search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடு"

    • வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
    • திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

    107-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியர்கள சிலர் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவைதானா ? நமது நாட்டிலேயே திருமணத்தை வைத்துக் கொண்டால், இந்தியாவின் பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்த அது உதவியாக இருக்கும்.

    வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் இந்திய சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வணிக அமைப்புகள் கணித்துள்ளன

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
    • முக்கிய குற்றவாளியான அபுதாகிரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி என்பவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் நடத்திய விசாரணையில் கோவிந்தசாமிக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த புரோஷ்கான் என்பது தெரியவந்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். புரோஷ்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டில் இருந்து 100 பாஸ் போர்ட்டுகள் போலி ஆவணங்கள், மலேசியா சிம்கார்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாடு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புரோஷ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளியான அபுதா கிரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர்.
    • வயிற்று பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் தாலுகா கீழ கோவில் பத்து உடையார் கோயிலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த யுவராஜ், ராமு, சிகாமணி, மணிமாறன் ஆகிய 4 பேர் தோட்ட வேலைக்காக மலேசியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர்.

    ஆனால் அதன் பிறகு ஒரு எண்ணில் இருந்து எங்களுக்கு ஒரு குரல் செய்தி வந்தது.

    அதில் இது போலீஸ்காரர் தொலைபேசி என்றும், எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறி துண்டிக்கப்பட்டது.

    அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.

    இதனால் மன வேதனை அடைந்த அந்த நான்கு பேரின் குடும்பத்தினரும் திரும்பவும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.

    எனவே மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    • தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? போலீசார் விசாரணை
    • உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கான்வென்ட் ஆக்கி விளையை சேர்ந்தவர் மார்க்கோஸ் (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்து உள்ளார்.

    நேற்று மார்க்கோஸ், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று உள்ளார். வெகு நேரமா கியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றனர்.

    அப்போது ஆற்றின் கரை யோரம் அவரது துணிகள் கிடந்துள்ளன. தொடர்ந்து தேடியபோது ஆற்றின் கரையோரம் மார்க்கோஸ் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உடனடியாக மார்த்தா ண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மார்க்கோஸ் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ கோரிக்கை
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    சென்னையில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோர் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்யவேண்டும்.

    தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையிலும் தீப்பெட்டி தொழிலை பேணி காக்கின்ற வகையிலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    • பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
    • வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தமிழகத்தில் இருந்தால் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தாதவர் செலுத்திக் கொள்ள வசதியாக இன்று மற்றும் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவருக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழகத்தில் இருந்தால், அவர்களுக்கு மீதித்தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.வெளிநாடு சென்று வந்தவர்களில் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர் யாராவது உள்ளார்களா என கண்டறியப்பட்டு வருகிறது. அவர்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • கணவரின் வழக்குச் செலவுக்காக வேலைக்குச் சென்ற பெண்ணால் தவிப்புக்குள்ளான 3 குழந்தைகள்
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவரது மனைவி பிரேமி. இவர்களுக்கு ஜோலின், சிசினோ என்ற 2 மகள்களும், ஆரவி என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த 20 ஆண்டுக ளுக்கும் மேலாக ஓமன் நாட்டில், அந்த நாட்டின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தனியார் உணவகத்தில் உதவி மேலாளராக சுரேஷ் பணி புரிந்து வந்தார். அவரது மனைவி பிரேமி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். 3 குழந்தைகளும் ஓமன் நாட்டிலேயே படித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரண மாக சுரேசும் அவரது மனைவியும் வேலையை இழந்து உள்ளனர். இதனால் குடும்பத்துடன் இந்தியா திரும்ப சுரேஷ் திட்டமிட்டார். அப்போது தான் 19 ஆண்டுகளாக பணிசெய்த நிறுவனத்தில் தனக்கான பண பிடிப்பு (பி, எப்) தொகையினை கேட்டு உள்ளார். அதை கொடுக்க நிர்வாகம் மறுத்துஉள்ளது.

