search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fined"

    • வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
    • தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார்.

    தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது.

    ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது டாக்டர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் லின் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவத்தில் டாக்டரின் இடுப்பு எலும்பும் முறிந்து விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.

    இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என டாக்டர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு என்று கூறப்படுகிறது.

    • சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
    • சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல இருசக்கர வாகன ஓட்டி செல்பவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

    காளப்பட்டி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று நடந்த வாகன தணிக்கையில், ெஹல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து 1 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். பின்னர், அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    இது குறித்து மாநகரபோலீஸ் கமிஷனர்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் 90 சத வீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். ஆனால் 10 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை.

    சாலை விதிகளை கடைபிடிப்பதன்மு க்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் 15 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 400 போலீசார், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை அழைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். வாரம் ஒருமுறை வெவ்வேறு நாட்களில் இதுபோன்ற சிறப்புத் தணிக்கை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2,543 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்த 1,282 பேரில், 937 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 345 பேரை எச்சரித்து அனுப்பி உள்ளோம். மொத்தம் 3,875 பேருக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர்.
    • பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான பழைய இரும்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று பழைய இரும்பு, பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கடையில் சேர்த்து பின்னர் புதிய இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வருகிறார்கள். அப்படி அனுப்பும் இரும்பு பொருட்களை எடை போடும் பகுதிக்கு, கடைகளில் இருந்து வாகனங்களில் இரும்பு கடை உரிமையாளர்கள் எடுத்துச் செல்வார்கள்.

    இந்நிலையில் இவ்வாறு இரும்பு பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை, எடை போடும் நிறுவனத்திற்கு சற்று முன்பாக நின்று கொண்டு வணிகவரித்துறை அதிகாரிகள் மடக்கி பிடிக்கிறார்கள். பின்னர் முறையான பில் உள்ளதா? எவ்வளவு எடை உள்ளது? என்று கேட்டும், ஏதாவது ஒரு காரணத்தை கூறியும் பணம் பறிக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். மேலும் அதிக அளவில் அபராதமும் விதித்து வருகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்த நிலையில், இரும்பு கடைகளின் அருகே நின்று அபராதம் விதித்து வரும் சம்பவத்தால், தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளி விட்டதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வணிக வரித்துறை அதிகாரிகள், லாரியை மறித்தனர். பின்னர், பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.

    அப்போது பின்னால் வந்த வாகன உரிமையாளர், பொருட்களுக்கு பில் தன்னிடம் இருப்பதாகவும், எடை போட தான் பொருட்களை கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பதாக கூறினர். அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர் அதை செலுத்த மறுத்ததுடன் மற்ற இரும்பு கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கும் இதுபற்றி தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் பேசினர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. இதை அடுத்து அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் ரூ.1.5 லட்சம் அபராதம் கட்டியே தீர வேண்டும் என்று கூறிய அதிகாரிகள், அபராத பணத்தை கட்டினால் தான் வாகனத்தை விடுவிப்போம் என்றும் கூறினார். தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய வியாபாரிகள், அபராதத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டனர். இதை அடுத்து வாகனத்தை விடுவித்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    சாலையில் செல்லும்போது வாகனங்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு முறையான பில் உள்ளதா, எவ்வளவு பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் குறிப்பாக பழைய இரும்பு கடைக்கும், எடை போடும் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று கொண்டு அதிகாரிகள் வேண்டுமென்றே வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் செய்வது இரும்பு வியாபாரிகளை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே விதிகளை மீறும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரும்பு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார்.
    • நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

    சென்னை:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் கேசவன். அண்ணாசாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 19-ந்தேதி காலை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் டீ குடித்தபடி சிகரெட் புகைத்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கேசவனிடம் புகை பிடித்ததை கண்டித்தார்.

