search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fined"

    கடை உரிமையாளரை தாக்கி நகைபறித்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது 52). இவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி செல்வராசு வழக்கம்போல் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு போலீஸ்காரர், காரில் அமர்ந்திருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களை கூப்பிடுகிறார் என அழைத்துள்ளார்.

    இதையடுத்து செல்வராசு அங்கு சென்றபோது, காருக்குள் அமர்ந்திருந்த அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வலுக்கட்டாயமாக செல்வராசை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்சென்று திருட்டு நகையை வாங்கியதாக கூறி, அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு விடுவித்தார்கள்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராசு, தன்னிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன், மனுதாரர் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட செல்வராசுக்கு அரசு இழப்பீடாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அந்த தொகையை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து வழங்க வேண்டும் என்றும், மேலும் 3 பேர் மீதும் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதில் மன்னர்மன்னன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டராகவும், சிவராஜ் நாகப்பட்டினம் மாவட்டம் கீழவேளூர் இன்ஸ்பெக்டராகவும், ராஜவேலு அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TNGovt #NationalGreenTribunal
    சென்னை:

    சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.

    இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.

    பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

    எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal
    கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். #Dengu
    திருவாரூர்:

    திருவாரூர் காட்டுக்கார தெரு, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நகர் பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.

    அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    மேலும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பள்ளி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொது வெளியில் கொட்ட வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengu
    காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

    மாவட்ட கலெக்டர் பொன்னையா குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் பகுதியில் கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதத்தை கலெக்டர் பொன்னையா விதித்தார். மேலும் அப்பகுதியில் இருந்த பொருட்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.

    இதேபோல் ரெயில்வே குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். இதில் ஒரு வீட்டின் தொட்டியில் கொசு உற்பத்தியாகும் ஆதாரம் காணப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டில் நடந்த டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா செங்கல்பட்டு பகுதியில் அதிரடி ஆய்வு செய்தார்.

    முதலில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது அங்கு குப்பைகள், மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தாலுக்கா அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    இதில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்ட செவிலியர் குடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம், போலீஸ் குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், தாலுக்கா போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம், வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் விதித்தார்.

    இந்த அபராத தொகையை சொந்த பணத்தில் ஒவ்வொரு அரசு துறையும் கட்ட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் சேராமலும், பிளாஸ்டிக், ரப்பர்,தேங்காய் ஓடுகள் போன்றவற்றை தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்கில் சிக்கிய பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த ஆய்வின் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, கமி‌ஷனர் மாரிச்செல்வி, சுகாதாரத்துறை அதிகாரி, சித்ரா சேனா மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உடன் சென்றனர்.
    திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். #DengueFever
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் சுகாதார குழுவினர் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் , பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று டெங்கு ஆய்வு நடத்தி வருகிறார். இதில் சுகாதாரமற்ற முறையிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருக்கும் வீடு- கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நகரில் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவாரூர் மேலவடம்போக்கித் தெரு, தென்றல் நகர், காகித காரத்தெரு உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது மேலவடம்போக்கித் தெருவில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ 35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இதேபோல் நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ. 15 ஆயிரம் அபராதமும் கலெக்டர் விதித்து உத்தரவிட்டார்.

    இதுபற்றி கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க 24 மணி நேரமும் சுகாதார துறையினர், மருத்துவ குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DengueFever
    டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #DenguFever
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

    தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

    ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
    சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. #ChennaiCitybus
    சென்னை:

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகளை, 673-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கி வருகிறது.

    9.88 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி, ஏறத்தாழ 37 லட்சம் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்காற்றி வருகிறது.

    சாதாரண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப்பட்டதன் பயனாக, பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போர் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகப்பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜூலை மாதத்தில் 3,575 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,67,900ம், ஆகஸ்ட் மாதத்தில் 4,082 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.6,74,650-ம் வசூலிக்கப்பட்டது.

    செப்டம்பர் மாதத்தில் 3,700 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.6,78,250-ம் ஆக மொத்தம் 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். #ChennaiCitybus
    கடற்கரையில் குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.

    மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.

    அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
    எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen #SriLankanCourt
    ராமேசுவரம்:

    இலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இலங்கை அரசு இயற்றிய சட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படாது போன்ற கடுமையான சரத்துகள் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் முதன்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம்- சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ந் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

    8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

    விசாரணையின் முடிவில் 8 மீனவர்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து கல்பெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவுதி அரசு அறிவித்துள்ளது. #SaudiArabiaGovt #OnlineSatire
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டின் புதிய மன்னராக முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் கடும் நடவடிக்கைக்கும் தண்டனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.

    இதற்கு மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணையதளங்கள் வழியாக கேலி, கிண்டல் மற்றும் விமர்சனங்கள் என்னும் போர்வையில் நையாண்டித்தனமான தகவல்களை பரப்பும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.


    இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 3 மில்லியன் ரியால் (சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும்” என கூறப்பட்டு உள்ளது.  #SaudiArabiaGovt #OnlineSatire
    மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாத 16 பேருக்கு அபராதம் விதித்தனர்.

    ராயபுரம்:

    சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்கு வரத்து அலுவலர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா, சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    எண்ணூர் விரைவுச் சாலை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 38 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாத 16 பேருக்கு அபராதம் விதித்தனர்.

    ×