search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு ஆடை உற்பத்தி எழுச்சி பெற வாய்ப்பு
    X
    கோப்புபடம்.

    ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு ஆடை உற்பத்தி எழுச்சி பெற வாய்ப்பு

    • பஞ்சு விலை உயர்வால் கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வந்தது.
    • மழைக்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது.

    திருப்பூர் :

    கோடை மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.பஞ்சு விலை உயர்வால் கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வந்தது. இதன் எதிரொலியாக கடந்த 3 மாதங்களாக வெளிமாநில வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது.

    தமிழகத்தில் ஒசைரி நூல் விலை தற்போது குறையத்துவங்கியுள்ளது. கடந்த 1ந் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. வரும் மாதங்களில் நூல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் மழைக்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது.

    இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூர் நிறுவனங்களுக்கு குளிர் கால ஆடை தயாரிப்பு காலங்களில் மிக குறைந்த அளவே ஆர்டர் கிடைக்கிறது. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் தொடரும் மழையால் ஆர்டர் வருகை மேலும் குறைந்துள்ளது.பருவமழையால் வரும் நாட்களில் ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை மேலும் குறைவது தவிர்க்க முடியாததாகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு பின் அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு பின்திருப்பூரின் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிக ஆர்டர் திருப்பூருக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×