    மேலும் 'நான் போலீஸ் உயர் அதிகாரி'பொது இடத்தில் நின்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் சிகரெட் பிடிக்கலாமா? தபால் நிலையம் முன்பு சிகரெட் பிடித்ததால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அபராத தொகையை கட்டவில்லை என்றால், கைது செய்வேன் என்று மிரட்டினார். மேலும் கேசவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயன்றார். இதனால் பயந்து போன கேசவன் அபராதத்தை நான் கட்டிவிடுகிறேன் என்று கூறி, அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.25 ஆயிரத்தை எடுத்து போலீஸ் போல் மிரட்டிய வாலிபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர் பணத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதனை வெளியில் சொன்னால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்து கேசவன் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் தன்னை மிரட்டி பணம் பெற்றது போலீஸ் அதிகாரி என்று நினைத்து இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவன் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    அப்போது கேசவனிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பறித்து சென்றது நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான டான்ஸ் ஸ்டூவர்ட் (32) என்பது தெரிந்தது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, சிகரெட் புகைத்த கேசவனை மிரட்டி அவர் ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றது உறுதியானது. இதையடுத்து டான்ஸ் ஸ்டூவர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் சரக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
    • டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சரக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த 2021-ம் ஆண்டு தலைவாசல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செந்தில் குமார் மற்றும் வினோத் ஆகியோர் தங்களது மருந்து கடைகளில், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததும், பொதுமக்களுக்கு மருந்துகளுக்கான உரிய ரசீதுகள் வழங்காததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் மருந்துகள் தர கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி செந்தில்குமாருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், வினோத்துக்கு ரூ.60 ஆயிரமும் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு அருண்குமார் உத்தரவிட்டார்.

    வாகனங்களை அதிவேகமாக ஓட்டிவந்த உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.68 ஆயிரத்து ஐந்நூறு வசூலானது.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் வாகன சோதனை நேற்று நடந்தது. இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், லீலாவதி ஆகியோர் இணைந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிவந்த உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.68 ஆயிரத்து ஐந்நூறு வசூலானது.
    தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
    மானாமதுரை:

    மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் மானாமதுரை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். கடந்த 17-ந் தேதி காலை 11.10 மணிக்கு விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதிக்கு சவாரிக்கு சென்று உள்ளார். அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து அவருடைய செல்போனுக்கு இ-சலான் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதைபார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவர் முருகன் கூறிய தாவது:- சிவகங்கை மாவட்டத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் விசாரிக்காமல், சோதனையிடாமல் அபராதம் விதித்துவருகின்றனர். இதனால் தான் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ ஓட்டும் போது தலைக்கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    19 ஆம்னி பஸ்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.47 ஆயிரத்து 500 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்துள்ள குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி அருகே தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், தரணிதர், ராஜ்குமார் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 19 வெளிமாநில ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட பஸ்களில் பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தனர். மேலும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறி அதிக முகப்பு விளக்குகள் பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 19 ஆம்னி பஸ்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.47 ஆயிரத்து 500 அபராத தொகை வசூலிக்கப்பட்டது. அதன்பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களை அதிகாரிகள் விடுவித்தனர்.
    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #RRvCSK #MSDhoni
    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.



    ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    இந்தப் போட்டியில் டோனி 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #RRvCSK #MSDhoni

    அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார். #Google #EuropeanAuthorities
    பிரசல்ஸ்:

    அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு நேற்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார். ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

    கூகுள் நிறுவனம் ஆன்-லைன் வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது. கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது.

    பின்னர் அவர்களிடம் கூகுளில் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வெளியிட மிகவும் லாபகரமான இடம் ஒதுக்குவதற்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.அதோடு தனது போட்டி இணையதளங்களில் ஏதாவது தேடு விளம்பரங்கள் வெளியானால், மாற்றம் செய்வதற்கு முன்பு கூகுளிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது என்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியன் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
    வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo #TaxFraud #Football
    மாட்ரிட்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார். #CristianoRonaldo #TaxFraud  #Football
    கொடைகானலில் சுற்றுலா பயணியிடம் ரூ.2000 லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
    திண்டுக்கல்:

    கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.

    ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.

    இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.

    தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
    ×