search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Review Meeting"

    • தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது.
    • கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படையில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது.

    தென்காசி:

    மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக தென்காசி தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தென்காசி பழனி நாடார், சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது. இதில் 232 குக் கிராமங்கள் உள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 85 வங்கி இல்லா கிராம பகுதிகளில் அனைத்து வங்கிகளின் பி.சி. மற்றும் ஏ.டி.எம். மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

    மேலும் கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படை யில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் மிகவும் பின்தங்கிய பகுதி களில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் மாதம் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளில் நடைபெற்று வரும் கடன் வழங்குவது பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை முன்னோடி வங்கி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.

    • தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கோடை காலத்தை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் , துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பொது மக்களுக்கு சிரமமின்றி குடிநீர் கிடைக்க வேண்டும். கோடை காலங்களிலும் தொய்வின்றி குடிநீர் வழங்குவதற்காக தேவை யான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும், பொது மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கோடை காலத்தை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தொடர்ந்து தூத்துக்குடி கலைஞர் டேங்க், பண்டாரம்பட்டி, மடத்தூர், சுப்பையா பூங்கா, வி.வி.டி. பூங்கா, குருஸ்புரம் மற்றும் ரூரல் (செயின்ட் மேரிஸ் காலனி) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மேயர் ஆய்வு செய்தார்.

    இதில் ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி, மடத்தூர் மற்றும் ரூரல் பகுதிகளில் சில வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வரும் நீரின் அளவும் மிகவும் குறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி களை பார்வையிட்டு குடிநீர் சீராக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    5-வது வாா்டுக்குட்பட்ட அன்னை வேளாங்கன்னி நகா் பகுதியில் உள்ள தெருக்களுக்கு சீரான குடிநீா் கிடைக்கவில்லை என்ற மக்களின் புகாரைத் தொடர்ந்து அங்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் செல்லும் குழாய் பாதையில் தடையாக கற்கள் இருந்ததை கண்டறிந்து அதனை அகற்ற உத்தரவிட்டு இனிமேல் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.

    மேயருடன் மண்டல தலைவர் நிர்மல்ராஜ் , மாநகராட்சி கவுன்சிலர் அந்தோணி மார்ஷலின், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன் ஜாஸ்பர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அந்தோணி சிவக்குமார், டேனி, மார்ஷல், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.
    • பணியினை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னே ற்றம் தொடர்பாக அனை த்துத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.

    இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித்துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    தொடர்ந்து வேளா ண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,

    சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை,

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம்,

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்; மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன்,

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித் துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் விரி வாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அவர் கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட த்தின் அனைத்து பகுதிக ளிலும் தடுப்பு நடவ டிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசின் திட்ட ங்கள் அனைத்தும் அனை த்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் தங்களது பணி யினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கலெகக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் (வளர்ச்சி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார்,

    துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோம சுந்தரம், கீழ்பவானி வடிநில கோட்டம் செயற்பொ றியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரகாஷ்,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை உள்பட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும்,நிலுவையில் உள்ள, தொடங்கப்பட உள்ள பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்

    திட்டங்களைத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் அதனை நிறைவேற்றி முடிப்பது வரை தொடர்வதை உறுதிசெய்யவே ஆய்வுக் கூட்டங்கள் என்ற

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தலின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் எந்த தொய்வும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்கவும், இடையூறுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி அதிகாரி களுக்கும், துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும், ஓப்பந்ததாரர்களிடமும் வலியுறித்தினார்,

    கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரை யண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்காலனி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது
    • நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி உத்தரவிற்கிணங்க, 1.1.2023 தேதியினை தகுதி நாளாகக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முழுமையான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியர்களான துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதுதுல்லா (கூடலூர்), நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), திரு.கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பா தேவி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி),காயத்ரி (கோத்தகிரி), நடேசன் (பந்தலூர்), சித்தராஜ் (கூடலூர்), இந்திரா (குந்தா) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
    • 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில், மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    இதில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழை நீரை சேகரிக்க நடைபெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, அலுவலர்களுடன் இணைந்து, அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு பணிகளான தடுப்பணை கட்டும் பணிகள், குடிமராமத்து செய்யப்பட்ட ஊரணிகள், மழை நீரை உறிஞ்சும் அகழிகள், நீரினை மறுசுழற்சி செய்யும் வடிவமைப்புகள் ஆகியவற்றை மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஜமீர் பகவான், செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நிலுவையில் உள்ள அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • உதவிக் குழுக்கான கடனுதவிக்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி , நாகைமாலி ,பாலாஜி , ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றுது. இக்கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் 2014-2015 முதல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான (பொதுத்துறை நிறுவனங்கள்) உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் , தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் , தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள பத்தி அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் இவ்ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு

    ரூ.8,93,565 லட்சம் தாட்கோ மானிய கடனுதவியுடன், ரூ. 32,44,258 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ. 2.50 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்கான கடனுதவிக்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு சிறப்பு பணி அலுவலர் ராஜா, கூடுதல் கலெக்டர் (வருவாய்)சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சித்திட்டம் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உள்ளதால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் களுக்கான திட்டம் சார்ந்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.  ஆய்வுக்கூட்டத்தில், சமூக நலம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் 1,781 அங்கன்வாடி மையங்களில் 13,365 கார்ப்பிணி பெண்களும் 10,168 பாலூட்டும் தாய்மார்களும் 1,00,322 (0-6 வயது) இணை உணவு பெறும் குழந்தைகளும், 43,897 மதிய உணவு பெறும் குழந்தைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ச்சி நிலையை வயது வாரியாக ஆய்வு செய்ததுடன், அதில் காணை, கோலியனூர், மைலம், திருவெண்ணைநல்லூர் ஆகிய வட்டாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறை பாடுடைய குழந்தை களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். 

    மேலும், கர்ப்பிணி பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை குறித்த ஆய்வில் மரக்காணம் வட்டாரத்தில் ரத்தசோகை உடைய கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உள்ளதால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப் பட்டதுடன், அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பான, சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழ்நிலையில் முன்பருவ கல்வி பயில ஏதுவாக மையங்கள் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தியதுடன், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க இடவசதி உள்ள அனைத்து மையங்களிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டப் பணிகள், ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் சட்டமன்ற பேரவை நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமரன் (பொது) ஜெகதீசன் (வளர்ச்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி) உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சி யர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமார் முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் 3-ம் பரிசும் பெற்றனர்.

    சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி) சிவகாசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்தராஜ் முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சீதாலட்சுமி 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ராம்தாஸ், திருச்சுழி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார், விருதுநகர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ரமணன் ஆகியோருக்கு 3-ம் பரிசும் பெற்றனர்.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவ ணக்குமார் முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் விருதுநகர் வட்ட துணை ஆய்வாளர் சங்கரக்குமார் முதல்பரிசும், காரியாபட்டி வட்ட துணை ஆய்வாளர் ரைகான் 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கபாண்டியன் 3-ம் பரிசும் பெற்றனர்.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் விருதுநகர் நில அளவர் வாசிமலை முதல் பரிசும், சாத்தூர் சார் ஆய்வாளர் நாகவித்யா 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை சார் ஆய்வாளர் முனியராஜ் 3-ம் பரிசும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரம ணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவ லர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×