search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. ஆய்வு"

    • ஆய்வின்போது உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைகளை கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
    • கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ.விடம் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடையநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. விடம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு பாய்ல்ஸ் அப்பாரட்டஸ் என்ற கருவியும், ஸ்கேன் எடுப்பதற்கு அல்ட்ரா சோனோகிராம் அப்டாமன் என்ற கருவியும் அவசரமாக தேவை ப்படுவதால் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அந்த கருவிகள் வாங்குவதற்கு நடவடி க்கை எடுப்பதாக கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். ஆய்வின் போது, தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன் மற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜபாளையம்

    மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் ராஜ பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குழந்தை கள், முதியவர்கள் என பொதுமக்கள் என பலரும் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ராஜ பாளை யம்- தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் எம்.எல்.ஏ தங்க பாண்டியன் ஆய்வு மேற் கொண்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை முடுக்கி விட்டார்.

    ஆய்வின்போது தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ராஜபாளையம் தொகுதி யில் அதிகளவில் காய்ச்ச லால் குழந்தைகளும் பொது மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது. நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர் களிடம் அவர்களுக்கு சாதா ரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளி களுக்கும் அரசு மருத்துவ மனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளி களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. குழந்தை களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிசிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது, அந்த பணிகளை தங்கப் பாண்டி யன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

    தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப் பணித்துறை உதவிப் பொறி யாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப் பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்/ அப்போது சாலை விரிவாக்கம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டார்.

    பின்னர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

    ஆய்வின் போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன், நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • மற்ற பகுதிகளை காட்டிலும் ஒகேனக்கல் பகுதியில் மின்தடை ஏற்படாதவாறு மின்சார வாரியம் மற்றும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒகேனக்கல், 

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்று நிலையத்தில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டு, நாள்தோறும் இரு மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவுகள் குறித்து கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக முறையாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

    இதற்கான காரணம் ஒகேனக்கல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை என கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    ஒகேனக்கல் பகுதிக்கு இரண்டு வழிப்பாதையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றில் ஏதேனும் ஒன்று பழுதடைந்தால் அதனை சரி செய்வதற்காக சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊழியர்கள் வர வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற பகுதிகளை காட்டிலும் ஒகேனக்கல் பகுதியில் மின்தடை ஏற்படாதவாறு மின்சார வாரியம் மற்றும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்து மின்வாரிய அலுவலர், கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி நிர்வாகப் பொறியாளர் முருகன், மாவட்டத் தலைவர் செல்வகுமார், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.
    • அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அந்தியூர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்து வெயிலின் தாக்க த்தை குறைத்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    குறிப்பாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், பூக்கடை கார்னர் பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நின்றும் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.

    இது குறித்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் அந்தப் பகுதி மக்கள் தொலைபேசி மூலம் கூறினர். இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் குண சேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சிவலிங்கம் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வர வழைத்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்

    மேலும் தூய்மை பணி யாளர்கள் மூலம் மழை நீர் வடிகாலில் உள்ள அடை ப்புகளை சரி செய்து மழை நீர் வடிகாலில் செல்லும் வகையில் சரி செய்யப் பட்டது.

    குறுகலாக இருப்பதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழை நீர் வரும்போது அடைப்பு ஏற்பட்டு மழை நீர்ஆனது சாலையிலே தேங்கிநிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த மழைநீர் வடிகால் அங்கு அகலம் படுத்தும் படி அதி காரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். அதனை சரி செய்வதாக அந்த பகுதி மக்களிடம் எடுத்து கூறி தண்ணீரை சரி செய்த பின்னரே அந்த இடத்தில் இருந்து எம்.எல்.ஏ. சென்றார்.

    அப்போது அந்தப் பகுதி சேர்ந்த முத்து, நேரு, ஜிவா, செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

    • துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேம்படுத்த துறை அதிகாரிகளுடன் தேவராஜி எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம..அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி. எஸ்ஹ பெரியார்தாசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் பொது சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்தும் பழுதடைந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் எம்.எல்.ஏ. ஏறியும் ஆய்வு செய்தார். அப்போது யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் மேற்பார்வையாளர் பரமசிவன், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை இமாக்குலேட், தெற்குவீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் சுப்பையா, துணைத் தலைவர் சண்முகராஜ் உட்பட அரசு அலுவலர்கள், கிராமமக்கள் உடன் இருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்று வரும் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்
    • கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு வசதியாகவும், மேலும் பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தை செப்பனிடவும், கூடுதல் கழிப்பறை கட்டவும், குடிநீர் வசதி வேண்டியும் பொதுமக்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர்ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் முயற்சியால் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலையில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அருகில் உள்ள குட்டையை தனியார் நிறுவன உதவியுடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • வாக்காளர் சிறப்பு முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கலாம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் மேற்கு ஒன்றியம் மணலூர் ஊராட்சியில் நடந்த புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், மற்றும் வாக்காளர் சேர்ப்புக்கான முகவர்களிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் ஆய்வு செய்தார். இதில் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், வக்கீல் திருப்புவனம் மதிவாணன், கிளைச் செயலாளர்கள் பீசர்பட்டினம் ராமச்சந்திரன், கீழடி சதாசிவம், மணலூர் பிரபு, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அருகே மழை நீர் சூழ்ந்த வீடுகளை முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது.

    பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பரமக்குடி அருகே உள்ள கீழப் பார்த்திபனூர், இடையர் குடியிருப்பு, சூடியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்களில் அள்ளி வெளியேற்றினர். வீடுகளை விட்டு வெளியே வராமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    இதுகுறித்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் தமிம்ராஜா ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் மின் வாரிய அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் மின் விநியோகம் செய்யவேண்டும் என எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    • புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என உறுதி
    • கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியை கதறி அழுதபடி புகார் செய்ததையடுத்து நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பெருமாள் கோயில் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது என தலைமை ஆசிரியர் சாந்தி, பேருராட்சி வார்டு சபா கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி அழுதபடி புகார் செய்தார்.

    இந்த சம்பவம் அனைத்து சமூக வலைத்திலும் பரவியது. இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில், கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டது.

    இதையடுத்து முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியை சாந்தியிடம், கட்டிடங்கள் குறித்து ஏன்? என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என வினவினார்.

    தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என தலைமை ஆசிரியரிடம் உறுதியளித்தார்.

    அப்போது ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், வழக்கறிஞர்வெ ங்கடேசன், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், பொருளாளர் சிந்தியா செல்வம், வார்டு கவுன்சிலர்கள் சுகுணாகுமார், சௌமி யாகமல், இளைஞணி ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தடுப்பணை அமைக்க கோரும் பகுதியை எம்.எல்.ஏ .நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தடுப்பணை அமைத்தால், பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூர் ஊராட்சி, சுண்ணாம்புபள்ளம் ஓடை குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஷ்வரனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை அமைக்க கோரும் பகுதியை எம்.எல்.ஏ .நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து கண்காணிப்பு பொறியாளருடன் தருமபுரி எம்.எல்.ஏ, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இப்பகுதியில் தடுப்பணை அமைத்தால், பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் இந்த திட்டம் அமையும் என்பதை வலியுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் – கமலேசன், பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் மாது மற்றும் பெரியண்ணன், கிருஷ்ணன், செல்வராஜ், காந்திராஜ் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    ×