search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "export"

    • தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
    • பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு

    திருப்பூர்,நவ.21-

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.

    ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.

    எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.

    கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.

    இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.

    இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.

    ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

    அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில்வடகிழக்குபருவ மழை காலம் துவங்கிய நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல ஆயிரக்கக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழைநீரால் சூழப்பட்டதால் உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது

    இதனால் உப்பளத்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்

    தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தை பிடிப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியாகும். வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம் பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் சுமார் 3500 ஏக்கர் அளவில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் சாப்பாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகை உப்பும் சாலை மார்க்கதில் லாரிகள் வழியாக தான் ஏற்றுமதியாகிறது.

    இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாறுதல், ஏற்றுமதி, மூட்டைகள் பிடித்தல் என பல வழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்

    தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பள பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல உப்பள பகுதிக்குள் செல்லும் அனைத்து சாலைகளையும் சேதமடைந்து அனைத்து உப்பள சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ய துவங்கிய உப்பளங்கள் பாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் ஜனவரி வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் உப்பள பகுதிகளில் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்து.

    • 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வு.
    • பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ்கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வரும் அக்டோபர் மாதம் புதிய பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பு ஆண்டு பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், உள்நாட்டு தேவைக்குதான் போதுமானதாக இருக்கும்.எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மூலப்பொருளான பஞ்சை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது நாட்டுக்கு அதிக அளவு அன்னிய செலாவணி கிடைக்கும்.ஆடை உற்பத்தி தொழிலும், இந்த தொழில் சார்ந்த பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது
    • தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.கடந்த 2020 மற்றும் கடந்தாண்டு துவக்கத்தில் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை கிலோ 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு சார்பில், சின்னவெங்காயம் சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

    இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்த நிலையில் கடந்த சீசனில் அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் விளைநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டது.பல மாதங்கள் இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.தற்போது உடுமலை பகுதியில் குறைந்த பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் அறுவடை பணி துவங்கியுள்ளது.

    வியாபாரிகள் தரத்தின் அடிப்படையில், விளைநிலங்களில், கிலோவுக்கு 15 முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காயம் அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. கடந்த சீசனில் இருப்பு வைத்தவர்களும், நிலையான விலை கிடைக்காமல், நஷ்டமடைந்தனர். சாகுபடியை கைவிட்டால், அடுத்த சீசனில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிப்பு உருவாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும்.சாகுபடி பரப்பு, உற்பத்தி அடிப்படையில், அறுவடை சீசனில், சின்னவெங்காயத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் நிலையான விலை நிலவரம் நிலவி விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ. 70 ஆக விலை உயர்ந்துள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன/ இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல்விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டது.

    மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தமாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது.கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து கறி கோழி பண்ணையாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்தனர். இதையடுத்து கறிக்கோழி கொள்முதல் விலை மெல்ல சீராகி வருகிறது. இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம்தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மழை குறைவு,ஆட்கள் பற்றாக்குறை,போன்றவற்றால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை.பண்ணை தொழிலாளர்கள்,வாகன ஓட்டுனர்கள்,சோளம்,ராகி,பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள்,என நேரிடையாகவும்,மறைமுகமாகவும்,பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அண்டை மாநிலங்களில் மழை ,மூலப்பொருட்களின் விலை உயர்வு, மற்றும் தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. சென்ற ஜூலை மாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 66 ரூபாயாக வீழ்ச்சி ஏற்பட்டது.கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ. 80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கறிக்கோழி உற்பத்தியை சுமார் 25 சதவீதம் வரை குறித்தோம். இதையடுத்து விலை மெல்ல சீராகி வருகிறது. இன்றைய கொள்முதல் விலை 91 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில்,கோழித் தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. சென்ற மாதத்தில் மூட்டை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில், தற்போது மூட்டை ரூ. 2700 ஆக விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோள விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம்,போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் வேண்டும்.இதே போல கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ. 70 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன்,லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும்,10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு,மக்காச்சோளம், போன்றவை மகாராஷ்டிரா,மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது மேலும் கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம்,கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது .எனவே அவைகளின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ெரயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் முலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளைக் கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
    • இறக்குமதியில் இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா பாதிப்புக்கு பின் உலகளாவிய ஆயத்த ஆடை இறக்குமதியாளர்கள் சீன சார்பு நிலையை குறைத்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தைக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை சீனா இழந்து வருகிறது.

    சீனாவின் சின்ஜியானில் உற்பத்தியாகும் பருத்தியில் தயாரித்த ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய 2021 முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சீன பருத்தி ஆடை ஏற்றுமதி வேகமாக சரிந்து வருகிறது. இதை சாதகமாக்கி வியட்நாம், வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை வசப்படுத்தி வருகின்றன.

    நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.அதாவது 15.7 சதவீதத்துடன் வியட்நாம் முதலிடமும், 14.4 சதவீதத்துடன் வங்கதேசம் இரண்டாமிடமும் பெற்றுள்ளது. 13.1 சதவீத பங்களிப்புடன் சீனா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அதேநேரம் இந்திய பருத்தி ஆடை ஏற்றுமதி முன்னேற்றமடைந்து வருகிறது. கடந்த ஜனவரி -மே வரை ரூ. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஆடை ரகங்கள் அமெரிக்காவில் இறக்குமதியாகியுள்ளன.

