search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest"

    • சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்க ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்குள்ள வனப்பகுதியில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி ரோட்டை கடக்கும். அப்போது யானைகள் ரோட்டோரம் உள்ள மரம், செடி, கொடிகளை பறித்து தின்பது வழக்கம்.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் என்ற இடத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் 2 குட்டிகளுடன் சாலையோ ரம் நடந்து வந்தது. குட்டிகள் நடுவில் நடந்து வர இருபுறமும் இரு யானைகள் பாதுகாப்புடன் அழைத்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டனர். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, வன ப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உலா வருகின்றன. வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால் வாகனங்களை விட்டு கீழே இறங்கி போட்டோவோ, வீடி யோக்கள் எடுக்க முயற்சிக்க கூடாது. யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.

    • வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது.
    • வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது. கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் "வறட்சி நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் உணவு, தண்ணீரைத் தேடிக் கொண்டு ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.அப்போது அவை வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றது. இதனால் வனவிலங்குகள் படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை இழந்து பரிதாபமாக உயிரிழந்தும் வருகின்றன.

    அதன் இறப்பின் காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.அலட்சியத்துடன் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் வன விலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருவரும் சிந்திப்பதில்லை. நமது ஆரோக்கியத்தை காப்பாற்றும் வனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடவுள்தான்.இயற்கை மற்றும் வனத்தை பாதுகாக்கும் வனவிலங்குகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    எனவே வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர். இதற்கிடையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில் மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
    • அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகத்துக்குட் பட்ட எண்ணமங்கலம், கோவிலூர், புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரது பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறைக்கும் ,பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை யினர், சிறப்பு போலீஸ் சப்- இனஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற னர்.

    அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும். இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.

    மேலும் அவர் யார் மற்று ம் எந்த பகுதியை சேர்ந்தவர் அவர் எப்படி அந்த பகுதிக்கு வந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும்.
    • காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிதர்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை தற்போது காட்டுக்குள் இருந்து அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டு யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.

    எனவே அவற்றின் நடமா ட்டத்தை பொதுமக்களால் சரிவர கணிக்க முடியவில்லை. இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கூடலூர் பகுதியில் அதிநவீன கேமிராக்களுடன் கூடிய எச்சரிக்கை கோபுரங்களை அமைப்பது என வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதன்ஒருபகுதியாக அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கருதப்படும் முக்கட்டி, நெலாக்கோட்டை, கோட்டாடு உள்பட 18 பகுதிகளில் அதிநவீன காமிராக்களுடன் எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பிதர்காடு வனச்சரக அதிகாரி ரவி கூறுகையில்,

    ஊரைஒட்டிய காட்டுப்பகுதியில் எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கேமிரா, சிம்கார்டு மற்றும் சைரன் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.

    எச்சரிக்கை கோபுரத்தில் உள்ள தானியங்கி கேமிரா மூலம் நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும். அவை உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும். இதனால் பொதுமக்கள் சுதாரித்து கொண்டு தப்பி பிழைக்கலாம். வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளார். 

    • வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது பர்கூர் மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் வனக்குட்டைகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தேங்கி இருப்பதால் தாகத்தை தீர்க்க அந்த தண்ணீரை பருகி செல்கின்றது.

    ஆனால் யானை மட்டும் அவ்வப்போது சாலைகளில் குறுக்கே சென்று இடம் பெயர்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை. வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதி தாமரைக்கரை சாலையில் ஒற்றை காட்டுயானை அங்கும், இங்குமாய் உலா வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது பார்த்து அமைதியாக ரசித்து செல்ல வேண்டுமே தவிர அதனை துன்புறுத்தும் வகையில் கூச்சலிடுவது, வாகனத்தை விட்டு கீழே இறங்கி சென்று படம் எடுப்பது கூடாது.

    இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்றும், மிகுந்த எச்சரிக்கையோடு வனப்பகுதியை கடக்க வேண்டும் என்று வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • கூண்டில் சிக்கிய புலியை கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புலி சிக்கியதை தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விவசாய தோட்டங்கள் இருக்கும் இடத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அதன்பேரில் புலி நடமாட்டம் காணப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்தனர். கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சுல்தான் பத்தேரி அருகே உள்ள கோளரட்டுகுன்று மூலம்காவு பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை புலி சிக்கியது.

