search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Market"

    • நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
    • சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தினசரி காய்கறி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்கு றிச்சி பகுதியைச் சேர்ந்த சடையம்பட்டு, மட்டிகை குறிச்சி, மல்லிகைபாடி, பொட்டியம், மாயம்பாடி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இதனை கள்ளக்குறிச்சி மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் வாங்கிச் செல்வது வழக்கம்.

    தீபாவளி பண்டிகை யை ஒட்டி விவசாயிகள் வெங்காயம், தக்காளி, கத்தரி க்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட சுமார் 17 டன் காய்கறிகளை 140 விவசாயிகள் விற்பனை க்காக கொண்டு வந்தனர். இதனை கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உழவர் சந்தையில் வழக்கமாக 8 முதல் 10 டன் காய்கறி மட்டுமே விற்ப னை நடைபெறும் நிலை யில் தீபாவளி பண்டிகையை யொட்டி சுமார் 17 டன் காய்கறிகள் சுமார் ரூ. 8 லட்சத்திற்கு வியாபாரம் நடை பெற்றதாக கூறப்படு கிறது.

    • உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் வீதியில், போதிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த சிறிய அளவிலான மழைக்கு கூட தாங்காமல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.குண்டும், குழியுமான ரோட்டில் பல இடங்களில் குளம் போல், மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.வளாகத்தில், குறைந்த அளவே கடைகள் உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வளாகத்தில் தரையில் வைத்தே காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் காய்கறிகள் மண், சேறு என பாதிப்பதோடு, வளாகத்திற்குள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உழவர் சந்தை ரோட்டில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் குண்டும், குழியுமான ரோட்டை சரி செய்யவும், உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காமலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • கடைகளின் கீழ்பகுதியில் உள்ள தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
    • காய்கறிகள் வாங்க வரும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை உள்பகுதியில் உடுமலை மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விற்பனை செய்யும் கடைகளின் கீழ்பகுதியில் உள்ள தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் காய்கறிகள் வாங்க வரும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் உழவர் சந்தை முன்புறம் சாக்கடை கால்வாய் இல்லாததால் மழை பெய்து மழை நீர் காம்பவுண்ட் சுவரை ஒட்டி தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அந்த நீர் மேற்கு பகுதியில் வழிந்து செல்வதற்கு வழி இல்லாததால் ெரயில்வே கேட் செல்லும் ரோட்டில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே உழவர் சந்தை முன்புறம் மழை நீர் தேங்காமல் வடிகால் ஏற்படுத்தவும் உட்பகுதியில் தளங்களை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
    • வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.

    இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் பஸ்கள் அந்த வழியாக இயக்கப்படாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. பின்னர் பல முறை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள் போதிய ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது.

    இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் மார்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பேரூராட்சிக்கு கிடைத்து வரும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பழங்குடியின மக்களும் இங்கு உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சரிடம், கடை இழந்து பாதிப்புக்கு ள்ளாகும் வியாபாரிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

    மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்க ளிடம், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதி அளித்து விட்டு, இது குறித்து அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனை செய்வதற்காக கோத்தகிரி பேரூராட்சி விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். 

    • உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் வயல்வெளி பகுதியில் விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

    தென்காசி:

    உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் வயல்வெளி பகுதியில் விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கிருஷ்ணகுமார் அறிவுரைப்படி தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

    செங்கோட்டை வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் இப்ராஹிம் வரவேற்றார். இந்த முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும், அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல் பற்றியும் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் விளக்கி கூறினார்.

    மேலும் உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி விளக்கி கூறப்பட்டது. தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.


    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் , வியாபாரிகள் எடைக்கல் தராசு பயன்படுத்தி வருவதால் மின்னணு தராசு வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையினை ஏற்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் இன்று காலை உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று மின்னணு தராசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள், வியாபாரிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • ராஜபாளையத்தில் மாலைநேர உழவர் சந்தை நடத்தப்படுகிறது.
    • மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 1999-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர் சந்தை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும் நுகர்வோருக்கு தரமான, பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் வழங்குவது ஆகும்.

    2022-23-ம் ஆண்டு–க்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் மாலை நேர உழவர் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அழுகக்கூடிய பொருட்கள் தவிர பிற வேளாண் பொருட்களான தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.

    இத்தகைய விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக சந்தைகளில் விற்பனை செய்யும்பொழுது விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிப்பதோடு நுகர்வோர்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை நேரங்களில் செயல்படும் உழவர் சந்தைகள் தற்போது விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோர் வருகை அதிகமுள்ள ராஜபாளையம் உழவர்சந்தையில் மாலை நேர சந்தை தொடங்கப்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெல்லம், காளான், நாட்டு முட்டை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேர சந்தைகளில் பங்கேற்க விரும்பும் தகுதியான விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் அலுவலகம் (04562- 242601) அல்லது சந்தை நிர்வாக அலுவலர் , ராஜபாளையம் உழவர் சந்தை (8610067536) தொடர்பு கொள்ளலாம்.

