search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hospital"

    • நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் மருந்துகளை பரிந்துரைத்ததும், ஊசிசெலுத்தியதும் தெரியவந்தது
    • யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் தகவல்

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் டாக்டர்கள் இன்றி முறையாக மருத்துவம் பயிலாத 2 பேர் ஆஸ்பத்திரி நடத்தி வருவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார்கள் சென்றது.

    அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மீரா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் குறித்த எந்தவித விவரமும் இல்லை.

    ஆஸ்பத்திரியில் நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் டாக்டர் பெயரில் மருந்துகளை பரிந்துரைத்ததும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறையினர் சூலூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (ெபாறுப்பு) மீரா கூறியதாவது:-

    மயிலம்பட்டி பகுதியில் 24 மணி நேர மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டது. இந்த மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பின் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வழக்குப்பதிந்த பின் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

    தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    • எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
    • காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் பெயரளவிற்கே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றி எடுத்து கூறினார்.

    தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான பிறகு, அந்த நடைமுறைகள் செயல்படுத்த மூன்று மாத காலமாகும் அதன் பின்னரே தாலுக்கா மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் முருகேசன் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக சங்கம் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வரும் 3-ந்தேதி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர கோரி கடையடைப்பு போராட்டமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    • இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
    • 115 தம்பதியினர் பயனடைந்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார் பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் உள்ள சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. முகாமில் தொடர்ச்சியாக கரு சிதைவால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ள வர்கள், விந்தணு குறை பாடு உள்ளவர்கள், கர்ப் பப்பையில் நீர்க்கட்டி உள்ள வர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோத னைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. மேலும் ஆண், பெண்களுக்கான குழந்தையின்மை பிரச்சி னைகள், கர்ப்பப்பை சம்பந் தமான பிரச்சினைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல்,

    ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைக ளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதில் 115 தம்பதிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

    உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் சகுந்தலா கட்ட பொம்மன், உசிலம்பட்டி நாட்டாத்தி நாடார் உற வின்முறை தலைவர் எஸ்.எம்.எஸ்.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, செயற்கை கருத்த ரித்தல் கிசிச்சைப்பிரிவு மேலாளர் ஏ.பி.ஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவ லர்கள் சலீம், சேக் பரீத், தீபன் மற்றும் கார்த்திக் ஆகி யோர் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    • டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது,

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை பகுதியை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் சென்னையி லிருந்து வருகை புரிந்தார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு அறிகுறிப்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அரசு மருத்துவ மனை டெங்கு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் பெங்களூரில் இருந்து வருகை புரிந்தவருக்கும், சீர்காழி சேர்ந்த மற்றொருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தததை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சீர்காழி அரசு மருத்துவம னையில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது.

    டெங்கு பாதிப்பு அடுத்து சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள் தேங்காய் ஓடுகள் , பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தே ங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறு த்தியுள்ளது.

    • தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், வர்த்தக பிரமுகர் கருணாநிதி, சதுரங்க கழக மாநில இணைச்செயலாளர் பாலகுணசேகரன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் சாந்தகுமார் கருணாகரன், நேசக்கரம் தன்னார்வலர் குழு நிர்வாகிகள் எழிலரசன், பெலிக்ஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்த மனுவில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவர் (எம். டி) பணியிடம் காலியாக உள்ளது.

    இதற்காக நீடாமங்கலத்தில் இருந்து மாற்றுப் பணியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பொது மருத்துவர் ஒருவர் மன்னார்குடிக்கு வந்து செல்கிறார்.

    வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்கள், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த 3 நாட்களிலும் பல நேரங்களில் பொது மருத்துவர் இல்லாத நிலையே நீடிக்கிறது.

    இதனால், மாரடைப்பு ஏற்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து, அடுத்த கட்டமாக உரிய மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இசிஜி எடுத்து, அது தொடர்பான வழிகாட்டல் செய்வதற்கூட முடியாத நிலை உள்ளது.

    இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெறவும் முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும், இம்ம மருத்துவமனையில் மாதத்துக்கு சராசரியாக 300 மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சை, மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

    அதுபோல் , மருத்துவமனைக்கு அன்றாடம் 1000 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 350 உள்நோயாளிகள் அன்றாடம் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் பொது மருத்துவர் இல்லாமல், குறித்த நேரத்துக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நோயாளிகளின் நலன் கருதி, நிரந்தரமாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பொது மருத்துவர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ மனையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ மனையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

    மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கேரள பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது. மாணவிகளின் அத்தப்பூ கோலம் அனைவரையும் கவர்ந்தது.முடிவில் அனைவருக்கும் ஓணம் பண்டிகை விருந்தாக கேரள உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின், வளாக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிர்வாகி பிரசன்னா, செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி மற்றும் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
    • போதிய அளவில் மருந்து இருப்பு உள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவர், பணியாளர் வருகைப் பதிவேடு , பிரசவ வார்டு, பல் மருத்துவ பகுதி, பெண்கள் குழந்தைகள் பிரிவு, பதிவு சீட்டு வழங்கும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, மக்களை தேடி மருத்துவ பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் போதிய அளவில் மருந்து இருப்பு உள்ளதா ? எனவும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர்கள் ராஜசேகர், நிர்மல் குமார் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
    • மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
    • நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

    மேலும் டேட்டா புளோ, எச்.ஆர்.டி சான்றிதழ்களில் சான்றோப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேற்படி பணியா ளர்களுக்கு உணவு படி ,இருப்பிடம், விமான பயண சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை வேலை அளிப்ப வரால் வழங்கப்படும்.

    பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்க ளை அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலை பேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ( 9566239685, 6379179200, 044- 22505886/ 22502267 ) .

    மேற்குறிப்பிட்ட பணிகளு க்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தஞ்சாவூரில் நாளை ( புதன்கிழமை ) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இந்த முகாமுக்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொருத்து முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35400 மட்டும் வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04362-237037-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
    • கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரின் நேரடி கவனத்திற்க்கு வாட்ஸ் அப் (82487 74852) எண் மூலம் அளிக்கபடுவதனை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பிரித்தனுப்பப்பட்டு தீர்வுகாணும் வகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு, வளாக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சாரா செலின் பால், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×