search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டு பிரசுரம்"

    • அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, சுற்றுச்சூழல் துறை, திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்க விழா நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமை தாங்கினார். பொறியாளர் பிரதான் பாபு, தேசிய பசுமைப்படை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    இந்த தீபாவளியில் அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வயதான வர்கள், குழந்தைகள், குடிசை வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அரசு அறிவித்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன், ஈஸ்வரன், தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    • புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.
    • மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மன்னார்குடி:

    மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு பூந்தோட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 285 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உலகராஜ், சிவராஜ் ஆகியோர் முது கலை இயற்பியல் ஆசிரியர் அன்பரசு வழிகாட்டுதலில், சமூக வலைதளங்களில் ஏற்படுகிற கற்றல் குறைபாடு எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

    இந்த கட்டுரை புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.

    மன்னார்குடி பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    அந்த ஆய்வில் 80 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளர்களாக இருப்பதும், அதற்காக தினமும் 5 மணி நேரம் வரை செலவிடுவதும் கண்டறியப்பட்டது.

    சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படுகிற உளவியல் பிரச்சனைகள் குறித்தும், கற்றல் குறைபாடு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மேலும்,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவை சுவிட்ச் ஆப் ஆகிவிடுவது போலவும், அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் அதன் உயரும் வெப்ப நிலைக்கு தகுந்தவாறு அவை குறிப்பிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடுவது போன்ற தீர்வுகள் ஆய்வில் முன்வைக்கப்பட்டது.

    முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திலகர் பாராட்டினார்.

    • விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக சென்றனர்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைப்பெற்றது.

    மாவட்ட குற்றவியல் நீதிபதி கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்றனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழத்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேளாங்கண்ணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு,

    உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது இந்த பேரணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கண் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் பணி செய்ததாலும், குழந்தைகள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்ததாலும் அவர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    எனவே, குறிப்பிட்ட சில மணி நேரம் ஓய்வு அளித்தால் தான் கண்களை பாதுகாக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, கண் பாது காப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருவாரூர் மாவட்ட தேசிய பசுமை படை, பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மாசில்லா இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் தலைமையில் நடைபெற்றது.

    பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளைகளையும் பாதுகாப்போம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரவி, வசந்த், முன்னாள் கவுன்சிலர் மெய்கண்ட வேல், ஆசிரியர் மனோன்மணி, ராஜ்குமார், சண்முகம், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் காளிதாஸ், ராஜப்பன், விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
    • .மு.க. ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அரசின் சாதனை விளக்க துண்டு பிரசு ரங்களை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் செஞ்சடை நாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ்.தரைக்குடி ஊராட்சி தலைவர் முனிய சாமி, ஆர்.சி.புரம் கிளை செயலாளர் பிரான்சிஸ், கன்னிராஜபுரம் ஊராட்சி செயலாளர் நீதி வேந்தன், தெற்கு நெருப்பியூர் ஊராட்சி செயலாளர் யாகியா கான், வெட்டுக்காடு ஊராட்சி செயலாளர் சண்முகம், சாயல்குடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நாகரத்தினம், மின்னல் கூட்டுறவு அமைப்பு தலைவர் முருகன், கன்னி ராஜபுரம் கண்ணன், முருகன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. மாநாடு
    • விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநாட்டிற்கு பொதுமக்களும், தொண்டர்களும் அணி திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல கட்டமாக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவருகின்ற விதத்தில் யானை மீது நிர்வாகிகள் அமர்ந்தும், குதிரை மீது அமர்ந்தும் பொதுமக்களிடம் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டது. அதுபோன்று கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தலங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தோவாளை மலர் வணிக வளாகத்தில் மாநாட்டிற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் நடைபெற்றது.

    பிரசாரத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து மலர் வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகளிடமும் விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதிப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், நாகர்கோவில் வட்ட செயலாளர் வேலாயுதம் மற்றும் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்துசாமி ராஜேந்திரன், சபரி, முருகன், தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • துண்டு பிரசுரம் வழங்கி மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்வாரிய அதிகாரிகள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மின்சார வாகனங்களை பயன்ப டுத்துவதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்க ளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் அதிக ளுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும், சுற்றுச்சூழ லுக்கு உகந்ததாக இருக்கும்.

    விபத்து க்களின் போது மின்சாரம் தானாக துண்டி க்கப்படும் என்பதால், தீப்பற்றும் வாய்ப்பு இருக்காது. மேலும், பெட்ரோல் கார்களுக்கு இணையான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் மின்சார வாகனங்க ளில் உள்ள பாதகங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம்.
    • பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை இணைந்து போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்படி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது போலி ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் பெறும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். இதில் இந்திராசுந்தரம் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகமது, நிர்வாகிகள் சுரேஷ், சித்ரா, சசூரி சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வர் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் கூறி பிரசாரம் செய்யப்பட்டது.
    • அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஈரோடு ஸ்டோனி பாலம், அண்ணா நகர், சாந்தாங்கருக்கு மற்றும் கிராமடை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    இப்பிரசாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளான இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகங்கள், ஆங்கில வழிக்கல்வி மற்றும் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்து கூறியும்,

    அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை வலியுறுத்தியும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் போன்றவற்றை எடுத்துக்கூறியும் பிரசாரம் செய்யப்பட்டது.

    மேலும் அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

    தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த பிரச்சாரத்தில் ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • மருதங்காவெளி பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள மருதங்காவெளி நடுநிலைப்பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரஸ்வதி, வட்டார கல்வி அலுவலர்கள் ராமசாமி, சிவகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், ஸ்ரீதரன், அன்புராணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×