search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில்   ரூ.8 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
    X

    கள்ளக்குறிச்சி உழவர்சந்தையில் காய்கறி விற்பனை நடைபெறுவதை படத்தில் காணலாம். 

    தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

    • நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
    • சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தினசரி காய்கறி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்கு றிச்சி பகுதியைச் சேர்ந்த சடையம்பட்டு, மட்டிகை குறிச்சி, மல்லிகைபாடி, பொட்டியம், மாயம்பாடி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இதனை கள்ளக்குறிச்சி மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் வாங்கிச் செல்வது வழக்கம்.

    தீபாவளி பண்டிகை யை ஒட்டி விவசாயிகள் வெங்காயம், தக்காளி, கத்தரி க்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட சுமார் 17 டன் காய்கறிகளை 140 விவசாயிகள் விற்பனை க்காக கொண்டு வந்தனர். இதனை கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உழவர் சந்தையில் வழக்கமாக 8 முதல் 10 டன் காய்கறி மட்டுமே விற்ப னை நடைபெறும் நிலை யில் தீபாவளி பண்டிகையை யொட்டி சுமார் 17 டன் காய்கறிகள் சுமார் ரூ. 8 லட்சத்திற்கு வியாபாரம் நடை பெற்றதாக கூறப்படு கிறது.

    Next Story
    ×