என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கடல் நடுவில் அமைந்துள்ள மரண பாறையில் 3 நாள் சிக்கித் தவித்த மயில்
Byமாலை மலர்24 May 2022 5:25 AM GMT (Updated: 24 May 2022 5:25 AM GMT)
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள மரண பாறையில் 3 நாள் சிக்கித் தவித்த மயிலை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடலுக்குள் மரண பாறை ஒன்று உள்ளது. பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான இந்த மரண பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் அந்த மயிலை படம் பிடித்ததோடு மட்டுமின்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலிபன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், அர்ஜுனன், வனக்காவலர் ஜோயல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் ஒரு குழுவாக அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் இன்று அதிகாலை சுமார் 1 மணிக்கு கடலில் அமைந்து உள்ள மரணப்பாறையில் சிக்கிய அந்த மயிலை நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர்.அதன்பின்னர் அந்த மயிலை பாதுகாப்பான வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X