search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    சண்முகையா எம்.எல்.ஏ. பள்ளியில் ஆய்வு செய்த காட்சி.

    ஓட்டப்பிடாரம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் பொது சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்தும் பழுதடைந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் எம்.எல்.ஏ. ஏறியும் ஆய்வு செய்தார். அப்போது யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் மேற்பார்வையாளர் பரமசிவன், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை இமாக்குலேட், தெற்குவீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் சுப்பையா, துணைத் தலைவர் சண்முகராஜ் உட்பட அரசு அலுவலர்கள், கிராமமக்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×