    இதனால் அந்தநாட்டின் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.இதில் அவருக்கு ரூ.10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்த சூழ்நிலையில் கொரோனா உச்ச கட்டத்தில் அங்கிருந்து சொந்த நாடு செல்ல குடும்பத்துடன் விமான நிலையம் வந்த சுரேசை நிறுவனத்தில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கில் தொடர்பு படுத்தி இந்தியா செல்ல, ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துஉள்ளது.

    இதனால் 3 குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பிரேமி இந்தியா திரும்பினார்.கன்னியா குமரி வந்த அவர், இது குறித்து கலெக்டர்மற்றும்முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு க்கு மனு அனுப்பி கணவரை இந்தியா அழைத்து வர முயற்சி செய்துஉள்ளார்.

    மேலும் வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் வேலை இல்லாமல் வெளிநாட்டில் தவிக்கும் கணவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 3 குழந்தைகளையும் வயதான தனது மாமியார் பாத்திமா மேரி வசம் ஒப்படைத்து விட்டு அவர் சவுதி நாட்டுக்கு நர்ஸ் வேலைக்கு சென்றுவிட்டார்.

    75 வயதான பார்வை குறைபாடு உள்ள பாத்தி மா மேரி சின்ன முட்ட த்தில் உள்ள தனது இல்ல த்தில் பெட்டி கடை நடத்தி தனது பேரக் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நிரபராதியான தன்னைஇந்தியா கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டு ம் என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சுரேஷ் வெளியிட்டுஉள்ளார்.

    மேலும் வெளிநாட்டில் தவிக்கும் தங்களது தந்தை யை மீட்க வேண்டும் என்று சுரேஷின் குழந்தைகள் மற்றும் அவரது தாய் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தாய், தந்தை வெவ்வேறு நாட்டிலும் குழந்தைகள் குமரியில் வயதான பாட்டியுடன் சிரமபடுவதாலும் அரசு இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

    வெளிநாடுகளில் பாதுகாப்பான பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என ஏஜெண்டுகளுக்கு அறிவுறுத்தினர்.
    மதுரை

    வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கங்கள் சென்னையில்  ஏற்பாடு செய்யப்பட்ட “பாதுகாப்பான இடம்பெயர்வு’’ என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.

    இதில் பங்கேற்க புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்  சென்னை வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று     மதுரையில் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்களால் நடத்தப்படும் திறன் மையங்களில் உள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார். 

    சென்னை மற்றும் மதுரையில் நடந்த கலந்துரையாடலின்போது, அங்கீகரிக்கப்பட்ட முகவ ர்கள் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பான இடம் இடம்பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். 

    மேலும்  அரசுஅங்கீகாரம்  இல்லாமல் சட்ட விரோத மாக செயல்படும் முகவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சிரம ப்படும் இளைஞர்களைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்து றை   ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செய ல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.  

    இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2852 , 5610/1337 மற்றும் மின்னஞ்சல் poechennai1@mea.gov.in . poechennai2@mea.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார் தெரிவித்துள்ளார்.
    வெளிநாடுகளில் பாதுகாப்பான பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என ஏஜெண்டுகளுக்கு அறிவுறுத்தினர்.
    மதுரை

    வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கங்கள் சென்னையில்  ஏற்பாடு செய்யப்பட்ட “பாதுகாப்பான இடம்பெயர்வு’’ என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.

    இதில் பங்கேற்க புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்  சென்னை வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று     மதுரையில் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்களால் நடத்தப்படும் திறன் மையங்களில் உள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார். 

    சென்னை மற்றும் மதுரையில் நடந்த கலந்துரையாடலின்போது, அங்கீகரிக்கப்பட்ட முகவ ர்கள் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பான இடம் இடம்பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். 

    மேலும்  அரசுஅங்கீகாரம்  இல்லாமல் சட்ட விரோத மாக செயல்படும் முகவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சிரம ப்படும் இளைஞர்களைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்து றை   ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செய ல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.  

    இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2852 , 5610/1337 மற்றும் மின்னஞ்சல் poechennai1@mea.gov.in . poechennai2@mea.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்     தெரிவித்துள்ளார்.
    ×