search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி அதிபர் மார்ட்டின்"

    • பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.

    தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அது தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

    அதன் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி நன்கொடையாளர்கள் பெயர் மற்றும் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.

    தேர்தல் ஆணையம் அந்த தரவுகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள டாப் 10 நிறுவனங்கள் பெயர் பின்வருமாறு:-

    1. பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் (Future Gaming and Hotel Services PR)- ரூ. 1368 கோடி

    2. மேகா இன்ஜினீயரிங் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரச்சர்ஸ் லிட் (Megha Engineering & Infrastructures Ltd)- ரூ. 966 கோடி

    3. குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிட் (Qwik Supply Chain Pvt Ltd)- ரூ. 410 கோடி

    4. வேதாந்தா லிட் (Vedanta Ltd)- ரூ. 400 கோடி

    5. ஹல்தியா எனர்ஜி லிட் (Haldia Energy Ltd)- ரூ. 377 கோடி

    6. பாரதி குரூப் (Bharti Group)- ரூ. 247 கோடி

    7. எஸ்சல் மைனிங் அண்டு இன்ஸ்ட்ரீஸ் லிட் (Essel Mining & Industries Ltd)- ரூ. 224 கோடி

    8. வெஸ்டர்ன் யூபி பவர் டிரான்ஸ்மிசன் கம்பேனி லிட் (Western UP Power Transmission Company Ltd)- ரூ. 220 கோடி

    9. கேவேந்தர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிட் (Keventer Foodpark Infra Ltd) - ரூ. 195 கோடி

    10. மதன்லால் லிட் (Madanlal Ltd)- ரூ. 185 கோடி

    பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது எனவும், காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. திமுக 639 கோடி ரூபாயும், அதிமுக 6 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.

    பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் ஆகும்.

    • கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.
    • மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் கேரளாவில் இருந்து 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், யாரும் உள்ளே வராதபடி வீட்டின் நுழைவு வாயிலையும், வீட்டில் உள்ள கதவுகளையும் மூடி விட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்டனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனையிட்டனர். ஒவ்வொரு அறையையும் சில மணி நேரங்களில் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து சோதனை செய்தனர். அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்து கொண்டனர்.

    மார்ட்டின் வீட்டின் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்திற்குள்ளும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    கோவையில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு, மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது சட்டவிரோத பணிபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் அவரது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • 2019-ம் ஆண்டில் மார்ட்டின் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
    • ரூ.258 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த 2019-ம் ஆண்டில் முடக்கியது.

    புதுடெல்லி:

    கோவையைச் சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்த பின் கேரளா, கொல்கத்தாவில் அதிகளவில் லாட்டரி விற்பனைக் கிளைகளை தொடங்கியவர்.

    கடந்த 2019-ம் ஆண்டில் மார்ட்டின் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 72 இடங்களில் நடத்திய சோதனையில், கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைர நகைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே, லாட்டரி தொழிலில் கிடைத்த 910 கோடி ரூபாயை மறைத்து 40க்கு மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்தது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் வாயிலாக அசையும், அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்தது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, 2019ல் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான சொத்துக்கள், 2021ல் ரூ.19.59 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

    இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருடன் தொடர்புடைய ரூ.173.48 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    ×