search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helmet"

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார்.
    • ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார். இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார்.

    சேலம்:

    சேலம் அமானி கொண்ட லாம்பட்டி காட்டூரைச் சேர்ந்தவர் மோகன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செய லாளரான இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார். அங்கிருந்த பணியாளர் வாகனத்திற்கு 15 ரூபாய் மற்றும் டோக்கன் வழங்கினார்.

    அப்போது வண்டியில் ஹெல்மெட் உள்ளது என மோகன் கூறினார். அதற்கு பணியாளர் ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார்.

    இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெல்மெட்டுக்கு கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்

    சேலம் குமரகிரியில் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். சேலம் மாநகர காவல் துறை சார்பாக 50 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல்நிலையம், லயன்ஸ் சங்கம் மற்றும் ஜெசிஐ இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அம்மாபேட்டையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன் சங்க நிர்வாகிகள், தலைவர் முரளி, செயலாளர்வேல்மணி, பொருளாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் நைனா குண சேகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அம்மாபேட்டை காவல்உதவி ஆய்வாளர் சேகரன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தியும், போதையில் பயணம் செய்தல், வாகனங்களில் அதிக சுமை ஏற்றி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல், ஓடும் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதையும் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

    பேரணி நால்ரோட்டில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியின் இறுதியில் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு லயன் சங்கம் சார்பில் முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது. இதில் ஜெசிஐ நிர்வாகிகள் அமுதன், முத்துகுமார், பாலாஜி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
    • ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் அருகே இன்று ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

    காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

    இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம்.

    மாவட்டத்தில் தற்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பது எங்களுக்கு நோக்கமல்ல.

    ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒரு உயிரின் மதிப்பு விலை மதிப்பற்றது.

    இதற்காகத்தான் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

    அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்களுக்கு உடனுக்குடன் இரட்டிப்பு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளேன் .

    அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலும் விதிமுறை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பாரபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படுகிறது.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் விபத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இனி அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். உயிரிழப்பை தடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து போக்கு வரத்து காவலர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். செல்லும் வழியில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் இவாஸ் நலச்சங்கம், கும்பகோணம் ரத்ததான டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தெப்பக்குளத்தில் முடிவடைந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விபத்தில்லா பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் சுலைமான் சேட்டு, இவாஸ் நல சங்க நிர்வாகக்குழு அப்துல் மாலிக் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓ.என்.ஜி.சி மற்றும் திருவாரூர் காவல்துறை ஆகியவை இணைந்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் சாலை விதிகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்து வந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் டீசர்ட் வழங்கப்பட்டது.

    ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.

    இதில் திருவாரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், திருவாரூர் நகர சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஓ.என்.ஜி.சி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் முதன்மை பொது மேலாளர் சிவசங்கர், துணை பொதுமேலாளர்கள் தியாகராஜன், வேனு கோபால், சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர்.

    தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.

    • விபத்தில்லா கோவை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்
    • விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் .பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 'விபத்தில்லா கோவையை உருவாக்கும் நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு வருகிறது.

    போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார் வையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனைச் சாவடி, சரவணம்பட்டி - துடியலூர் சந்திப்பு, ரத்தினம் கல்லூரி அருகே, பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு, நேரு கல்லூரி அருகே, கிருஷ்ணா கல்லூரி அருகே பாலக்காடு ரோடு, சாய்பாபா கோயில் அருகே, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 1,155 பேர் சிக்கினர். இதில் 548 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 208 நபர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். 1,155 வாகன ஓட்டிகளுக்கும் அந்தந்த சிறப்பு வாகனத் தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், ஹெல்மெட் அணிந்து சென்ற 399 இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும்' எனபோலீசார் தெரிவித்தனர்.

    • சீர்காழி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வருபவர்களை வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர் இதில் தலைக்கவசம் மற்றும் வாகன காப்பீடு இல்லாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    மேலும் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தில் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

    சீர்காழி நகர்பகுதியில் மட்டும் 150 இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணம் மற்றும் காப்பீடு, தலைக்கவசம் அனியாதவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது.

    • நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விதிமுறைகளை மீறிய 563 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த வாகன ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உரிமம் ரத்து

    கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர பகுதி களில் போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாக கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
    • இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி களில் விபத்துகளை குறைக்க வும், போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாகவும் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    அபராதம்

    அதன்பேரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்கும் பொருட்டு மாநகரின் பல்வேறு இடங்களிலும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி விதிமு றைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். இதனைப்பார்த்த போலீசார் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    20 இடங்களில் வாகன சோதனை

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பழையபேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளம் குளக்கரை சாலை, டவுன் ஆர்ச் பகுதி, ஈரடுக்கு மேம்பால கீழ்பகுதி, சந்திப்பு, வண்ணார்பேட்டை, புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

    அப்போது ஏராளமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாமலும் சென்றதை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை பிடித்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.

    வண்ணார்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

    ×