search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electoral bonds"

    • தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது.
    • யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகளவு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் ரூ. 509 கோடி மதிப்பிலான பத்திரங்களை தமிழ் நாட்டில் ஆளும் தி.மு.க. கட்சிக்கு வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் பத்திரங்கள் வடிவில் நிதி வழங்க முடியும்.

    இது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் எவ்வளவு நிதி பெற்றுள்ளது, அதனை யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ. 1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில் 37 சதவீதம் தொகையை பியூச்சர் கேமிங் நிறுவனம் தி.மு.க. கட்சிக்கு வழங்கி உள்ளது. பியூச்சர் கேமிங் மட்டுமின்றி மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 105 கோடியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ. 14 கோடியும், சன் டி.வி. ரூ. 100 கோடியும் வழங்கி உள்ளது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், அதிமுக தேர்தல் பத்திரம் மூல ரூ.6.05 கோடி நன்கொடை வாங்கியுள்ளது. அதில், 4 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.

    அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார். அதில், அதிமுக ஆட்சி நடைபெற்ற 2019- ம் ஆண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் நிதி அளித்தது தெரிய வந்துள்ளது.

    திமுக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பில் திமுகவுக்கு ரூ.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடியும், சந்திரசேகர் ராவ்-ன் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ரூ.1,322 கோடியும் நிதி பெற்றுள்ளது

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக ரூ.656 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது

    • 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள் தனி தனியாக இருந்தது.

    இதனையடுத்து, உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டை கொள்ளை அடித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
    • தற்போது தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது.

    எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதா அதிகபட்சமாக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,400 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜனதா அதிக நன்கொடை பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மிரட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றன.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் கொள்ளை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்துவிட்டது என்று தொடர்ச்சியாக கூறிவரும் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த இவர்கள் கையில் நாட்டை கொடுக்கப் போகிறீர்களா?. நாட்டு மக்கள் விக்சித் பாரத் (வளர்ந்த நாடு) குறித்து கனவு கண்டு கொண்டிருக்கும்போது, பா.ஜனதா அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை கொள்ளை அடிக்க விரும்புகிறது.

    எங்களது கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜனதாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்க மிரட்டப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. அதற்குப் பதிலாக பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

    பா.ஜனதாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை கொள்ளை அடிக்க முடியாத காரணத்தில், தன்னுடைய தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
    • பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே?

    தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்.

    தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி இது ஒரு மிகப்பெரிய மிரட்டி பணம் பறித்தல் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வாறு யார் எழுதி கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை எங்கே போனது.

    திரிணாமுல் காங்கிரஸ் 1600 கோடி ரூபாய், காங்கிரஸ் 1400 கோடி ரூபாய், பாரத் ராஷ்டிரிய சமிதி 1200 கோடி ரூபாய், பிஜேடி 775 கோடி ரூபாய், திமுக 649 கோடி ரூபாய் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரம் இல்லாமல் பணம் மூலம் நேரடியாக நன்கொடையாக வழங்கும்போது.

    காங்கிரஸ் கட்சியில் 100 ரூபாய் டெபாசிஸ்ட் செய்து, ஆயிரம் ரூபாயை அவர்களுடைய வீட்டில் வைத்திருந்திருந்தனர். இது நீண்ட காலமாக நீடித்தது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நன்கொடையாளர்கள் அளித்த தொகை எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள்தான் இருந்தது.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், திங்கிட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளை சீலிட்ட கவரில் வழங்கிய தேர்தல் ஆணையம், இணைய தளத்தில் பதிவேற்ற நகல் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    • பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.

    தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அது தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

    அதன் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி நன்கொடையாளர்கள் பெயர் மற்றும் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.

    தேர்தல் ஆணையம் அந்த தரவுகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள டாப் 10 நிறுவனங்கள் பெயர் பின்வருமாறு:-

    1. பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் (Future Gaming and Hotel Services PR)- ரூ. 1368 கோடி

    2. மேகா இன்ஜினீயரிங் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரச்சர்ஸ் லிட் (Megha Engineering & Infrastructures Ltd)- ரூ. 966 கோடி

    3. குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிட் (Qwik Supply Chain Pvt Ltd)- ரூ. 410 கோடி

    4. வேதாந்தா லிட் (Vedanta Ltd)- ரூ. 400 கோடி

    5. ஹல்தியா எனர்ஜி லிட் (Haldia Energy Ltd)- ரூ. 377 கோடி

    6. பாரதி குரூப் (Bharti Group)- ரூ. 247 கோடி

    7. எஸ்சல் மைனிங் அண்டு இன்ஸ்ட்ரீஸ் லிட் (Essel Mining & Industries Ltd)- ரூ. 224 கோடி

    8. வெஸ்டர்ன் யூபி பவர் டிரான்ஸ்மிசன் கம்பேனி லிட் (Western UP Power Transmission Company Ltd)- ரூ. 220 கோடி

    9. கேவேந்தர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிட் (Keventer Foodpark Infra Ltd) - ரூ. 195 கோடி

    10. மதன்லால் லிட் (Madanlal Ltd)- ரூ. 185 கோடி

    பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது எனவும், காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. திமுக 639 கோடி ரூபாயும், அதிமுக 6 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.

    பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் ஆகும்.

    • விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
    • ஜனநாயக திருவிழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

    2019 ஏப்ரல் 12-ம் தேதி முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க உச்சநீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு அனுமதி பெற்ற ஒற்றை நிறுவனமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.

    "மார்ச் 12-ம் தேதியன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர்கள் சரியான நேரத்தில் விவரங்களை வழங்கியுள்ளனர். நாங்கள் அதில் உள்ள விவரங்களை முழுமையாக பார்த்துவிட்டு, நேரம்வரும் போது அதுபற்றிய தகவல்களை தெரிவிப்போம்," என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "2024 பாராளுமன்ற தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவோம். ஜனநாயக திருவிழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம்," என்று தெரிவித்தார். 

    • மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு பரிமாற்றம்.
    • பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கும் பணம் வந்துள்ளது. அது வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கவும் உத்தரவிட்டது.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் எஸ்பிஐ காலஅவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உடனடியாக (மார்ச் 12-ந்தேதி) வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    அதன்படி நேற்று தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை எஸ்பிஐ வங்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்னென்ன? என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதில் "2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3,346 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். அதில் 1,609 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டது (பரிமாற்றம்).

    2019 ஏப்ரல் 12-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தமாக 18871 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். 20421 தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்க வழங்கப்பட்டது.

    மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (பணத்திற்குப் பதிலாக பரிமாற்றம்).

    தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பிடிஎஃப் (PDF Files) பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டும் வழங்கப்பட்டுள்ளது.

    187 பத்திரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட பணம் சட்ட விதிமுறைப்படி பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது.
    • பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகளை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது.

    இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகளை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்க 115- நாள்கள் அவகாசம் கேட்ட SBI உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 30 மணி நேரத்தில் வழங்கியிருக்கிறது. அப்படி எதை மறைக்க முற்பட்டது என்பதை மார்ச் 15 ஆம் தேதி வரை காத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். 

    • தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது.
    • தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வாங்கி சமர்ப்பித்துள்ளது.

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஒரே நாளில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வங்கியால் வழங்க முடியும் என நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதை தான் இன்று பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது. மார்ச் 4 ஆம் தேதி எங்களால் அந்த அவகாசத்துக்குள் தரவுகளை வழங்க முடியாது என்று அப்பட்டமாக பொய் சொன்ன SBI நிர்வாகிகள் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    ×