search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development projects"

    • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.

    அயன்கரிசல்குளத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் மயான சாலை, அசரப்பட்டியில் ரூ.1.99 லட்சம் மதிப்பில் நடக்கும் நூலக கட்டிட பராமரிப்பு பணி, ரூ.2.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.9.578 லட்சம் மதிப்பில் நடக்கும் பட்டத்தரசியம்மன் ஊரணி தூர்வாரும் பணி, தடுப்புச்சுவர், படித்துறை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து இலந்தை குளம், ஆயர்தர்மம், மூவரை வென்றான் உள்ளிட்ட பகுதி களில் அரசின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, செயற்பொறி யாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்தியசங்கர், உதவி பொறியாளர்கள் வள்ளிமையில், ஜெயா, ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
    • மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும்,

    ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலைவாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 10 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதையும், அதே பகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை ப்பள்ளியினையும்,

    ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளதையும், ஊசிமலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்க ப்படவுள்ள இடத்தினையும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளிக்கு செல்வதற்கான சாலையில் கான்கிரீட் தளம் அமை யவுள்ள இடத்தி னையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ ர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை பெற்று வீடு திரும்பியவரிடம் தொலை பேசியில் நலம் விசாரித்து, மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக சோளகனை பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஆகியவற்றை தங்கு தடையின்றி கிடை த்திட நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொ டர்ந்து அரசுபொது த்தேர்வில் 12-ம் வகுப்பில் பர்கூர் அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் பயின்ற மாணவி ஜோதிகா 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.

    தொடர்ந்து பர்கூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், வெண்ணெய் மற்றும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணி, விளக்கு, பூந்தொட்டி உள்ளிட்ட பொரு ட்களையும் பார்வையிட்டார். மேலும் மாட்டின ஆராய்ச்சி நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்புடைய அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்த், இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர்.ராஜசேகர், உதவிபொறியாளர் சிவபிரசாத், பர்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் மலையன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.

    • திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் 148 கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து ஆவுடையார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது. அந்தப் பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அமைச்சர் ஆய்வு

    திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் 148 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. அதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆவுடை யார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், ஆர்.டி.ஓ. புகாரி, தி.மு.க. மாநில வர்த்தகஅணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கமிஷனர் வேலவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சீரான முறையில் தங்குதடையின்றி குடிநீா் வழங்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சோ்க்கும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் இத்தகையை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருப்பூா் மாநகராட்சி பகுதியில் சீரான முறையில் தங்குதடையின்றி குடிநீா் வழங்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள், தூய்மைப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, ஆா்.கோவிந்தராஜ், சி.கோவிந்தசாமி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

    • ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஏ.டி காலனியில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பொங்குபாளையம் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, காளம்பாளையம் என்.எஸ்.பி.ராஜா கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.
    • பணியினை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னே ற்றம் தொடர்பாக அனை த்துத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.

    இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித்துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    தொடர்ந்து வேளா ண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,

    சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை,

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம்,

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்; மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன்,

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித் துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் விரி வாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அவர் கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட த்தின் அனைத்து பகுதிக ளிலும் தடுப்பு நடவ டிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசின் திட்ட ங்கள் அனைத்தும் அனை த்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் தங்களது பணி யினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கலெகக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் (வளர்ச்சி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார்,

    துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோம சுந்தரம், கீழ்பவானி வடிநில கோட்டம் செயற்பொ றியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரகாஷ்,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை உள்பட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக பட்ஜெட்டில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
    • உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயனடைவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.

    தி.மு.க. அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கை யில் தெரிவித்த திட்டமான பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டத்தை 2-வது ஆண்டிலேயே அறிவித்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய செலவுத்திட்டம் ஆகும்.

