search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government hospital"

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.
    • 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும்.

    சென்னை:

    சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் 5,09,664 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 83,430 பேர் துணை சுகாதார நிலையங்களிலும் என மொத்தம் 5,93,094 பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நகர்புறங்களில் செயல்படுத்தும் வகையில் பரிசோதனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

    30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டுபிடிக்க ஸ்டிப் பயன்படுத்துவது போல் சிறுநீரில் இந்த ஸ்டிப்பை போட்டால் ஆல்புமின் அளவை காட்டி விடும்.

    ஆல்புமின் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் செயலிழப்பதாக அர்த்தம். இதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

    சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • சுகாதாரமான முறையில் பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவது மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் உட்பட பலதரப்பட்ட மக்கள் செங்கம் அரசு மருத்து வமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகம் அருகே உள்ள கழிவறையிலிருந்து கழிவு நீர் வெளியேறி ஆய்வகம் வரை தேங்கியுள்ளதாக சமூக ஆர்வலர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரத்த பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு வருபவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அங்கு ஆய்வகத்தின் அருகே கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செங்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார்கள் பொதுமக்கள் கூறும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு செங்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்.

    போதுமான துப்புரவு பணியாளர்களை கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், கழிவறைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் குமாரபாளையம் அரசு மருத்துவமனை பல அளவுகோல்களில் சிறப்பிடம் பெற்று தேசிய தரச்சான்று கிடைக்கப்பெற்றுள்ளது.

    இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-

    குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. இதன் பலனாக தற்போது தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

    மாவட்ட அளவில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அடுத்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு இது கிடைத்துள்ளது.

    இதேபோல் லட்சயா திட்டத்தின் கீழ் மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அறை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் 95 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று, சுகாதார அமைச்சர் சுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனர் கதன்தீப்சிங், லட்சயா திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.

    இந்த விருதுகள் பெற காரணமாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியா ளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தேசிய தரச்சான்று பெற்றதன் பலனாக அதிக படுக்கை வசதிகள், அதிக டாக்டர்கள், அதிக செவிலியர்கள், அதிக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
    • பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.

    இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

    காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.

    மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.

    இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

    உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.

    கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர்‌.
    • தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அறுவை சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர். இதனால் மகப்பேறு பிரிவிற்குள் செருப்புகள் அணிந்து செல்லாத வகையில் மிக பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் மகப்பேறு பிரிவு முன்பு உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி தற்போது மகப்பேறு பிரிவு முன்பு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக மகப்பேறு பிரிவு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு இதனை பார்த்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொசு உற்பத்தி பெருகி பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயமும் நிலவி வருகிறது.

    இது மட்டுமின்றி புதிதாக பிறந்துள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கழிவு நீர் வெளியேறி உள்ளதால் பல்வேறு தொற்று நோய் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பொதுவெளியில் இது போன்ற நிலைபாடு இல்லாத வகையில் அந்தந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மிகவும் பாதுகாப்பாக இருக்க கூடிய மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தை சமூக அலுவலர்கள் கண்டித்து உள்ளனர்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இது போன்ற அவல நிலை வருங்காலங்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பணிமனை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
    • முதல் முறையாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 வயது பெண்மணிக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு வெர்திம்ஸ் ஹிஸ்டெரெக்டமி நுட்பம் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர், இயல் நோய் சங்கம் இணை ந்து கோல்போஸ்கோபி கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பணிமனை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு திண்டு க்கல் மருத்து கல்லூரி முதல்வர் சுகந்தி இராஜ குமாரி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணி ப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மகப்பேறு துறைத்தலைவர் கீதா, சிறப்பு அழைப்பாளர் டாக்டர் ரமணி ராஜேந்திரன், டாக்டர் அமலா தேவி, நிலைய மருத்துவர் புவனேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தனர்.

    கருத்தரங்கில் பல்வேறு மகப்பேறு, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டு கர்ப்பவாய் புற்றுநோய் காரணங்கள், அதைத்தவிர்க்கும் வழிமுறைகள், வருமுன் காப்போம், நோய் கண்டறி தல் மற்றும் நோய்தீர்வு பற்றி சிறப்பாகக் கலந்துரையாடி னார். கருத்தரங்கு மற்றும் பணிமனையில் 100 டாக்டர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

    முதல் முறையாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 வயது பெண்மணிக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு வெர்திம்ஸ் ஹிஸ்டெரெக்டமி நுட்பம் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்பட்டு அப்பெண் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.

    • கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோட்டில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.

    இங்கு புதுச்சேரி மட்டுமின்றி மாநில எல்லை பகுதியான தமிழகத்தை சேர்ந்த வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பிரசவம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் நேற்று காலை ராஜீவ்காந் தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்தனர். பின்னர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களை மதியம் 1.30 மணி வரை அழைக்கவில்லை.

    ஆனால் புதுவையை சேர்ந்த கர்ப்பிணிகளை மட் டும் அழைத்து பரிசோதனை செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும், அவர்களது உறவினர்களும் நேற்று மதியம் 1.30 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறி எதிரே 100 அடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஒரு டாக்டர் பணியில் இருக்கும்போது மட்டும் தான் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

    கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போக்குவரத்து பாதிப்பு இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மகளிர் மற்றும் குழந் தைகள் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் நாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதா ன பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 

    • பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபரை போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இக்குடியிருப்பு பகுதிக்கு 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார்.

    அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த அந்த வாலிபர், அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து தாக்கினர்.

    பின்னர் அவரை நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபரை போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அந்த பகுதியினர் அவரை சரிமாரியாக தாக்கினர். இதில் ரத்த காயமடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மீண்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரகளையில் ஈடுபட்ட வாலிபர் பெயர் மனோஜ் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க அறிவுரை
    • பணியாளர்கள் அனைவரும் சரியாக பணிகளை செய்கிறார்களா என ேசாதனை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் சரியாக பணிகளை செய்கிறார் களா என ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை குறித்து நோயா ளிகளிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களும் சுகாதார முறையில் தூய்மையாக வைத்துக் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 25) தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் செவ்வந்தி 2-வதாக கர்ப்பமானார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

    அப்போது செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை நீக்க ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதனால் ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செவ்வந்தி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டித்து இன்று காலை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது செவ்வந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டதும் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம் ஆனால் அவர்கள் ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என கூறினர். ஆபரேசனுக்கு பிறகும் செவ்வந்தி பலியாகியுள்ளார்.

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் 3-வதாக கர்ப்பிணி ஒருவர் பலியாகி உள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

    அவர்களிடம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்
    • அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×