மொழி பரிசு வழங்குவது. பரிசு என்பது 'காட்சி சின்னம்'. ஒரு பரிசை சிந்தனையுடன் தேர்ந்தெடுத்து அதை வாங்க முயற்சி செய்வது, பரிசைப் பெறுபவருக்கு உங்கள் அன்பைக் காட்டுகிறது. ஒரு நல்ல பரிசு மறக்கமுடியாததாகவும் பெறுபவரின் ஆர்வத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்க வேண்டும். நகைகள் விலைமதிப்பற்றவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், இது உலகளவில் மிகவும் பிரபலமான பரிசு யோசனைகளில் ஒன்றாகும். ஆண்களும் பெண்களும் அழகான நகைகளை பரிசாகப் பெற விரும்புகிறார்கள். இது ஒரு சிறந்த நினைவுச்சின்னமாகும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைலுக்கும் அழகான நகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!

    பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்! அதை தனித்துவமாகவும், மறக்கமுடியாததாகவும், காலமற்றதாகவும் மாற்றுவதை உறுதிசெய்யவும். ஒரு அழகான நகையின் காலத்தால் அழியாத கவர்ச்சியை எதுவும் வெல்ல முடியாது! ஒரு நகை பல ஆண்டுகளாக அணிந்து, தலைமுறைகளுக்கு அனுப்பப்படும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கான பரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் முயற்சியை நகைகள் பிரதிபலிக்கின்றன.

    பரிசளிப்பதற்காக மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் மற்றும் நெக்லஸ்களின் பல வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளை தேர்வு செய்யலாம். ராசி பதக்கங்கள் மற்றும் ரத்தினப் பதக்கங்கள் போன்ற சிலவையும் தனித்துவமானவை. ஒருவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் பொறிக்கப்பட்ட நகைகளும் தனித்துவமானவை.இதை தவிர நவீன ஆபரணங்கள் பலவும் தற்போது அதிகம் உள்ளன.

    குழந்தை பிறப்பு,பிறந்தநாள் மற்றும் திருமண நாள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக விழாக்களுக்கும் உறவுகளுக்கு நகை பரிசளிப்பது உங்களுக்கு அவர்களுடனான நெருக்கத்தையும் அன்பையும் காட்டுகிறது. பாலினம், உலோக நிறம், தயாரிப்பு வகை போன்றவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டலாம். நீங்கள் பரிசளிக்கும் நபரின் பாணி மற்றும் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய பரிசை ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.

    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல.

    ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.

    2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.

    3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

    4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.

    5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.

    6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)

    7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

    8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.

    9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.

    10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

    11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.

    12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

    13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.

    • சுடலைமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக சுயம்பு கனி தெரிவித்துள்ளார்.
    • பாதிரியார் தலைமையில் நடு பிள்ளையார்குளத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள் மனு அளித்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி சுயம்பு கனி ( வயது 38). இவர் இன்று தனது குடும்பத்தினருடன் வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.அதில் கூறி யிருப்பதாவது:-

    வெளிநாட்டில் தவிப்பு

    எனது கணவர் சுடலை மணி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 1 வருடமாக அவரிடம் இருந்து எங்களுக்கு பணம் வரவில்லை. எனவே அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தீராத வயிற்று வலியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தெரிவித்தார்.

    மேலும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமலும், சம்பளம் கொடுக்காமலும் உள்ளனர். எனவே அங்குள்ள தூதரகம் மூலம் எனது கணவரை மீட்டு தரவேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    பொதுமக்கள் மனு

    ராமையன்பட்டி ஊராட்சி அனைத்து சமுதாய பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் ஊராட்சி மன்ற கட்டிடம் பொது இடத்தில் உள்ளது. அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏரா ளமானோர் பயனடைந்து வருகிறார்கள். அங்கு வைத்து சமத்துவ பொங்கல், கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அந்த மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் குழிகள் வெட்டி மரக்கன்றுகள் நட்டுள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யுள்ளனர்.

