search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Market"

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
    • காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வரத்தும் அதிக அளவில் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. அதை முறையாக அகற்றாமல் சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள்,பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்றாட உணவில் காய்கறிகள் கீரைகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக உள்ளதால் காய்கறிகள், கீரைகள் விரைவில் வாடி விடுகின்றது. இதனால் நாள்தோறும் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றோம். ஆனால் காய்கறி கழிவுகளை அகற்றாமல் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் ஒரு பகுதியில் விவசாயிகள் கடை அமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் முழுமையான அளவில் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் சந்தையில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

    எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
    • உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர் சந்தைகள் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதை செயல்படுத்தும் விதமாக இப்போது உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதில் செங்கல்பட்டு உழவர்சந்தைக்கு ரூ.32.10 லட்சம்,வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தைக்கு ரூ.42,72 லட்சம், செங்கம் உழவர் சந்தைக்கு ரூ.32.10 லட்சம், திருச்சி துறையூர் உழவர் சந்தைக்கு ரூ.35 லட்சம், சேலம் எடப்பாடி உழவர் சந்தைக்கு ரூ.43.30 லட்சம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு ரூ.4.06 லட்சம் என 25 உழவர் சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த தொகையை வைத்து அலுவலக அறை புதுப்பித்தல, கழிப்பறை அமைத்தல், மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு நடைபாதை அமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறனர்.
    • மூலிகை கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்கிறார். பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    உடுமலை:

    உடுமலை உழவர் சந்தையில் தினமும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறனர். இந்த நிலையில் துங்காவியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் கிழங்குகளை விற்பனை செய்து வருகிறார். சோற்றுக்கற்றாழை, நாகதாளி, வல்லாரை, கண்டங்கத்திரிக்காய், ஆகாச கிழங்கு வேலிப்படை த்தாங்காய், பிரண்டை, பொதுவெளான், கோவக்காய் உள்ளிட்ட மூலிகை கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்கிறார். பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    • காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.
    • உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடலூர் - சிதம்பரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர். இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் மீண்டும் தாறுமாறாக நிறுத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, சாலையில் பதிக்கப்பட்டுள்ள கயிறை தாண்டி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டனர்.

    இதற்கிடையே காய்கறி வாங்கிக்கொண்டு வெளியே வந்த பொதுமக்கள், தங்கள் வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தாங்கள் இனிமேல் வாகனங்களை தாறுமாறாக நிறுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். அப்போது போலீசார், இனி இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.
    • உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.இவை அனைத்தும் புத்தம் புதிதாய் கிடைப்பதால் பொதுமக்களும் நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்த சூழலில் உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.அதன் வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இட நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள்,விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.தற்போது மழை தொடங்கி உள்ளதால் கழிவுகள் தேங்காமல் தடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் E-NAM செயல்பாடுகள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிட்டங்கியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 4.2 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட விளை பொருட்களை சுத்தமாகவும், தரமாகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். உழவர் சந்தைக்கு வருகை புரிந்த விவசாயிகளிடம் அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்கள், விலை விபரங்கள், வருகை நாட்கள் மற்றும் நுகர்வோர்களிடம் உழவர் சந்தை பயன்கள் குறித்து கலந்துரையாடினார்.

    உழவர் சந்தை அலுவலர்களிடம் காய்கறி விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்து உழவர் சந்தைக்கு கூடுதலான விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

    பின்பு விருதுநகர் விற்பனை குழுவின் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படுத்தப்படும் E-NAM திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடனுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் E-NAM திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளான மின்னணு ஏலஅறை, தரப்பகுப்பாய்வு ஆய்வகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கியில் பொருளீட்டுக் கடனுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் ஆகியவற்றையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்ட ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியாரம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக்காளி செடி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
    • இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக்காளி செடி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தவிர சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் இருந்து தக்காளி ேலாடு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.20 அதிகரித்–துள்ளதால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த பகுதி யாகும். இங்கு ஆண்டு தோறும் மற்ற மாவட்டங் களைவிட பருவகாலங்க ளில் அதிகமழை பொழிவது வழக்கம். எனவே தான் இந்த மாவட்டத் தில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள். 

    இதுபோன்ற விளை பொருட்களை விற்பனை செய்வ தற்காக கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர். விவ சாயிகள் நலன் கருதி கடலூர் திருப்பாதிரி புலியூர் பகுதியில் உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு இரவு நேரத்திலேயே விவசாயிகள் தங்களது விளை பொருட்க ளை கொண்டுவந்து விற்பனை செய்வதுண்டு.

