search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Location facility"

    • உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை ெரயில் நிலையம் அருகே அமைந்துள்ள உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டராப் பகுதி விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல் உழவர்சந்தையின் வெளிப்புறம் சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவாசாயிகளுக்கு மிகவும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது .இதுகுறித்து விவசாயிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெரிதும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர் .உடனடி நடவடிக்கை இல்லை என்றால் உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

    ×