search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்
    X

    சீர்காழியில் போக்குவரத்து போலீஸ் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்

    • சீர்காழி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வருபவர்களை வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர் இதில் தலைக்கவசம் மற்றும் வாகன காப்பீடு இல்லாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    மேலும் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தில் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

    சீர்காழி நகர்பகுதியில் மட்டும் 150 இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணம் மற்றும் காப்பீடு, தலைக்கவசம் அனியாதவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×