    புலி சிக்கிய அந்த கூண்டுக்குள் ஆடு ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடிப்பதற்கு முயன்றபோது கூண்டுக்குள் புலி சிக்கியது. இது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய புலியை பார்த்தனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'கூண்டில் சிக்கிய புலியை கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புலி ஆரோக்கியமாக இருந்தால் காட்டுக்குள் விடப்படும். காயம் ஏற்பட்டிருந்தால் சுல்தான் பத்தேரியில் உள்ள கால்நடை நோய் தடுப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

    புலி சிக்கியதை தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதைபோல் வடக்கு வயநாடு வனச்சரகத்திற்குட்பட்ட திருநெல்லி பகுதியில் மற்றொரு புலி அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதனை பிடிக்கவும் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    • நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.

    கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.

    மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.

    முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.

    கடமான்

    அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஸ்டீபன்ராஜ், (30), முத்துராஜ் மகன் ராஜாசிங் (27), தங்கத்துரை மகன் ரவிக்குமார் (27), குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த முவின் (40) உள்பட சிலர் பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கடமானை வேட்டை யாடி கறியை வெட்டி பங்கு போட்டதும், மீதி இறைச்சியை காரில் எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து ரவிக்குமார், ராஜாசிங் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் தலையணை தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் தலையணை சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். வனத்துறை அதிகாரிகள் சென்ற ஜீப்புகளை யும் அவர்கள் மறித்துள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்

    இது குறித்து வனத்துறை அளித்த தகவலின் பேரில் பாதுகாப்புக்கு களக்காடு போலீசார் விரைந்து சென்றனர். இதையொட்டி தலையணை மூடப்பட்டது. மாலை வரை தலையணை திறக்கப்பட வில்லை. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தலையணைக்கு வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இதில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ், முவின் உள்ளிட்ட கும்பலை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜாசிங் புதுமாப்பிள்ளை ஆவார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்ட கடமான் வயிற்றில் குட்டி இருந்துள்ளது. அதனை கொடூரமான முறையில் கீறி வெளியே எடுத்த கும்பல் கடமானின் பாகங்களுடன் குட்டியின் உடலையும் கிணற்றில் வீசிய நிலையில் போலீசில் சிக்கி உள்ளனர்.

    • வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது

    உடுமலை:

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஈட்டி,சந்தனம், வெள்வெல்,வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. அது தவிர வனச்சரகங்களை வாழ்விடமாக கொண்டு யானை, புலி,சிறுத்தை, காட்டெருமை,கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்குக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.

    ஆனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விடுவதுடன் அங்கு வளர்ந்துள்ள மரங்கள், புற்கள், செடிகள் உள்ளிட்டவை காய்ந்து விடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப் பகுதிக்கு வந்து விடுகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து அமராவதி அணை அடைக்கலம் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தின் போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அமராவதி அணைக்கு வந்த வண்ணம் இருந்தன.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.அத்துடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் வன விலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் வாய்ப்பு உள்ளது.

    ஆனாலும் பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் மட்டுமே வனப்பகுதி முழுமையாக பசுமைக்கு திரும்பும். வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையும் நிவர்த்தி ஆகும்.அப்போதுதான் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

    • வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி சுற்றி திரிகிறது.
    • வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி பங்களாப்புதூர் வழியாக எருமைக்குட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டப்பகுதியில் விளை நிலங்கள் வழியாக சுற்றி திரிகிறது.

    இந்த தகவலறிந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் தற்போது யானையை கண்காணித்து ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்டவாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் சாலையில் நிற்பதும், கரும்புலோடு ஏற்றி வரும் லாரியை மறித்து கரும்புகளை ருசிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. யானைகள் சாலை நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்டம் ஆனது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்றது.

    இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள மரண பாறையில் 3 நாள் சிக்கித் தவித்த மயிலை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடலுக்குள் மரண பாறை ஒன்று உள்ளது. பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான இந்த மரண பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் அந்த மயிலை படம் பிடித்ததோடு மட்டுமின்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலிபன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், அர்ஜுனன், வனக்காவலர் ஜோயல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் ஒரு குழுவாக அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை சுமார் 1 மணிக்கு கடலில் அமைந்து உள்ள மரணப்பாறையில் சிக்கிய அந்த மயிலை நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர்.அதன்பின்னர் அந்த மயிலை பாதுகாப்பான வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    ×