    அதேபோல் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம். வளர்ச்சி தான் ஒரு தேசத்தை மேம்படுத்துமே தவிர வாய் வார்த்தை அல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொண்டுள்ளார். அவரை பாராட்டுகிறேன். கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அம்மா பட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, கவுன்சிலர் அமுதா சரவணன், நகர துணைத் தலைவர் சரவணன், நகர செயலாளர் ராஜாதேசிங், நிர்வாகிகள் காளியப்பன், பெருமாள், பாலசுப்பிரமணி, சங்கரலிங்கம், குழந்தைவேல், அக்கையா சாமி, விமல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கல்லல் யூனியனில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
    • 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 லட்சம் மதிப்பீட்டில் 3 வளர்ச்சித் திட்ட பணிகள் முடிவுற்றன. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று திட்டப்பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை மேற்கொள்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப டுகிறது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிதாக சமுதாய கூடத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கும் மற்றும் அதிகரம் பள்ளியை நிலை உயர்த்துவதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க புதிதாக ரூ.9.89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பலவான்குடி ஊராட்சி, ஆலத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து எடுத்துரைத்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் உடன டியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் லதா தேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லட்சு மணன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முத்தழகு, சையது அபுதாகிர், ஊராட்சி மன்றத்தலைவர் சரோ ஜாதேவி குமார் (சிராவயல்), அமுதா (கம்பனூர்), சத்திய கலா(பலவான்குடி), வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செழியன், அழகு மீனாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்தல் பணி மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சி யில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22ன் கீழ் காளான் வளர்ப்புக்கூடம் அமைப்பதற்கென ரூ.1 லட்சம் மானியத்தொகை பெற்று சிப்பி காளான் பண்ணை வைத்துள்ள பயனாளியை நேரில் சந்தித்து, திட்டச் செயல் பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து, விற்பனையை மேலும் விரிவுபடுத்து வதற்கென துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறும்படி பயனாளியிடம் கேட்டுக்கொண்டார்.

    மேலும் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் செயல்பாடு கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தரமான முறையில் விரைந்து கட்டிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சிவகங்கையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்திற்கென சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் வருகை புரிந்து அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 400 முதல் 500 பிரசவங்கள் நடை பெற்று, தாய் சேய் நலன் காக்கப்பட்டு வருகிறது.

    தற்போது செயல்பட்டு வரும் தாய் சேய் நல மையக் கட்டிடத்தை தொடர்ந்து, அதனை விரிவுப்படுத்திடும் நோக்கில் அவ்வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தாய் சேய் நலன் கட்டிடம் கட்டுவதற்கென இடம் தேர்வு செய்தல் பணி தொடர்பாகவும் மற்றும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள அவசர விபத்து மற்றும் சிகிச்சை மைய கட்டிடத்திற்கான இடங்கள் தேர்வு செய்தல் பணிகள் தொடர்பாகவும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) செந்தில்குமார், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன் (பொது சுகாதாரம்), அழகுமலை (தோட்டக் கலைத்துறை), சிவகங்கை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.
    • வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.

    குடிமங்கலம் 

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு, மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.

    தொடர்ந்து 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.20,000 மதிப்பீட்டில் தொழில் கடனுதவிக்கான காசோலையையும், 8 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிக்கான காசோலையையும் என மொத்தம் ரூ.70.40 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாதிக் பாட்ஷா, சிவகுருநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது .எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில், ''ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்கிட வேண்டும். முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்ய ப்பன், கனகராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கல்லிடைக்குறிச்சி பேரூர் செயலாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு காட்ட தயாரா? என ராஜேந்திரபாலாஜிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சவால் விடுத்துள்ளார்.
    • புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பொன்விழா மைதானத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார்வேல்முருகன் தலைமை தாங்கினார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் , தலைமை கழக பேச்சாளர் நன்னிலம் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம், அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் வசதி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தற்போது சட்ட மன்ற உறுப்பினரானபோது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம் வட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்ததை பிரித்து மீண்டும் சிவகாசி கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இனிவரும் ஆண்டுகளில் ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராஜபாளையத்திற்கு அரசு பெண்கள் கல்லூரி, எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து அமிழ் ஓட்டல்வரை இணைப்புசாலை அமைத்தல், ராஜபாளையம் தொகுதியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

    ராஜபாளையம் வளர்ச்சிக்கான பணிகள் நடக்காதது போல, பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதற்குமுன் இருந்த எந்தவொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வும் ஒரே ஒரு வளர்ச்சி திட்டமாவது கொண்டுவந்து செயல்படுத்தியதாக அவர் நிரூபிக்க தயாரா? இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். ஆதாரங்களோடு நான் செயல்படுத்திக் கொண்டி ருக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் காட்டத் தயார். அவரால் முடியுமா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் , ஜெயமுருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பா ளர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோ வன் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேலு, துரை கற்பகராஜ், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாணவரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×