என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ghulam nabi azad"
- காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார்.
- காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " பழமையான கட்சி நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. பயமாகவும் உள்ளது. நீண்டகாலமாக வதந்திகள் உலா வந்தன. ஆனால் காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.
சமீப காலத்தில் கட்சியில் இருந்து விலகிய மிக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவரது விலகல் கடிதத்தை வாசிப்பது வேதனை தருகிறது" என கூறி உள்ளார்.
- குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
- காஷ்மீரில் விரைவில் புதிய கட்சியை தொடங்குகிறார்.
புதுடெல்லி :
காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். பின்னர் டெல்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரது எதிர்கால திட்டம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'நான் விரைவில் காஷ்மீர் செல்ல இருக்கிறேன். அங்கு எனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன். பின்னர் காஷ்மீரில் விரைவில் புதிய கட்சியை தொடங்குவேன். பா.ஜனதாவில் இணையமாட்டேன்' என்று தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகி உள்ளார்.
- குலாம் நபி ஆசாத்தின் மரபணுக்கள் மோடி சார்ந்ததாகி விட்டன.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகி இருப்பது குறித்து அந்தக் கட்சி கருத்து கூறி உள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "காங்கிரஸ் தலைமையால் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டவர், தனது மோசமான தனிப்பட்ட தாக்குதல்களால் அதற்கு துரோகம் செய்துள்ளார். இது அவரது உண்மையான தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. குலாம் நபி ஆசாத்தின் மரபணுக்கள் மோடி சார்ந்ததாகி விட்டன " என தெரிவித்தார்.
கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கருத்து தெரிவிக்கையில், " உங்கள் மாநிலங்களவை பதவி முடிவுக்கு வந்த உடனேயே நீங்கள் அமைதி இழந்து விட்டீர்கள். உங்களால் பதவியின்றி ஒரு வினாடி கூட இருக்க முடியாது" என சாடி உள்ளார்.
- குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
- மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
ஸ்ரீநகர் :
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
காங்கிரசில் இருந்து விலகியவர்களில் முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
இன்னொரு மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், "குலாம் நபி ஆசாத் பிரச்சினைகளை கட்சிக்குள் பேசி தீர்த்து கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு கிடைத்த மரியாதை, வேறெங்கும் கிடைக்காது" என கருத்து தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
- இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் குலாம் நபிக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-ஷ்மீரைச் சேர்ந்த பாஜக முக்கியக் குழு உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், தேவேந்திர சிங் ராணா, ஜம்முகாஷ்மீர் பாஜக மேலிட பொறுப்பாளர் தருண் சுக் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்ததும் அந்த யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத்.
- ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்த சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவராக உள்ள ஆசாத் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அபபதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குலாம் நபி ஆசாத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
- தலைவர்கள் பலரும் குலாம் நபி ஆசாத், விரைவில் குணமடைய தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் நேற்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், "இன்று எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்" என கூறி உள்ளார்.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் குலாம் நபி ஆசாத், விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 7-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. மாநில கட்சிகளுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் பல்வேறு முடிவுகளையும் எடுக்க அந்த கட்சி தயாராகி வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்நபி ஆசாத் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தால் கூட மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால் காங்கிரஸ் ஆதரிக்கும். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரக் கூடாது என்பதே எங்கள் இலக்கு.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனது கருத்தில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு உரிமை கோராது என்பதில் உண்மையில்லை. நாட்டிலே மிகவும் பழமையான பெரிய கட்சி காங்கிரஸ் ஆகும்.
5 ஆண்டுகள் ஆட்சி செய்ய கூடிய கட்சி என்பதால் மிகப் பெரிய கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இன்னும் தேர்தல் முடிவுகள் வராத நிலையில் கூட்டணியில் இது குறித்து சண்டை போட்டு கொள்ளக் கூடாது. பிரதமர் பதவி கருத் தொற்றுமை அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். 273 இடங்கள் வரை கைப்பற்றும். கடந்த காலங்களிலும் வென்று இருக்கிறோம். இனி மேலும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும்.
பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன. மன்மோகன்சிங், வாஜ்பாய் ஆகியோர் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததற்கு காரணம் எம்.பி.க்கள் அதிகமாக இருந்தனர். எனவே நிலையான அரசு அமைவதற்கு காங்கிரஸ் கட்சிதான் தேர்வு.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
இதை கருத்தில் கொண்டே மாநில கட்சிகளின் தலைவர்களை 23-ந்தேதி டெல்லிக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் இரவு தனது வீட்டில் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் விருந்து கொடுக்க உள்ளார். அவர் விருந்து கொடுக்கும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்.
அந்த தேர்தல் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க சோனியா வியூகம் வகுத்துள்ளார். சோனியாவின் ஒரே குறிக்கோள், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பா.ஜனதா ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பது தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகியுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக ஏற்க தயார் என்று சோனியா இறங்கி வந்துள்ளார். இதை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 23-ந்தேதி மாலை டெல்லிக்கு வந்து விடுமாறும் அவர் மாநில கட்சி தலைவர்களை அழைத்து வருகிறார்.
தேவைப்பட்டால் 23-ந் தேதி இரவே மாநில கட்சித் தலைவவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து பேசவும் சோனியா திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக சோனியா இத்தகைய முயற்சிகளை நேரடியாக மேற்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் அவரது அதிரடி வியூகத்துக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சோனியாவின் இந்த அதிரடி வியூகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் சிம்லாவில் அளித்த பேட்டி வருமாறு:-
நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த விஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரசில் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மூவரையும் அழைத்து வரும் பொறுப்பு கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் மாயாவதி, அகிலேஷ், மம்தாவுடன் பேசி வருகிறார்கள். இதன் மூலம் மாநில கட்சிகள் பா.ஜனதா பக்கம் போவது தடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்தன. இந்த இரு கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பலமாக கூட்டணி அமைத்து பாஜகவுடன் மோதும் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
எனினும், தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்ட சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர்.
இந்த முடிவு காங்கிரஸ் பக்கம் இவ்விரு கட்சிகளும் பரிவு காட்டுவதைப்போல் தோன்றியது. அதற்கேற்ப, கடைசி நேரத்தில் இந்த கூட்டணிக்குள் காங்கிரசுக்கும் இடம் கிடைக்கலாம் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அவசர கூட்டம் இன்று லக்னோ நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத்,
‘பாஜகவை தோற்கடிப்பதற்காக அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்க தயார் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஆனால், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களுக்குள் மட்டும் ஒரு கூட்டணியை அமைத்துகொண்டு கதவை சாத்திக் கொண்டனர். அதனால், நாங்கள் யாரையும் வற்புறுத்த முடியாது.
எனவே, வரும் தேர்தலில் தனியாகவே பாஜகவை வீழ்த்த நாங்கள் தயாராகி விட்டோம். உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். எங்களுடன் இணைந்து பாஜகவை வீழ்த்த நினைக்கும் மதச்சார்பற்ற கட்சிகளை வரவேற்போம்’ என குறிப்பிட்டார்.
கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றதுபோல் காங்கிரஸ் வரும் தேர்தலிலும் முதலிடத்தை பிடிக்கும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு கூடுதலான இடங்களை நாங்கள் பிடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். #Congresscontest #80seatsofUP #LokSabhaelections #GhulamNabiAzad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்