search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்
    X

    சங்க கூட்டம் நடந்தது.

    இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்

    • இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
    • இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    சீர்காழி:

    சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அரவிந்தன், அரிகிருஷ்ணன், கோபால், ராஜ்குமார், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிமம் வாங்குவது, புதுப்பிப்பதில் உள்ள தேவையற்ற காலதாமத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் ஞானம், இளங்கோ, அக்பர், சுந்தர் பங்கேற்றனர். முடிவில் சரவணன் நன்றிக் கூறினார்.

    Next Story
    ×