search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது: உமர் அப்துல்லா
    X

    காங்கிரஸ் நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது: உமர் அப்துல்லா

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார்.
    • காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " பழமையான கட்சி நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. பயமாகவும் உள்ளது. நீண்டகாலமாக வதந்திகள் உலா வந்தன. ஆனால் காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    சமீப காலத்தில் கட்சியில் இருந்து விலகிய மிக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவரது விலகல் கடிதத்தை வாசிப்பது வேதனை தருகிறது" என கூறி உள்ளார்.

    Next Story
    ×