search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women World T20"

    ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா. #WomenT20 #WorldCup
    பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இத்தொடரில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காள தேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 15-ந்தேதி எதிர் கொள்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியாவும்தான் மோதிய 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

    உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்ததில் ‘ஏ’ பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னே எடுக்க முடிந்தது. மழையால் இங்கிலாந்துக்கு 16 ஓவர்களில் 64 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து 3 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா தலா 2 புள்ளியுடன் உள்ளன. இன்றைய ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான்- அயர்லாந்து, ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #WomenT20 #WorldCup
    வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்காள தேசம் - இங்கிலாந்து அணிகள் மோதின.

    இங்கிலாந்து வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் வங்காள தேசம் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை அயஷா ரஹ்மான் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் கிர்ஸ்டி கோர்டோன் அதிகபட்சமாச 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    மழை பெய்ததால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ஓவரில் 64 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து ‘ஏ’ பிரிவில் ஒரு வெற்றியுடன் மூன்று புள்ளிகள் பெற்று முதலிடத்தி் உள்ளது.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #WomenT20 #WorldCup #Ireland #Australia
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது.



    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கிம் காரத் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 31 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 56 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகி விருதையும் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
    பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றன. #ICCWomensWorldT20 #AUSWvPAKW #WIWvBANW
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் (பி பிரிவு) இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. அதன்பின்னர் நள்ளிரவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில்

    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தினால் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, பெத் மூனே ஆகிய இருவரும் தலா 48 ரன்கள் விளாசினர். கேப்டன் மெக் லேனிங் 41 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முன்னணி வீராங்கனைகள் சோபிக்காத நிலையில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிஸ்மா மரூப் 26 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களே சேர்த்தது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.



    இன்று அதிகாலையில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் (ஏ பிரிவு) வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கசேத அணியை வீழ்த்தியது.

    இப்போட்டித் தொடரில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். #ICCWomensWorldT20 #AUSWvPAKW  #WIWvBANW
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். #HarmanpreetKaur #WomenWorldT20 #India #NewZealand
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.



    இதில் கயானாவின் புரோவிடென்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ரன்) ஒற்றை இலக்கில் வீழ்ந்து சொதப்பினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.

    இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் அமர்க்களப்படுத்தினார். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவூட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் (45 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்து ரன்மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (103 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட் கீப்பர் கேட்டியிடம் கேட்ச் ஆனார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. நமது வீராங்கனைகள் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.



    அடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் சுசி பேட்ஸ் மட்டும் நிலைத்து நின்று குடைச்சல் கொடுத்தார். மற்ற வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர். அரைசதத்தை கடந்த சுசி பேட்ஸ் 67 ரன்களில் (50 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனதும் ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

    20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்தார். #HarmanpreetKaur #WomenWorldT20 #India
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.



    இதில் கயானாவின் புரோவிடென்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ரன்) இருவரும் சொதப்பினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.

    இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் மிரள வைத்தார். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவூட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் (45 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்து ரன்மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (103 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட் கீப்பர் கேட்டியிடம் கேட்ச் ஆனார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. நமது வீராங்கனைகள் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.   #HarmanpreetKaur #WomenWorldT20 #India
    ×