    பொது மக்கள் தரமான அரிசி, பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மாலை நேர உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
    • உழவா் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில், அமைக்கப்பட்டுள்ள மாலை நேர உழவா் சந்தையை மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இந்த மாலை நேர உழவா் சந்தையில் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக உருவாக்கப்பட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், இதர உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாலை நேர உழவா் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.இங்கு உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், வெல்லம், காளான், நாட்டுக் கோழி முட்டை, மகளிா் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் போன்ற பொருள்கள் விற்பனை செய்யப்படும்.

    ஊட்டி உழவா் சந்தையில் மாலை வேளையில் கடை வைக்க விருப்பமுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தங்களது விருப்ப மனுவை வேளாண் துணை இயக்குநரிடமோ அல்லது ஊட்டி உழவா் சந்தை நிா்வாக அலுவலரிடமோ சமா்ப்பிக்கலாம்.இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வேளாண் வணிக துணை இயக்குநா் சோபியா, ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன், நகா்மன்ற உறுப்பினரும் தி.மு.க. நகர செயலாளருமான ஜாா்ஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • திருப்பத்தூரில் மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.
    • வேளாண் அலுவலர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக இந்த உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை செயல்பட்டு வருகின்றன. உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதுமின்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் தங்களது விளைநிலங்களில் இருந்து விளைந்த பொருட்களை கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றர்.

    மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் உழவர் சந்தை மாலை நேர உழவர் சந்தையாக மாற்றப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகிறது.

    இந்த உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தையில் களத்தி அய்யனார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பால விநாயகர் மகளிர் சுய உதவி குழு, பண்ணை மகளிர் சுய உதவி குழுவினர் கடை அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய், சிறு தானியம் மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நாட்டுக்கோழி முட்டை, காளான் வத்தல், வடகம் மற்றும் மூலிகை பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    உழவர் சந்தை திறப்பு விழாவில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாலை நேர உழவர் சந்தைக்கு நுகர்வோர்கள் அனைவரும் வருகை புரிந்து பயன்பெறுமாறு வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுரேஷ் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் வணிகம் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை வகித்தார்.

    வேளாண் அலுவலர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார். வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி, புவனேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர்கள் காந்தி, ராகவன், காஜா, நாகராஜ், ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் 60 கடைகளை அகற்றிவிட்டு, புதிய உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை உழவர் சந்தை அமைக்க வேளாண் வணிகத்துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும், அதை கண்டித்து பேரூராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் பரவியது.

    இதையொட்டி அங்கு முன் எச்சரிக்கையாக ஊட்டி துணை சூப்பிரண்டுகள் செந்தில் குமார், யசோதா ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன், ரமேஷ் உள்பட 50 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் தலைவர், செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு, வியாபாரிகள் பாதிக்காத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் மன்ற கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் முடியும் வரை அலுவலகம் முன்பு வியாபாரிகள் காத்திருந்தனர்.

    தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உறுப்பினர்கள் கூறும்போது, உழவர் சந்தைக்கு இடம் வழங்கும் தீர்மானம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இதை ஏற்று சுமார் 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர். தொடர் போராட்டம் இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புதிய உழவர் சந்தை அமைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தாலுகா சங்கம், மாவட்ட, மாநில சங்கங்களின் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    இந்த பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், அப்பகுதியில் உள்ள தங்களது பூர்வீக கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் என்பதால், அதை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே கோத்தர் இன மக்களும் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.
    • விசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    ஊட்டி:

    கூடலூா் பஸ் நிலையம் அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் கூடிய உழவா் சந்தையை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

    பின்னர் அவர் பேசுகையில், உழவா் சந்தை மூலம் இடைத்தரகா் இல்லாமல் விவசாயிகள் தங்களது பண்ணை காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், அதற்கு சரியான விலையையும் பெறலாம். மேலும், நுகா்வோா் தரமான பொருள்களை வெளிசந்தையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்றாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    மேலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு, இணை பங்குத் தொகையாக ரூ.5 லட்சம் அரசு மானியத்தையும், முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.2.01 லட்சம் மானியமும் வழங்கினாா்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கினாா்.

    தேவாலா பகுதியில் காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட நபா்களுக்ககு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜியலட்சுமி, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • ராஜபாளையம் அருகே உழவர் சந்தையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சியில் செயல்பாடுகளின்றி காணப்படும் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதையடுத்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. இந்த உழவர்சந்தை வளாகத்தில் ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி தளவாய்புரம் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர சட்ட மன்ற உறுப்பினரான நானும், ஒன்றிய சேர்மனும் முயற்சி எடுத்து வருகிறோம். கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது உழவர் சந்தை. அதனை மீண்டும் புதுப்பித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

    அவரது வழியில் தளவாய்புரத்திலுள்ள உழவர் சந்தைக்கு பேவர் பிளாக் தளம், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி யூனியன் சேர்மன் ஒத்துழைப்புடன் உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் தோட்டக்கலை வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி, விற்பனைத்துறை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உதவிப்பொறியாளர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், கிளைச்செயலாளர் தங்கமணி மயிலேறி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×