search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punjab national bank fraud"

    பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #NiravModiExtradition #LondonCourt #Congress #GhulamNabiAzad
    புதுடெல்லி:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.

    இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
    தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

    இதுதொடர்பாக, அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, நிரவ் மோடி லண்டன் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ்மோடியை கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதே பாஜகதான். தற்போது அவர்கள் தான் அவரை திரும்பி கொண்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர்.  தேர்தல் முடிந்ததும் நிரவ் மோடியை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என தெரிவித்தார். #NiravModiExtradition #LondonCourt  #Congress  #GhulamNabiAzad
    வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி, தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.934 கோடியை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #PNBFraudCase #MoneyTransferred
    மும்பை:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிரிட்டனில் உள்ள நிரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்தும், புதிய ஆதாரங்கள் குறித்தும் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.



    இதில் நிரவ் மோடி, தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.934 கோடியினை, வெளிநாட்டில் இருந்து பராமரிக்கப்படும் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரூ.934 கோடியில், ரூ.560 கோடி நிரவ் மோடியின் மற்றொரு வங்கிக்கணக்கிற்கும், ரூ.174 கோடியை அவரது தந்தை தீபக் மோடியின் கணக்கிலும், ரூ.200 கோடியை மனைவி அமியின் வங்கிக்கணக்கிலும் போட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NiravModi #PNBFraudCase #MoneyTransferred
    அரசியல் காரணங்களால் என்னை சிக்க வைத்து விட்டனர் என்று வங்கி மோசடி மன்னன் மெகுல் சோக்சி கூறியுள்ளார். #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi

    புதுடெல்லி:

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக நிரவ்மோடி, அவரது உறவினர் மொகுல் சோக்சி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர்.

    அதில், மெகுல் சோக்சி தற்போது ஆன்டிகுவா நாட்டில் இருக்கிறார். அந்த நாட்டின் குடியுரிமை ஏற்கனவே அவருக்கு உள்ளது. அதை வைத்து அங்கு தங்கி இருக்கிறார்.

    அங்கிருந்து முதல் முதலாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் 50 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். நான் எந்த கிரிமினல் குற்றத்திலும் ஈடுபட்டது இல்லை.

    வியாபார நிறுவனங்கள் நடத்தினால் சில வர்த்தக பிரச்சினைகள் எழுவது வழக்கம் தான். ஆனால், நான் மோசடி எதுவும் செய்யவில்லை.

    எங்கள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் கிளை நிறுவனங்கள் மற்றும் பிரான்சிசிஸ் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

    இவ்வளவு காலமும் நாங்கள் நல்ல பெயர் எடுத்து இருக்கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் 150 விருதுகள் கிடைத்துள்ளன.

    ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்று இருக்கிறோம். எங்கள் மீது யாரும் புகார் கூறியது இல்லை.

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தக தொடர்புகள் வைத்து இருக்கிறோம். அந்த வி‌ஷயத்தில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை.

     


    ஏனென்றால், கணக்கு வழக்கு, மற்ற விவரங்களை அதிகாரிகள் தான் பார்த்து கொண்டனர். அதில் ஏதோ தவறுகள் நடந்திருக்கலாம். அதை மோசடி என்று கருத முடியாது.

    ஆனால், அரசியல் காரணங்களால் எங்களை சிக்க வைத்து விட்டார்கள். இந்தியாவில் பல ஆயிரம் கோடிக்கு நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம். இவ்வாறு பெரிய அளவில் முதலீடு இருக்கும் போது நாங்கள் குற்றங்கள் செய்து மாட்டி கொள்வோமா?

    அப்படி நடந்தால் எங்களுடைய சொத்துக்களுக்குதானே இழப்பு ஏற்படும். நாங்கள் திட்டமிட்டு மோசடி செய்தது போல் காட்டுகிறார்கள். அவ்வாறு மோசடி செய்திருந்தால் ஏன் இவ்வளவு முதலீடுகளை இந்தியாவில் செய்ய போகிறோம்?

    நான் வெளிநாட்டுக்கு தப்பி வரவில்லை. எங்கள் மீது புகார் கொடுப்பதற்கு முன்பாகவே நான் வெளி நாடு வந்து விட்டேன். எனது இருதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு வந்தேன்.

    இப்போதுகூட என்னால் வெளியூர் பயணம் செய்ய முடியாது. எனவேதான் இந்தியாவுக்கு செல்ல முடியவில்லை.

    மேலும் இப்போது எனது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். நான் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

    இந்தியாவுக்கு சென்றால் என்னை கைது செய்து ஜெயிலில் அடைப்பார்கள். அங்கு எனது உயிருக்கு ஆபத்து எற்படலாம்.

    ஏற்கனவே இந்தியாவில் கூட்டமாக சேர்ந்து மனிதனை அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனக்கும் அதுபோல் நேரிடலாம். ஜெயிலில் சக கைதிகளே மற்ற கைதிகளை அடித்து கொல்லும் சம்பவமும் நடக்கிறது.

    அதே போல் என்னையும் பெரிய கிரிமினல் குற்றவாளிகள் ஜெயிலில் வைத்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    எனவேதான் இந்தியா வரவில்லை. இந்தியாவில் எனது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நிறுவன கணக்கு, வழக்குகள் எல்லாவற்றையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். நான் இந்தியா வந்தால் செயல்பட முடியாது.

    அதே நேரத்தில் ஆன்டிகுவா நாட்டில் இருக்கும் நான் இங்கு சந்தோ‌ஷமாக இருப்பதாக கருத முடியாது. பல வேதனைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    என்னை மோசடிக்காரன் போல் சித்தரித்து இருப்பதும், டி.வி.களில் என்னை மையமாக வைத்து விவாதங்கள் நடத்துவதும் வேதனையாக இருக்கிறது. இவை எல்லாம் ஒரு மனித உரிமை மீறல் செயல்.

    இவவாறு அவர் கூறினார். #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi

    வங்கிக்கடன் மோசடி குற்றவாளி நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு முறைப்படி கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி :

    மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு முறைப்படி கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த தகவலை வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

    நிரவ் மோடியை ஒப்படைப்பதற்கான சிறப்பு கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ள மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக அவர் கூறினார். 
    ×