search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் எதிரொலி- ஜம்மு காஷ்மீர் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை
    X

    அமித்ஷா   குலாம்நபி ஆசாத்

    காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் எதிரொலி- ஜம்மு காஷ்மீர் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

    • ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
    • இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் குலாம் நபிக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-ஷ்மீரைச் சேர்ந்த பாஜக முக்கியக் குழு உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், தேவேந்திர சிங் ராணா, ஜம்முகாஷ்மீர் பாஜக மேலிட பொறுப்பாளர் தருண் சுக் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்ததும் அந்த யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×