search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harmanpreet Kaur"

    • ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
    • ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

    இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-

    ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.

    நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    • ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்கள் அணுகுமுறையில் நாங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்.
    • பெண்கள் ஐ.பி.எல். மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கபூர் கூறியதாவது:-

    ஆண்கள் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட் டிக்கு பிறகு வீரர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆண்கள் கிரிக்கெட்டில் நாம் பார்த்த திறமை வெளிபாட்டை பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பார்க்கலாம்.

    இது இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும்.

    இது சர்வதேச அரங்குக்கு தயாராகும் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் பல இளம் மற்றும் திறமையான வீராங்கனைகளை இந்தியாவுக்கு கண்டறிய முடியும்.

    நாங்கள் சில காலமாக தாக்குதல் ஆட்டத்தில் விளையாட முயற்சித்து வருகிறோம். ஆக்ரோஷமாக கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று அணி கூட்டங்களில் அடிக்கடி விவாதிப்போம். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்கள் அணுகுமுறையில் நாங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்சர் பட்டேல், முகமது ரிஸ்வான், கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
    • செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.

    அந்த வகையில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மட்டும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரிஸ்வான் கடந்த மாதம் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
    • என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் புதுமுக வீராங்கனைகள் போதுமான ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    சில்கெட்:

    வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி வீராங்கனைகள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 124 அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். வழக்கமாக 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கும் இவர் இன்றைய போட்டியில் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஹர்மன்பிரீத் "எங்கள் பேட்டிங்கின் போது நடுவரிசையில் அணியின் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சித்தோம். அதுதான் எங்களை இன்று பாதித்தது. நிச்சமாக இது துரத்தக்கூடிய இலக்காக தான் இருந்தது.

    ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை. என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் புதுமுக வீராங்கனைகள் போதுமான ஆட்டங்களில் விளையாட வேண்டும். இன்றைய போட்டி மற்றவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.

    அதே நேரத்தில் நாங்கள் எந்த அணியையும் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடியது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்" என்றார்.

    • முதலில் ஆடிய இந்தியா 333 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கேன்டர்பரி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.

    • குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா இடம் பெற்றுள்ளது.
    • இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

    8 அணிகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் குரூப் 'பி' பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா, எஸ் மேக்னா, தனியா சப்னா பாட்டியா (விகீ), யாஸ்திகா பாட்டியா (விகீ), தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், சினே ராணா. காத்திருப்பு: சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ், பூனம் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிதாலி ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். #HarmanpreetKaur #MithaliRaj
    வெலிங்டன்:

    வெஸ்ட்இண்டீசில் கடந்த நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 36 வயதான மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவரை சேர்க்காதது சர்ச்சையாக உருவெடுத்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் இந்த நடவடிக்கையால் அணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதனால் பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதேபோல் இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் மீண்டும் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையாகவில்லை என்றாலும் டெலிவிஷன் வர்ணனையாளர்கள் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ்க்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர்.

    மிதாலி சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த விளக்கத்தில் ‘இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு மண்ணில் எங்களுக்கு இந்த 3 ஆட்டங்கள் தான் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அதிகம் இந்திய சூழ்நிலையில் தான் விளையாட இருக்கிறோம். அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளித்தோம்’ என்றார். #HarmanpreetKaur #MithaliRaj

    மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் பேட்டிங்கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். #Harmanpreetkaur #SmiritiMandhana
    துபாய்:

    மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் பேட்டிங்கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். 6-வது இடத்தில் இருந்து அவர் 3 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்துல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளில் 2-வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    ஸ்மிருதி மந்தனா

    ஜெமிமா ரோட்ரிக்கஸ் 6-வது இடத்துக்கும், ஸ்மிருதி மந்தனா 10-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். #Harmanpreetkaur #SmiritiMandhana
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். #HarmanpreetKaur #WomenWorldT20 #India #NewZealand
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.



    இதில் கயானாவின் புரோவிடென்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ரன்) ஒற்றை இலக்கில் வீழ்ந்து சொதப்பினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.

    இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் அமர்க்களப்படுத்தினார். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவூட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் (45 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்து ரன்மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (103 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட் கீப்பர் கேட்டியிடம் கேட்ச் ஆனார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. நமது வீராங்கனைகள் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.



    அடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் சுசி பேட்ஸ் மட்டும் நிலைத்து நின்று குடைச்சல் கொடுத்தார். மற்ற வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர். அரைசதத்தை கடந்த சுசி பேட்ஸ் 67 ரன்களில் (50 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனதும் ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

    20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்தார். #HarmanpreetKaur #WomenWorldT20 #India
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.



    இதில் கயானாவின் புரோவிடென்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ரன்) இருவரும் சொதப்பினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.

    இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் மிரள வைத்தார். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவூட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் (45 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்து ரன்மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (103 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட் கீப்பர் கேட்டியிடம் கேட்ச் ஆனார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. நமது வீராங்கனைகள் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.   #HarmanpreetKaur #WomenWorldT20 #India
    வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்மன்ப்ரீத் நியமிக்கப்பட்டுள்ளார். #WWT20
    வெஸ்ட் இண்டீஸில் வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    உலகக்கோப்பைக்கான பெண்கள் அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    1. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), 2. ஸ்மிரிதி மந்தனா, 3. மிதாலி ராஜ், 4. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 5. வேதா கிருஷ்ணமூர்த்தி, 6. தீப்தி ஷர்மா, 7. தன்யா பதியா (விக்கெட் கீப்பர்). 8. பூணம் யாதவ், 9. ராதா யாதவ், 10. அனுஜா பாட்டீல், 11. ஏக்தா பிஸ்ட், 12. ஹேம்லதா, 13. மன்சி ஜோஷி, 14. பூஜா வாஸ்ட்ராகர், 15. அருந்ததி ரெட்டி.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    இங்கிலாந்தில் பெண்களுக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சர்ரே ஸ்டார்ஸ் - லங்காஷைர் தண்டர் அணிகள் மோதின. இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் முதன்முறையாக லங்காஷைர் தண்டர் அணிக்காக களம் இறங்கினார்.

    முதலில் பேட்டிங் செய்த சர்ரே ஸ்டார்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்தது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லங்காஷைர் தண்டர் களம் இறங்கியது. லங்காஷைர் தண்டர் 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 13 ரன்கள்தான் தேவைப்பட்டது. போல்டன் 86 ரன்னுடனும், ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனால் லங்காஷைர் தண்டர் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்தனர்.

    ஆனால் 19-வது ஓவரில் போல்டன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லம்ப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இநத ஓவர்ல் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி ஓரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

    கவுர் முதல் பந்தில் ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தில் மற்றொரு வீராங்கனை ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி நான்கு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் இரண்டு ரன்னும், 3-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

    இதனால் கடைசி இரண்டு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஐந்தாவது பந்தை அசால்டாக சிக்சருக்கு தூக்கி கவுர் அணியை வெற்றி பெற வைத்தார். கவுர் 21 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த ஹர்மன்ப்ரீத் ஆட்டத்தை பாராட்டி, அவர் சிக்ஸ் அடித்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    ×