    இது குறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-

    அமெரிக்காவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில், இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம். போட்டி நாடுகளுக்கும் நமக்கும் அமெரிக்காவில் பருத்தி ஆயத்த ஆடைகளுக்கு ஒரே வரி விகிதமே உள்ளது.

    எனவே அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் 15 சதவீத பங்களிப்பை பெற நாம் முயற்சிக்க வேண்டும். ஆண்டுதோறும் 3.5 லட்சம் கோடி மதிப்பிலான செயற்கை இழை ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. நம் நாடு 10 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வருகிறது.தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சந்தை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடை உற்பத்தியாளர்கள் நூற்பாலை, சாய ஆலை என அனைத்து துறையினரும் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டால் மிகப்பெரிய வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சு விலை உயர்வால் கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வந்தது.
    • மழைக்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது.

    திருப்பூர் :

    கோடை மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.பஞ்சு விலை உயர்வால் கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வந்தது. இதன் எதிரொலியாக கடந்த 3 மாதங்களாக வெளிமாநில வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது.

    தமிழகத்தில் ஒசைரி நூல் விலை தற்போது குறையத்துவங்கியுள்ளது. கடந்த 1ந் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. வரும் மாதங்களில் நூல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் மழைக்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது.

    இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூர் நிறுவனங்களுக்கு குளிர் கால ஆடை தயாரிப்பு காலங்களில் மிக குறைந்த அளவே ஆர்டர் கிடைக்கிறது. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் தொடரும் மழையால் ஆர்டர் வருகை மேலும் குறைந்துள்ளது.பருவமழையால் வரும் நாட்களில் ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை மேலும் குறைவது தவிர்க்க முடியாததாகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு பின் அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு பின்திருப்பூரின் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிக ஆர்டர் திருப்பூருக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

     

    • கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கோழி தீவனங்களின் விலை அதிகரித்தது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகையில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் கறிக்கோழி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனையை எதிர்பார்த்திருந்த வேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கோழி தீவனங்களின் விலை அதிகரித்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ. 60 ஆக விலை உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிலோ ரூ.14 ஆக இருந்த மக்காச்சோளம் தற்போது ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.

    வேன், லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம், போன்றவை மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது. மேலும் கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் .மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அவைகளின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரெயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் முலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளைக் கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
    • இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    சீர்காழி:

    சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அரவிந்தன், அரிகிருஷ்ணன், கோபால், ராஜ்குமார், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிமம் வாங்குவது, புதுப்பிப்பதில் உள்ள தேவையற்ற காலதாமத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் ஞானம், இளங்கோ, அக்பர், சுந்தர் பங்கேற்றனர். முடிவில் சரவணன் நன்றிக் கூறினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் எதிர்ப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. #SheepExport #Maharashtra
    மும்பை:

    விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய திகம்பர் ஜெயின் மகாசபா சமிதியின் தலைவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இதைவிட சிறந்த வழிகள் பல இருப்பதாகவும், ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #SheepExport #Maharashtra
    இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தரமற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாம் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு நேற்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை கிண்டியில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.) ஏற்பாடு செய்திருந்த ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

    அப்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு பேசியதாவது:-

    ஏற்றுமதியாளர்களை எப்போதும் என் குடும்பத்தினராகவே கருதுகிறேன். நாம் எந்த வகையில் சேர்ந்து செயல்பட்டால் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

    தற்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 7.6 சதவீதமாக உள்ளது. இது 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் அளவு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும். இதை நான் தீர்க்கதரிசனமாக கூறவில்லை. இதுதான் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை. இதில், உற்பத்திப் பிரிவு, சேவைப் பிரிவு, வேளாண்மைப் பிரிவு, ஏற்றுமதி ஆகியவற்றில் இருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி அமைகிறது.

    ஏற்றுமதியில் தற்போது நாங்கள் புதிய பட்டியல் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதன்படி, எந்த நாட்டுக்கு என்னென்ன ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற விவரங்கள் தரப்படும்.

    விற்பனைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தயாரிப்புகள் அனுப்பப்பட வேண்டும். இதற்காக தனி பருவ இதழை வெளியிட இருக்கிறோம். இந்த பருவ இதழ் அனைத்து ஏற்றுமதியாளருக்கும் அனுப்பப்படும்.

    தரமற்ற பொருட்களை தயாரிக்கவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ வேண்டாம். யார் அதை அனுப்பினாலும், இந்தியாவில் இருந்து தரமற்ற பொருட்கள் வருகின்றன என்றுதான் வெளிநாடுகளில் பேசப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்படும்.

    ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும்.

    வேளாண் உற்பத்தி ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மூலம் பெறப்பட்ட 620 மில்லியன் டன் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடும்.

    காய்கறி, பழம் போன்றவற்றின் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் செயல்பட்டாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிருபர்களுக்கு, மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அளித்த பேட்டி வருமாறு:-

    சென்னையில் முதல்-அமைச்சரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது புதிய தொழில் தொடங்கும் கொள்கைகளை உருவாக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    சென்னையில் 2-ம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

    ஏற்றுமதியில் திருப்பூர், உலக மையமாக விளங்குவதைப் போல, தமிழகத்தில் மேலும் பல உலக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×