    இதனிடையே மழை காலங்களில் உழவர்சந்தை யில் தண்ணீர் அதிகம் தேங்கியது. இதனை கருத்தில் கொண்டு உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. தனித்தனியாக வியாபாரம் செய்யும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த சந்தையில் பணிகள் முடிந்து கடந்த 12-ந் தேதி திறக்கப் பட்டது. 

    வழக்கமாக இந்த உழவர் சந்தையில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணிவரை செயல்பட்டு வந்தது. தற்போது விவசாயி கள் நலன்கருதி இரவு 8 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் திருநாள்முதல் விவசாயிகள் இரவு 8 மணி வரை வியாபாரம் செய்கின்றனர். கடலூர் நகர் பகுதியை சேர்ந்த மக்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் இரவு 8 மணிக்கு முன்னதாகவே தங்களுக்கு தேவையான காய்கறி களை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    • கோவை மாநகராட்சி உழவர் சந்தையை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டது.
    • 5 மாதங்களுக்கு முன்பாக விற்பனையும் தொடங்கப்பட்டது.

    குனியமுத்தூர்,

    கோவையை அடுத்த குறிச்சி காந்திஜி ரோட்டில் உழவர் சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பல வருடங்களாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கும் நிலையில் உள்ளது. சமீபத்தில் கோவை மாநகராட்சி உழவர் சந்தையை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டது.

    இதனையடுத்து உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. சந்தையில் உள்ள 60 கடைகளுக்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் 5 மாதங்களுக்கு முன்பாக விற்பனையும் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்பட்ட து. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை விட இந்த குறிச்சி காந்திஜி ரோட்டில் அமைந்துள்ள உழவர் சந்தை மிகவும் பரந்து விரிந்த இடம் மட்டுமன்றி வசதியான இடம் ஆகும். எத்தனை லோடு காய்கறிகள் வேண்டுமானாலும் இங்கு இறக்குவதற்கு இடவசதி உள்ளது. ஆனால் இந்த குறிச்சி காந்திஜி ரோடானது மிகவும் குண்டும், குழியுமாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதால், விவசாயிகள் இங்கு வர மறுப்பு தெரிவிக்கின்றனர்.

    சரக்கு வாகனங்கள் கவிழ்ந்துவிடும் அளவுக்கு மோசமான நிலையில் சாலை உள்ளது. எனவே சாலை வசதி செய்து கொடுத்த பின்பு தான் நாங்கள் அங்கு வருவோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த உழவர் சந்தையை மாலை நேரத்தில் செயல்பட வைத்தால் எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த சாலையை சீரமைத்து உழவர் சந்தையை வழக்கம்போல் செயல்பட வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உழவர் சந்தையில் மொத்தம் உள்ள 60 கடைகளில் 30 கடைகளுக்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 30 கடைகளுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் தயாராக உள்ளோம். ஆனால் விவசாயிகள் வர மறுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர், மேயர், துணை மேயர் ஆகியோர் வந்து உழவர் சந்தையை பார்வையிட்டு சென்றனர். மேலும் தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை செய்யப்பட்டது என கூறினர்.

    • வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.

    புதிய உழவர் சந்தை

    நெல்லை மாவட்டத்தில் பாளை மகாராஜாநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி மற்றும் அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனியில் ரூ.50 லட்சம் மதிப்பில் 5-வது உழவர்சந்தை அமைக்க திட்டமிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.

    பணிகள் முடிவு

    மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு, சி.சி.டி.வி. காமிராக்களும் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாரானது.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தையும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவில்லை.

    திறப்பு விழா

    இந்நிலையில் அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். உழவர் சந்தையில் நடந்த விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    இதன்மூலம் ரெட்டியார் பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஓ. 'ஏ', 'பி' காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகைநகர், பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை வாங்கலாம்.

    • சேலம் மாநகரில் 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.
    • இன்று கார்த்திகை மாத சர்வ மஹாளய முழு அமாவாசையை முன்னிட்டு அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

     சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று கார்த்திகை மாத சர்வ மஹாளய முழு அமாவாசையை முன்னிட்டு அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    11 உழவர் சந்தைகளிலும் இன்று விவசாயிகள் 1020 பேர் , காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 238.114 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,298 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.73,26,002 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

    • உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை ெரயில் நிலையம் அருகே அமைந்துள்ள உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டராப் பகுதி விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல் உழவர்சந்தையின் வெளிப்புறம் சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவாசாயிகளுக்கு மிகவும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது .இதுகுறித்து விவசாயிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெரிதும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர் .உடனடி நடவடிக்கை இல்லை என்றால் உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

    ×