search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    • அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன்.

    ராஜ்கோட்:

    3-வது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளத்தன்மை அதிகமாக சுழலுக்கு ஒத்துழைக்காது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காயத்தில் இருந்து மீளாததால் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் விலகி விட்டார். பார்ம் இன்றி தவிக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடமில்லை. இதனால் 3-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்றைய தினம் பயிற்சிக்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜ்கோட் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கப்போவதில்லை. ஆனால் சிறந்த ஆடுகளமாக இருக்கும். பேட்டிங்குக்கு நன்றாக இருக்கும். அதற்காக 700-800 ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. மொத்தத்தில் உயிரோட்டமான ஒரு ஆடுகளமாக இருக்கும். சுழலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அனுபவித்து உற்சாகமாக பந்து வீசுவேன். ரசிகர்களும் சிறந்த ஆட்டத்தை பார்க்கவே விரும்புகிறார்கள். அது தான் முக்கியம்.

    தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அணியில் எனக்கு உறுதியாக இடம் உண்டா? என்பது தெரியாது. ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

    பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதில்லை. ஆனால் இங்கிலாந்தின் 'பாஸ்பால்' என்ற ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை பவுலர்களையும் அதற்கு ஏற்ப தயார்படுத்த வைக்கிறது. சில சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் போது பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடி பற்றி கவலைப்படாமல் அவர்களின் விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கு இங்கிலாந்து வீரர்களின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கிறது. தாக்குதல் பாணியை கடைபிடிக்கிறார்கள். இதனால் அவர்களின் ரன்வேட்டையை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் திட்டமிட வேண்டி உள்ளது. இதுவே போட்டியில் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

    ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

    இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கு கிறது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மந்தனா, யாஸ்திகா, ஹர்லீன் தியோல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் உள்ளனர். அதேசமயம், தொடரை இழந்துள்ள இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற போராடும்.

    • முதலில் ஆடிய இந்தியா 333 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கேன்டர்பரி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 142 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 16.4 ஓவரில் 146 ரன்கள் எடுத்து வென்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெம்ப் அதிரடியாக ஆடி 37 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பவுச்சர் 34 ரன்கள் எடுத்தார்.

    இந்திய பெண்கள் அணி சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். அவர் 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் எடுத்துள்ளார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் டோனி, அசாரூதின் ஆகியோரின் சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
    • இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் புதிய சாதனை பதிவாகி உள்ளது.

    இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை 1990-ம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. அதனையடுத்து 2014-ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் ஒருநாள் தொடர் கைப்பற்றப்பட்டது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் டோனி, அசாரூதின் ஆகியோரின் சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    • இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.
    • கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 260 ரன்கள் என்ற இலக்கினை 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஐந்து விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    ஹார்டிக் பாண்டியா தொடர் நாயகனாகவும், ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்:-

    இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வந்த போது ஒரு அணியாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது. ஆனால் இம்முறை நாங்கள் டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்தில் எங்களது டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் ஹார்டிக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து எங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

    அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது மிக முக்கிய நபராக மாறி உள்ளார். அதே வேளையில் ஹர்த்திக் பாண்டியாவும் தற்போது பந்து வீச்சில் தனது அசத்தலான செயல்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார், ஒரு அணியாக இந்த வெற்றியை பெற்றதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டம் இழக்கும் எங்களது வீக்னஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    ஆனாலும் ஒரு தரமான அணி எப்படி வெற்றியை பெறும் என்பதை இந்திய அணி செய்து காண்பித்துள்ளது. இது நம்முடைய பலம் தான். இந்திய அணியில் தற்போது உள்ள இந்த பலத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம். அதன்படி இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    இதற்கிடையே, 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரின் ஓல்டுடிராப்ட் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், ஆட்ட நாயகன் விருதையும் ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    ஒருநாள் போட்டியின் தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியா கைப்பற்றினார்.

    • இந்திய வீரர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார்.

    பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித்சர்மா 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் ஒரு ரன்னுடன் வெளியேற, கோலி 17 ரன் அடித்தார். சூரியகுமார் யாதவ் 16 ரன்னுக்கு அவுட்டானார்.

    எனினும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டதுடன், இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது. பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பண்ட், சதம் அடித்தார்.

    42 வது ஓவரில் பண்ட் 21 ரன்களை குவித்தார். இந்திய அணி 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்த பண்ட் கடைசிவரை களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 7 ரன் அடித்து களத்தில் நின்றார்.

    இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார்.
    • இந்தியா சார்பில் பாண்ட்யா 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்

    .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார். பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது

    • பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    • கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

    மான்செஸ்டர்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. பும்ராவின் அபாரமான பந்து வீச்சும், ரோகித்சர்மாவின் அதிரடியான பேட்டிங்காலும் எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.

    ஆனால் 2-வது போட்டியில் இந்திய வீரர்கள் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 247 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 146 ரன் வித்தியாசத்தில் சுருண்டு 100 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது.

    இதில் இருந்து மீண்டு இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டயா, ஜடேஜா, ரோகித்சர்மா, தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமாகும்.

    முதல் ஆட்டத்தில் மோசமாக ஆடிய பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அதில் இருந்து மீண்டு 2-வது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வேட்கையில் இங்கிலாந்து அணி உள்ளது.

    கடந்த போட்டியில் இந்தியாவின் சரிவுக்கு வேகப்பந்து வீரர் ரீஸ் டாப்லே காரணமாக இருந்தார். அவர் நாளைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக திகழ்வார்.

    கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் இதுவரை 105 முறை ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 56-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை' ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிசன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டோப்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கோலிங்வுட் வங்காளதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் மிரட்டலான பந்து வீச்சால் இந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டோப்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லாட்ஸ் மைதானத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் 5 விக்கெட்டுகள் மேல் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டேரன் கோஃப் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை டோப்லே முறியடித்துள்ளார்.

    டேரன் கோஃப்

    டேரன் கோஃப்

    இவர் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களில் டோப்லே முதல் இடத்தை பிடித்தார்.

    இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கோலிங்வுட் வங்காளதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். அவரை டோப்லே பின்னுக்கு தள்ளியுள்ளார். இவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வரிசையில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் கிறிஸ் வோக்ஸ் உள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 45, 47 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

    • இங்கிலாந்தின் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • இந்தியா சார்பில் ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

    லார்ட்ஸ்:

    இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி 47 ரன், டேவிட் வில்லே 41 ரன், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா, டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தவான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். விராட் கோலி 16 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 27 ரன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா 29 ரன், ஷமி 23 ரன் எடுத்தனர்.

    இறுதியில், இந்தியா 146 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் தற்போது 1-1என சமனில் உள்ளது. இறுதி மற்றும் 3வது ஒருநாள் போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது.

    ×