search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poll Body"

    • காங்கிரஸ் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது.
    • இதன் அர்த்தம், யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21-ந்தேதி) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றோம். புகார் பரிசீலனையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக பிரதமர் தனது பேச்சியில் கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
    • அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அதை நாங்கள் அறிவித்துள்ளோம். முகாமில் உள்ள வாக்காளர்கள் முகாமில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கீழ் தொகுதியில் இருந்து மேல் பகுதிக்கும், உயரத்திலிருந்து தாழ்ந்த பகுதிக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், வாக்குச்சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
    • ஜனநாயக திருவிழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

    2019 ஏப்ரல் 12-ம் தேதி முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க உச்சநீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு அனுமதி பெற்ற ஒற்றை நிறுவனமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.

    "மார்ச் 12-ம் தேதியன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர்கள் சரியான நேரத்தில் விவரங்களை வழங்கியுள்ளனர். நாங்கள் அதில் உள்ள விவரங்களை முழுமையாக பார்த்துவிட்டு, நேரம்வரும் போது அதுபற்றிய தகவல்களை தெரிவிப்போம்," என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "2024 பாராளுமன்ற தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவோம். ஜனநாயக திருவிழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம்," என்று தெரிவித்தார். 

    ×