search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hospital"

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் ஏற்றி தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயிலடி மேம்பாலத்தில் இருந்து குத்தாலம் செல்லும் இறக்கத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி முகவர் வெங்கட்ரமணன், கூறைநாட்டைச் சேர்ந்த சுகுமார் உள்பட 3 பேர் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி உடனே விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமாகும் என்பதால் தன்னுடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியின் காரில் விபத்து ஏற்பட்டவர்களை ஏற்றி கொண்டு அதே காரில் தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    மூன்று பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
    • தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத பழைய பிணவறையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலா வதியான மருத்து வமனை பொரு ட்கள். மருத்துவமனையில் தேவையற்ற பொருட்களை வைத்திருந்த அறை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.அரசு மருத்துவமனை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
    • மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை.

    காசா:

    இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 37-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    வான்வழி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-ஹமாஸ் அமைப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டி ஆகிய மூன்று பெரிய ஆஸ்பத்திரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அங்கு காயம் அடைந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அல்-ஷிபா ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு துப்பாக்கி சண்டை நடந்தது. ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருவதால் நோயாளிகள், தஞ்சம் அடைந்தவர்கள் தவிப்புக் குள்ளாகி இருக்கிறார்கள்.

    ஏற்கனவே காசாவில் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் தற்போதைய இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் இரண்டு பெரிய ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மிகப்பெரிய மற்றும் முக்கிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவில் எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது.

    ஜெனரேட்டர்கள் இயங்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த 45 குழந்தைகள் உள்ளன. அதேபோல் அல்-குத்ஸ் ஆஸ்பத்திரியும் முடங்கி உள்ளது.

    இது தொடர்பாக அல்-ஷிபா மருத்துவமனை இயக்குனர் கூறும்போது, மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை. காயம் அடைந்து வருபவர்களுக்கு முதல் உதவி தவிர வேறு எந்த சிகச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சையும் தேவைப்படுவோர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றார்.

    இன்குபேட்டரில் இருந்து குழந்தைகள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிபாவில் ஒரு மோசமான ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது. மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள், ஏற்கனவே சிக்கலான சூழ்நிலைகளை மோசமாக்கியுள்ளன. அல்-ஷிபா மருத்துவமனை முற்றிலும் செயல்படவில்லை.

    இது வருத்தம் அளிக்கிறது. அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம், தண்ணீர், இணைய தளம் இல்லை. இதனால் அத்தியாவசிய உதவியை வழங்குவதற்கான எங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்கு 300 லிட்டர் எரிபொருள் வழங்கியதாகவும், ஆனால் அதை ஹமாஸ் அமைப்பு தடுத்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    அல்-ஷிபா மருத்துவமனை கீழே ஹமாசின் நிலத்தடி கட்டமைப்பு செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே அல்-ஷிபா மருத்துவ மனையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். 17 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜபாளையம்

    மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் ராஜ பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குழந்தை கள், முதியவர்கள் என பொதுமக்கள் என பலரும் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ராஜ பாளை யம்- தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் எம்.எல்.ஏ தங்க பாண்டியன் ஆய்வு மேற் கொண்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை முடுக்கி விட்டார்.

    ஆய்வின்போது தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ராஜபாளையம் தொகுதி யில் அதிகளவில் காய்ச்ச லால் குழந்தைகளும் பொது மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது. நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர் களிடம் அவர்களுக்கு சாதா ரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளி களுக்கும் அரசு மருத்துவ மனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளி களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. குழந்தை களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிசிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது, அந்த பணிகளை தங்கப் பாண்டி யன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

    தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப் பணித்துறை உதவிப் பொறி யாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப் பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் காளிய ம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 62). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலத்தம்பாடி பகுதியில் இருந்து பருத்திச்சேரி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக லோடு ஏற்றி வந்த டிராக்டர் நந்தகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம்.
    • மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்கக்கூடியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவ மனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் 'கோவிட் சிறப்பு வார்டு' கட்டிடம் கட்டப்ப ட்டது.

    இந்த கட்டிடத்தை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசும்போது, திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம். ஏழை எளியவர்கள் அதிகமா கவும், குடிசைகள் வீடுகள் நிறைந்த மாவட்ட மாகும். எனவே இந்த தொகுதியின் வளர்ச்சிதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இந்த மருத்து வமனையை பொருத்தவரை ஏழை எளிய மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்க கூடியது. எது தேவை என்று கேட்கும் பட்சத்தில் நிதி ஒதுக்கி தருவேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கோபால், இணை இயக்குநர் மருத்துவர் சிவக்குமார், தலைமை மருத்துவர் ரேணுகா, மருத்துவர்கள் வினோத் குமார், சக்ரவர்த்தி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சி.பி.ஜி. அன்பு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சம்பத், நன்னிலம் நகர அ.தி.மு.க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 7-ந் தேதி இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
    • காயம் அடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர்க ளை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்கொ ள்ளையர்கள் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொரு ட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்குத லில் காயமடைந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பே ட்டையைச் சேர்ந்த கோடி லிங்கம் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களை பாஜக மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் மாவட்ட செயலாளர் விஜேயந்திரன், விவசாய அணித் தலைவர் சின்னப்பிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை மூலமாக மத்திய அரசிடம் பேசி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்து தர நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில மருத்துவ அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி. மற்றும் செயலாளர் மரு.எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரின் அறிவுறுத்தல்படி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதியின் வழிகாட்டுதல் படி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வின் ஆலோசனை ப்படி அண்ணா பிறந்தநாள் மற்றும் கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி சார்பில் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்ட அமைப்பாளர் திவாகரன் சுபாஷ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் தனலஷ்மி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் வீரராகுல் (திருத்துறைப்பூண்டி), அரவிந்தன் (மன்னார்குடி), ஒன்றிய துணை தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொகுதி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    • நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் மருந்துகளை பரிந்துரைத்ததும், ஊசிசெலுத்தியதும் தெரியவந்தது
    • யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் தகவல்

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் டாக்டர்கள் இன்றி முறையாக மருத்துவம் பயிலாத 2 பேர் ஆஸ்பத்திரி நடத்தி வருவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார்கள் சென்றது.

    அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மீரா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் குறித்த எந்தவித விவரமும் இல்லை.

    ஆஸ்பத்திரியில் நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் டாக்டர் பெயரில் மருந்துகளை பரிந்துரைத்ததும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறையினர் சூலூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (ெபாறுப்பு) மீரா கூறியதாவது:-

    மயிலம்பட்டி பகுதியில் 24 மணி நேர மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டது. இந்த மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பின் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வழக்குப்பதிந்த பின் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

    தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    ×