    சாலை வசதி

    மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளத்தை சேர்ந்த பாதிரியார் தலைமையில் கிறிஸ்துவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கிறிஸ்தவ சபை கூட்டம் நடத்த தடையில்லா சான்று கேட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை வழங்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    மூலைக்கரைப்பட்டி துத்திக்குளம் 15-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில் எங்கள் பகுதி சுடுகாட்டுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    • விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

    சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

    சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

    'மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பிடுகிறது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபு. அந்த வகையில் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் ''திருமணம்'' என்று அழைக்கப்படுகிறது. திருமணம் என்றாலே அனுசரித்து வாழ்வது தான். இதில் தம்பதிகள் நம்முடைய வாழ்க்கை தத்துவமான ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதன் மூலம் இல்லறம் நிலைத்து நிற்கும். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று குடும்ப அமைப்பு. இவை சிதறாமல் பேணிக்காப்பது இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. பொதுவாக பெண்கள் உணர்வு பூர்வமாகவும், ஆண்கள் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பார்கள். குடும்ப உறவுக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. அப்பாவின் அரவணைப்பும், அம்மாவின் அன்பும் தேவை. இதில் சுயநலம் என்பது இருக்க கூடாது. 'விட்டு கொடுப்பதால் கெட்டு போவதில்லை' என்பதற்கு ஏற்ப அனைவரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ பழக வேண்டும்.

    'விவாகரத்துக்கு நிதி நிலைமை, சுதந்திரமாக இருக்க முடியாத நிலை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களை பார்ப்பதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் பிறருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களும் கூறப்படுகிறது. இதனால் எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் நாங்கள் கூறுவது பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பேச கூடாது. அத்துடன், தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கிடைத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சண்டை சச்சரவுகள் இன்றி விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

    வாய்ப்பும் நேரமும்

    விவாகரத்து என்பது தம்பதிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே இல்லை. அவர்களுக்கு பெற்றோர்கள், குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகும். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தினரையும் தாண்டி விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள். விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். 'விவாகரத்து' என்ற வார்தையை சண்டை போடும்போது மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டாம். நாளடைவில் இந்த வார்த்தைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து அதனை செய்வதற்கு தூண்டலாம். சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாம். 'குரங்கில் இருந்து மனிதன் வந்தான்' என்பது நமக்கு கற்று தந்த பெரிய விஷயம் என்னவென்றால், மனிதன் மாறுவான் என்பதுதான். எனவே மனிதன் நிலையாக இருப்பதில்லை. எனவே விவாகரத்து என்ற முடிவை தம்பதிகள் எடுக்காமல் மாறுவதற்கான வாய்ப்பையும், நேரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    விவாகரத்து வழக்குகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தேவி நட்ராஜ் கூறும்போது, 'ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    குறிப்பாக தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கோர்ட்டு கூறுகிறது. அத்துடன், மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை கோர்ட்டு தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவாகரத்து பெற்றுத்தரப்படுகிறது. ஆனால் இப்படியே போகாமல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும். இதற்கு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்' என்றார்.

    • முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது.
    • உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    பொதுவாக கணவன், மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டால் மனைவி கோபித்து கொண்டு, தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக கணவர்கள், மனைவியை விட்டு பிரிந்து தாயார் வீட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. இதை நிரூபணம் செய்யும் வகையில் நாங்குநேரி அருகே சம்பவம் அரங்கேறி உள்ளது.

    நாங்குநேரி அருகே உள்ள தட்டான்குளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கோமதி (வயது63). சுப்பையா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

    இவர்களது மகன் முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. அவர்கள் இருவரும் அதே ஊரில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகனுக்கும், அவரது மனைவி உத்ராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் மனைவியிடம் கோபித்து கொண்டு, அவரை விட்டு பிரிந்து தனது தாயார் கோமதி வீட்டிற்கு துணிமணிகளுடன் சென்று விட்டார்.

    சம்பவத்தன்று கோமதி தனது வீட்டில் மகன்கள் முருகன், சித்திரை வேலு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதையடுத்து முருகன் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஒலிமுத்து உள்பட 4 பேரும் சேர்ந்து, கோமதி, அவரது மகன் சித்திரை வேலையும் கம்பால் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த கோமதி, அவரது மகன் சித்திரவேல் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒலிமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
    • எந்தவொரு காரியத்தையும் துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை.

    கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

    ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும். மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம்.

    மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

    தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும்.

    பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

    சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.

    எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    • பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.
    • எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது.

    மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசாத காரணத்தால் பல உறவுகள் பிரிவுகளை சந்திக்கின்றன. மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ என்ற பயத்தாலும், தயக்கத் தாலுமே பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.

    எந்த உறவிலும் கருத்து பரிமாற்றம் அவசியமான ஒன்று. இதன் மூலம் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். சரியான நேரத்தில் வார்த்தைகள் மூலம் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்கும். உறவுகளுக்குள் கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில காரணங்கள் இங்கே:

    ஒருவருடன் மனம் திறந்து பேசுவது மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மூலமாக அவருடைய ஒழுக்கம், மதிப்பு, விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அந்த நபருடனான உறவை மேலும் இணக்கமாக்கலாம். கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதால், தவறான புரிதல்களைத் தவிர்க்க முடியும். எனவே உங்கள் மனதில் தோன்றும் நியாயமான எண்ணங்களை வெளிப்படையாக சொல்லுங்கள்.

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை மற்றவர் உணராமல், வருத்தப்படும் படி நடந்து கொள்ளலாம். வெளிப்படையான கருத்து பரிமாற்றத்தால், இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான, நேர்மறையான மற்றும் திருப்திகரமான உறவை உருவாக்க முடியும். எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது. குறுஞ்செய்தி மூலம் விவாதிப்பதையும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

    சரியான நேரத்தைக் கண்டறிந்து பேசுவது முக்கியமானது. அன்பு, பாராட்டு மற்றும் மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகளை அனைவரும் விரும்புவார்கள். எந்த உறவிலும் இத்தகைய உணர்வுகளை வெளிப்படையாக பகிர்தல் முக்கியமானது. அவ்வாறு இல்லாமல் உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்கள் அவர்களாகவே புரிந்துகொள்வார்கள் என்று சொல்லாமல் இருப்பது கூடாது. குறிப்பாக கணவன்-மனைவி உறவில் இது போன்ற உணர்வுகளை துணையுடன் பகிர்ந்துகொள்வது உறவை மேலும் வலுப்படுத்தும்.

    அன்பையும், விசுவாசத்தையும் அதிகரிக்கும். இந்த வகையான உணர்வுகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறையான உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கும். பிரச்சினைகளை சேர்ந்து எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.

    காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
    கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு முனைப்பு காட்டுவார்கள். தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை துணையிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள். குடும்ப விஷயங்களை போலவே நாட்டு நடப்புகளையும் பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

    அன்றைய நாளில் காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் தான் பேசுவதை துணை காது கொடுத்து கேட்கிறாரா? என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் பேச்சை ரசித்து கேட்க முடியாமல் அவஸ்தைபடுவதை உடல் மொழியால் வெளிப்படுத்தினாலும் கூட அதை பற்றி கவலை கொள்ளாமல் சொல்ல விரும்பிய விஷயத்தை கூறி விடுவதிலேயே குறியாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

    எந்தெந்த விஷயங்களையெல்லாம் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற வரைமுறை இருக்கிறது. தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி துணையிடம் கூறியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வெளிப்படையாக பேசும் விஷயங்களே சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

    குடும்ப நிம்மதியை குலைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. காதல் விஷயங்களை துணையிடம் பேச வேண்டியதில்லை என்ற கருத்தை மன நல ஆலோசகர்கள் முன்வைக்கிறார்கள். அதுவே பெரும்பாலானவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு பெண் தன் பழைய காதல் கதையை கணவரிடம் கூற வேண்டியதில்லை என்பது போலவே, கணவரும் தன் காதல் அனுபவத்தை பகிரக்கூடாது.

    இப்படித்தான் திருமணமான புதிதில் ஒருவர் தன் மனைவியிடம் கல்லூரி காலத்தில் தொடர்ந்த நட்பு காதலாக மாறிய கதையை சொல்லி இருக்கிறார். தனக்கு அந்த பெண் எழுதிய கடிதங்களையும் மனைவியிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்ததும் மனைவிக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அந்த கடிதங்களை கிழித்து எறிந்தவர் கணவருடன் கடுமையாக சண்டை போட்டுவிட்டார். இப்போதும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பாரோ என்ற சந்தேகம் மனைவிக்கு தலைதூக்க, பிரச்சினை பெரிதானது. கணவரிடம் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கணவர் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.

    எனவே யாரிடம் எந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை அறிந்து அதற்குத் தக்கபடி பேச வேண்டும். எந்த விஷயத்தை எந்த நேரத்தில் பேச வேண்டும் என்ற வரைமுறையும் இருக்கிறது. அந்த சமயத்தில் பேசினால்தான் அதற்கு மதிப்பு கூடும். துணையின் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். கோபத்தில் ஒருபோதும் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது.

    சிலர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை வீசிவிடுவார்கள். கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதை நினைத்து வருந்து வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், கோபமாக இருக்கும் சமயத்தில் வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டும். சிலரோ, எதை பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே அருவி போல் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இதனால் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு காலாகாலத்துக்கும் அவர்கள் உறவில் விரிசல் விழுந்து விடும்.

    பெண்களை கற்பூர புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதுண்டு. எதையும் ‘கப்’பெனப் பிடித்துக் கொள்வார்கள். கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    துணை கோபமாக இருக்கும்போது, உங்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் பொறுமையாக அவரிடம் எடுத்து சொல்லுங்கள். அவரை போலவே நீங்களும் கோபப்பட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான். எனவே துணையிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.
    ×